Thursday, October 31, 2019

யாராவது இருக்கீங்களா?

யாராவது இருக்கீங்களா? ரொம்ப நாள் ஆச்சு ... 

Monday, June 16, 2008

As the wind blows...

An English post. Again. Well, I started this blog off as a english one, so it makes sense to end it like that. doesnt it?

We all have multiple faces. We are different to different people. What we are is defined differently in every equation. To me, dreams, was one such equation. A person who writes poem, a guy who takes on serious stuff, someone who romanticizes love and is willing to believe in its magic.

As said in a previous post, one day you wake up and you know you have changed. Something that formed the core part of that personality has changed. You cannot be the same anymore.
When i can no longer believe in love, when i can no longer write poems, it seems kinda weird to keep writing the same.

Having said that, the blog world has given me a lot of good friends and made me meet some interesting people around the world.

I will no longer be continuing this blog or this gmail id. I can be reached at my yahoo id.

As everything else, It was very beautifull while it lasted... I guess dreams always tend to be that way.. until you wake up

D

Thursday, June 12, 2008

போட்டினு வந்துட்டா...

ஒரு single வீடியோவை பார்த்து தமிழ் கலை உலகமே பதறி போனதாக தகவல். அதனால் நடந்த இரகசிய மீட்டிங்ல இருந்து அந்த வீடியோவை பார்த்த விட்டு வந்து கொண்டு இருந்த சில பிரபலங்களிடம் கேள்வி பதில்..

"இந்த வீடியோவை பார்த்த பின் என்ன நினைக்கறீங்க?"
விஜய்: என்னை பார்த்து தமிழ்நாட்டுலயே இந்த கேள்வியை கேட்ட முதல் ஆள் நீ தான்.. பார்த்தேன்.. கண்ணா... வாழ்க்கை ஒரு சக்கரம். இன்னைக்கு தெலுங்கில எடுத்ததை நாளைக்கு தமிழ்ல எடுப்பேன்..


(வீடியோ பார்த்து வேகமாய் எங்கயோ கிளம்பி கொண்டு இருக்கின்றார் தல)
"தல எங்க போறீங்க?"
அஜீத்: ஒருத்தனுக்கு ஆட தெரியலைனா ஆடி காமிச்சடலாம்... பாட தெரியலனா பாடி காமிச்சடலாம்.. ஒரு வேளை செய்ய தெரியலைனு சொன்னா... செஞ்சும் காமிச்சடலாம்.. ஆனா இதை... அனுப்பி தான் காமிக்கனும்.. அனுப்பறேன்.. மொத்த சென்னையிலும் பின்னால அனுப்பறேன்...

எப்பவும் போல யாரும் கேட்காமயே வந்து பதில் சொல்றார்...
சிம்பு: இதெல்லாம் ஒரு வீடியோவா? இதை காமிக்க ஒரு சிடியா? உங்களுக்கே இல்லை கொஞ்சம் கடியா? நயந்தாராவாச்சும் இருக்கா இதுல ரெடியா?

இவரு தனியாவே பேசிட்டு இருக்காரு.. பக்கத்துல தான் யாரும் காணும்..
தனுஷ்: ஹலோ... என் பேரு தனுஷ். உங்க பேரு பாலய்யாவா? எங்கப்பாவா.. அவரு ஒரு பெரிய டைரக்டரு.. உங்க அப்பா? ஓ அப்படியா... உங்க வீடு எங்க இருக்கு? ஓஹோ.. எப்படி நிறுத்தனீங்க? எங்க மாமா கிட்ட சொல்லி நானும் எடுக்க வைக்கனும்.. அடுத்த படுத்தல..

கண்கள் சிவக்க... மிக மிக கோவமாய் வந்து கொண்டு இருக்கின்றார், தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர்.. புரட்சி கலைஞர்.. விஜயகாந்த்த்த்த்....
கேப்டன்: எனக்கு எடுத்ததுல எல்லாம் வெற்றி கிடைக்கனும்னு தான் எனக்கு விஜயராஜ் அப்படினு எங்கம்மா பேரு வைச்சாங்க. என்னைக்காச்சும் ஒரு நாள் ரஜினிகாந்த் மாதிரி ஆகனும்னு தான் நான் அதை விஜயகாந்த்னு மாத்தி வைச்சேன்.. எனக்கு போட்டியா யாரும் வர முடியாது. இதப்பாருங்க தமிழ்நாட்டுல மொத்தம் ஓடுற ரயிலுங்க எண்ணிக்கை 5842. அதுல இந்த நேரத்துக்கு ஓட வேண்டியது 1765. அதுல நேரத்துக்கு இப்ப சரியா ஓடுறது 547. அதுல நான் இப்போ நிறுத்த போறது 542. மீதி 5 வண்டியில நம்ம நாட்டுக்காக இரவும் பகலும் காவல் நிக்கிற இராணுவ வீரர்கள் இருக்கிறதால, அதை எல்லாம் மட்டும் நிறுத்தமாட்டேன்..
(கண்கள் இன்னும் சிவப்பாக.. பற்களை நற நறவென கடிக்க ஆரம்பிக்கிறார்.. நான் அங்க இருந்து எஸ்கேப் ஆகிறேன்)

அட.. அப்படி என்ன வீடியோ அது?



ஜெய் சந்திரகேசவா!!!!

Friday, June 06, 2008

வயதுக்கு வந்த தருணம்..

மு.கு: இது அந்த மாதிரி பதிவு இல்லை. பெயரை பார்த்து ஏமாறாதீர்கள்

நான் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி இருந்த பொழுது. ஒரு வார விடுமுறைக்கு வீட்டிற்கு சென்ற பொழுது என் தந்தையுடன் சதுரங்கம் (chess) விளையாட நேரிட்டது. ஆரம்பித்து பத்து நிமிடங்களில் நான் ஜெயிக்க போவது எனக்கு தெரிந்து விட்டது. என் தந்தையுடன் விளையாடி பல வருடங்கள் ஆகி இருந்ததும், இதற்கு முன் ஜெயிக்கிற மாதிரி கிட்ட கூட வராததும் நினைவிற்கு வந்தது. லேசான ஆச்சர்யத்துடன், தோற்று போனேன். (நமக்கு பிடித்தவர்களிடம் ஜெயிப்பதை விட தோற்பதே சுகம் தான்)

ஹ்ம்ம்ம்.. தூங்க போகும் முன் ஒரு ரோஜா மொட்டை பார்க்கின்றோம். அடுத்த முறை அதை கவனிக்கும் பொழுது அது மலர்ந்து அழகான ரோஜாவாகி நிற்கின்றது.

வாழ்க்கையில் எப்பவுமே இப்படி தான். ஒரு படியில நின்னுட்டு இருப்போம். திடீர்னு ஒரு நாள் வேறு ஒரு படிக்கு வந்துவிட்டதை உணர்வோம். நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். தாண்டி வந்த படிகளும் அடைந்து விட்ட உயரமும் இன்னும் சற்றே தெளிவாக காட்டும் நமது சுற்றத்தை. பின்னால் திரும்பி பார்த்தால்.. நாம் செய்தது சிலபல சின்ன பிள்ளை தனமாக இருக்கும். இத்தனைக்கும் நல்லா யோசிச்சு செய்வதாக நாம் நினைத்து செய்தது கூட.

காதலும் கூட அப்படி தானோ என்று எனற்கு தோன்றுகின்றது. குழந்தையாக இருந்த பொழுது ரசித்த ரயில் வண்டி பயணங்கள், பெரியவரானதும் சீக்கிரம் போய் சேர்ந்தால் மதி என்றாகும் நிலைமை போல. லேசான அலுப்பு தட்டி விடுகின்றது. அப்படி தோன்றிய பின்னும் முன்ன மாதிரி கவிதை எழுத முடியுமா என்று தெரியலை. சாமிக்கு பூஜை செய்யும் ஒருவன் மனதில், திடீரென இது சாமி இல்லை.. கல் தான் என தோன்றி விட்டால், எப்படி அவனால் வழக்கம் போல முழு மனதுடன் தான் நேற்று வரை செய்ததை எல்லாம் செய்ய முடியும்? காதல் கவிதைகளும் அப்படி தான். இந்த.. காதல் ரசிக்கும் தன்மை போயிடுச்சுனா அந்த சந்தேகம் எப்பவும் இருந்துட்டே இருக்கும். கவிதை எழுத வராது. சிரிப்பு தான் வரும்.



என்னடா சொல்ல வர அப்படினு கேட்பவர்களுக்கு: ஆக நான் சொல்ல வருவது என்னனா, எனக்கு காதல் - கவிதை எழுத கொஞ்ச நாளா வரலை. அதுக்கு தான் இந்த பில்ட் அப்.

இதுக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

Tuesday, June 03, 2008

வெறியும் பற்றும்

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் என்ன வித்தியாசம்? தன்னால மட்டும் தான் முடியும்னு சொன்னா தலைக்கனம். தன்னாலயும் முடியும்னு சொன்னா தன்னம்பிக்கை (சரி.. சரி.. கஜினில பார்த்துட்டீங்க..)

பற்றுக்கும் வெறிக்கும் என்ன வித்தியாசம்?

வெறினா உடனே என்ன நியாபகம் வரும்? ஜாதி வெறி. மத வெறி. கட்சி வெறி.. அது தப்புனு உடனே சொல்லிடறோம். (அதுவே தப்பு இல்லைனு நினைச்சீங்கனா.... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை! சந்தோஷமா இருங்கப்பு) அது போக நிறைய இருக்கு.

மொழி வெறி: இதுவும் தப்பு தாங்க. மொழி என்பது மனதில் தோன்றும் எண்ணங்கள் பிறரை சென்று அடையும் ஒரு வழி. அவ்வளவு தான். தமிழ்ப்பற்று இருக்கலாம். வெறி இருக்க கூடாது! தமிழ் பதிவுல ஆங்கில வார்த்தை போட கூடாது.. தமிழ் சினிமாக்கு தமிழ் பெயர் வைச்சா வரி விலக்கு.. என்னங்கடா காமெடி பன்னறீங்க!!!!! ;)

கலாச்சார, பண்பாட்டு வெறி: ஒரு முறை ஒரு அரசியல்வாதி சொன்னான் கமலை(நடிகர் கமல்) பற்றி ஒரு பேட்டியில். உதட்டுக்கு உதடு முத்தம் கொடுக்கிறது தமிழ் கலாச்சாரம் இல்லை அப்படினு. (தெரியலை. இவன் ஒரு வேலை கை கொடுக்கிறது தான் முத்தம்னு நினைச்சிட்டு இருக்கானோ?). ஜீன்ஸ் போட கூடாது, கதர் போடனும்னு இன்னமும் சொல்லிட்டு திரியற ஆளுங்க இருக்காங்க. தப்புனு சொல்லலை. கலாச்சார பாசம் இருக்கலாம். நீங்க போடாதீங்க. உங்க பொண்ணை தாவணி கட்டி காலேஜ் அனுப்புங்க. அடுத்தவர்களை கட்டாயப்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.

நம்ம மும்பைல காமெடி செய்வாங்க. பார்க்ல காதலர்கள் உட்கார்ந்தா அது இந்திய கலாச்சாரம் இல்லைனு இவனுங்க ரகளை செய்த காலம் உண்டு. ஏன்டா.. பிறந்ததுல இருந்து அங்க தான இருக்க. பாம்பே ரெட்லைட் ஏரியாவை முதல்ல சுத்தம் செய்யறது தான! காதலர்கள் தான் கிடைத்தாங்களா? (திரும்ப எதுவும் செய்ய முடியாதுல.. ஸ்டூடண்ட்ஸ் பவர் மண்ணாங்கட்டி எல்லாம் சும்மா! வெத்து பேச்சு. இந்த லூசு சிம்பு படத்துல தான் பேசிட்டு திரிவான். பார்த்து நம்பிடாதீங்க! உயிரோட நாலு பொண்ணுங்களை எரிச்சப்ப எல்லா காலேஜ் ஸ்டூடண்ட்ஸும் சேர்ந்து கிழிச்சத தான் பார்த்தேன்ல! அட.. சும்மா அமைதி ஊர்வலம் போலாம் வாங்கடானு சொன்னா கூட இஞ்ஜினியரிங் பசங்க எங்க வந்தாங்க!)

உங்க வீட்டுல இருக்கும் வரை நீ உன் கலாச்சாரம்னு சொல்லி கோமணம் கட்டிகிட்டு இரு. We dont care. அடுத்தவங்க எப்படி இருக்கனும்னு நீ சோல்லாத!

1000 வருஷம் முன்னாடி சைவர்களும் வைணவர்களும் அடித்து கொண்டு செத்தார்கள். 500 வருஷம் முன்னாடி சமணர்களை கழுவில் ஏற்றியது சைவமும் வைணவமும். 100 வருஷம் முன்னாடி பொண்ணுங்களை உயிரோட எரிச்சீங்க. (இப்பவும் தான்!). கலாச்சாரம், பண்பாடு என்பது காலத்துக்கு ஏத்த மாதிரி மாற தான் செய்யும்! புரிஞ்சுகோங்க. "மாற்றம் என்பது மானிட தத்துவம்.. மானிட தத்துவம் மகத்துவம் அறிவீர்"... கண்ணதாசன் வரிகள்.(I think so )

தேசிய(இந்திய) வெறி: First, I have to agree i had this for a long time. It took me 3 years staying outside India to cure me out of this. I dont think it has made me less Indian. If anything, now i understand more abt why I am proud to be an Indian. And NO. it doesnt mean I think we are the best, most generous, kind hearted, blah blah blah... greatest culture in the world.

நீங்க காசுக்காக வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வேலை பார்ப்பதை .. Microsoft Runs because of Indians என்றும், தமிழ் மன்னர்கள் மலேசியா மேல எல்லாம் படை எடுத்ததை மறந்து, India never Invaded any country என்றும், முதன் முறையா மதபோதகர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினது நாம தான் என்பதை மறந்து India never aggresively spread its religion என்றும் சொல்லி chain mail அனுப்பினா உண்மையாகாது!

Without knowing the truth and just blindly following something is similar to the 'Faithfullness' trait of a dog. You dont have to be a human to do it. புரிந்து நேசியுங்க. அது தான் மனிதம். அந்த நேசம் வெறியாகாம பாத்துக்கோங்க. கர்ணன் எவ்வளவு தான் நல்லவனா வல்லவனா இருந்தாலும், அதர்மம்னு புரியாம அவன் வைத்திருந்த நட்பு தான் அவனை கொன்றது.

இப்படி சொல்லிட்டே போகலாம். கடவுள்ல இருந்து காதல் வரை எதுல வெறி இருந்தாலும் தப்பு தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

அப்புறம் இன்னும் ஒரு பரவலான அபிப்பராயம்.. இந்த குறிப்பிட்ட ஜாதி/மதம்/மொழி சம்பந்த பட்டவர்கள் அதுல வெறியா இருப்பாங்கனு. Pls dont generalise. இந்த வெறிக்கு மதம் ஜாதி மொழி தேசம் இதெல்லாம் ஒரு சாக்கு தான்.

வெறி என்பது ஒரு நோய். எப்போ உங்க கொள்கைக்காக அடுத்தவங்க கஷ்டபடுவது தப்பே இல்லைனு நினைக்கறீங்களோ (ஏனா உங்க கொள்கை அவ்ளோ உசத்தில :P) அப்போ உங்களுக்கு அந்த நோய் முற்றி விட்டதுனு சொல்லலாம். உன் கொள்கைக்கு நீ உயிரை கொடு. என்னத்தனா பன்னு. அதுக்கு சம்பந்தம் இல்லாதவரை அது எப்போ பாதிக்க ஆரம்பிக்குதோ.. அப்போ அந்த கொள்கை மேல உள்ள உன்னோட பற்று வெறியா மாறுது. அந்த வெறி உன்னையும் உன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் கெடுதல் மட்டுமே செய்ய முடியும்.

அப்ப வித்தியாசம் வெறிக்கும் பற்றுக்கும் புரியுதாங்க? Any 'நச்' one liners?

Wednesday, May 28, 2008

பொம்மை காதல்

மு.கு: கதை கொஞ்சம் நீளமா போயிடுச்சு.. அதுனால எக்ஸ்ட்ரா கல்லெல்லாம் எரியாதீங்க மக்கா!
---------------------------------------------------

இரகசிய கனவுகள் ..ஜல் ஜல்.. என் இமைகளை தழுவுது.. சொல் சொல்... நூறாவது நாளாக ஒரு நிமிஷம் முழுவதாய் பாடி முடித்தும் செல்பேசியை எடுக்கவில்லை அவள். இன்றோடு சரி. இனிமேல் அவளை அழைக்க போவதில்லை என முடிவு செய்தவனாக, மனசு சரியில்லாமல் 7த் கிராஸில் இருக்கும் பார் ஒன்றுக்கு நண்பனையும் வர சொல்லிவிட்டு கிளம்பினேன்.

வருகின்றேன் என சொன்னவனை தேடிக்கொண்டிருந்தன என் கண்கள். அப்பொழுது தான் அந்த சப்தம் கேட்டது.
'ஹார்ப் இருக்கா?'
அட, நமக்கு பிடிச்ச பிராண்ட் என திரும்பி பார்க்க, அவனும் திரும்பி பார்த்தான். 25 வயதுமிக்க இளைஞன். முழுக்கை சட்டை, டை என பக்காவாக உடை அணிந்து இருந்தான்.
ஒரு கணம் கண்கள் சந்தித்துக்கொண்டன.
'வாங்க சார், இந்த டேபிள்ல நான் மட்டும் தான இருக்கேன்.. நீங்களும் வாங்க'
சரி, வருவதாக சொன்னவனை தான் காணோம். 'பார்'இல் மட்டுமே பூக்கும் விநோத நட்பில் ஒன்றாக போகட்டும் என்று அவன் அருகில் சென்று அமர்ந்தேன்.
'ஹாய்.. ஐ ஆம் சூர்யா'
'நான் மதன் சார். ICICI பாங்கில் அக்கவுண்ட் மேனஜராக இருக்கின்றேன். cross cut ப்ராஞ்ச் தான். கண்ணன் டிபார்ட்மண்ட்டல் ஸ்டோர் எதிர்ல..' இப்படியாக அவன் முழு நீள பயோடேட்டாவை உள்ளே ஏத்தி இருந்த சரக்கு வெளியே கொண்டு வந்தது.

திடீரென கேட்டான்.
'காதலிச்சு இருக்கீங்களா சார்'
'ஹ்ம்ம்.. ஆமா...' அவள் என்னோடு பேசி கிட்டதட்ட மூன்று மாதம் ஆகுது. அந்த சோகத்தில் தான் நான் இங்கே வந்திருப்பதை சொன்னேன்.
'என்ன சார் பிரச்சனை உங்களுக்குள்ள'
வெளியாளிடம் அதிகம் சொல்ல விரும்பாமல், சும்மா ஆரம்பித்த சண்டை, ஈகோவில் சிக்கி, காரணமில்லாமல் நீண்டு இப்பொழுது அவள் என்னோடு பேசாமல் இருப்பதும், இனி நானும் அப்படி தான் இருக்க போவதாக எடுத்த முடிவையும் சொன்னேன்.
'அப்படி எல்லாம் விடக்கூடாது சார்.. என்ன இருந்தாலும் அது நம்ம காதல்... நம்ம காதலை நம்மளும் கைவிட்டுட்டா அது அநாதை ஆயிடும்ல..'
'...'
'காதல் கூட குழந்தை மாதிரி தான் சார்.. அது பிறந்து கொஞ்ச காலம், நாம தான் அத கவனமா பார்த்து வளர்க்கனும். விட்டுடோம்னா, அது செத்துடும்.. இல்லை அநாதை ஆயிடும்.. அதே காதல், கொஞ்ச நாள் கழிச்சு, அதை வளர்த்த உங்களையும் உங்க காதலியையும் கையை கெட்டியமா பிடிச்சு சேர்த்து நடக்க வைக்கும்.. ஆனா அதுக்கு நிறைய நாள் ஆகும்...அவ விட்டுட்டு போயிட்டாள் என்று நிங்களும் போயிட்டா?'
'ஹ்ம்ம்..மதன்.. தூங்கிறவங்களை தான் எழுப்ப முடியும்.. தூங்கிறவங்களை போல நடிக்கிறவங்களை எழுப்பவே முடியாது.. காலம் ஆற்ற முடியாது காயம் எதுவும் இல்ல மதன்.. கொஞ்ச நாளுல சரியாகி விடுவேன்..'
'அப்படி இல்லை சூர்யா. இப்போ அப்பா, அம்மா, குழந்தைனு 3 பேர் இருக்கும் ஒரு குடும்பத்தில், குழந்தை இறந்திட்டா, ஒரு 5 வருஷம் கழிச்சு அந்த குடும்பத்தை பார்த்தால், இன்னொரு குழந்தை இருக்கலாம். சிரிச்சிட்டு கூட இருக்கலாம். ஆனா, இழந்த அந்த குழந்தைய நினைச்சு வேதனை அவங்களுக்கு இல்லை. மறந்துட்டாங்கனு சொல்லறது எப்படி மடத்தடமோ, அது தான் காதலுக்கும்... புதைக்கலாம்.. ஆனா அந்த வலி கண்டிப்பா இருக்கும்.. ........நீங்க இன்னும் முயற்சி செய்யனும் சார்'
'அதுவும் சரி தான்'

'....'
சில நிமிட மௌனங்களில் இன்னொரு கிளாஸ் காலி செய்தான்.

'நானும் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் சார்'
'அப்படியா? ம்ம்ம் ....உன் கதைய சொல்லு'
'பேர் தெரியாது சார். அவ என் கூட இதுவரை பேசினதே இல்லை'
புருவம் உயர்த்தினேன்..
'ஆமா... காதலிக்க ஆரம்பிச்சு ஒன்றரை வருஷம் ஆகுது..'
'ஹ்ம்ம்... அப்' இடையில் செல்பேசி அடிக்க ஆரம்பித்தது. நண்பன் தான். என்னை அவசரமாய் வெளியே வர சொன்னான். மதனிடம் சொல்லிவிட்டு, என் செல் நம்பரும், காசும் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

'டேய், கடைக்கு வந்துட்டு ஏன்டா வெளிய நின்னுட்டு இருக்க'
'அது சரி.. நீ முதல்ல ஏன் அந்த லூசு டேபிள்ல உட்கார்ந்துகிட்டு இருக்கனு சொல்லு?'
'லூசா???'
'ஆமாம்டா.. அரை பைத்தியம். பாங்கில் வேலை செய்யறான். ஆனா, வேலைக்கு போகும் முன், தினமும் காலையில் பக்கத்தில் இருக்கும் ஆலூக்காஸ் ஜெவல்லரி டிஸ்ப்ளேவில் இருக்கும் மாடல் பொம்மைக்கு ரோஜாப்பூ வைப்பான். ஐ லவ் யூ சொல்லுவான்.... சாயங்காலமும் செய்வான்.. கேட்டால் அது தான் என் காதலினு சொல்லுவான்! லோக்கல் நியூஸ்ல கூட கொஞ்ச நாள் முன்னாடி வந்துச்சேடா. ஒன்றரை வருஷமா இதே அலப்பரை தான்..'
என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றேன்..
'இதுக்கே திகைச்சிட்டியே.. இவன் போன வேலன்டைன்ஸ் டேக்கு என்ன செய்தான் தெரியுமா..' என கதை பேச ஆரம்பிக்க, அப்படியே கிளம்பினோம்..

மறுநாளில் இருந்து முடிவெடுத்தப்படி , நானும் அவளை அழைக்கவில்லை.

சில மாதங்கள் கழித்து

இன்னமும் அவள் வந்து பேசவில்லை. நானும் அவளை மறக்க பல முயற்சிகள் எடுத்து தினமும் தோற்றுக்கொண்டிருந்தேன்.

அன்று அதே பாருக்கு அதே நண்பனை வரச்சொல்லி இருந்தேன். அங்கே சென்றதும், சென்ற முறை அவன் அமர்ந்திருந்த டேபிளில் அவனை கண்கள் தேடின. காணவில்லை.
'என்ன சார்.. மதன் சாரை பார்க்கறீங்களா' பார் செர்வர்.
'ஆமாம்பா'
'அவர் யோக காரர் சார்.. பைத்தியம் கணக்கா பொம்மையை டாவடிச்சிட்டு இருந்தாரு. கடசில நிஜத்தில அந்த பொம்மைக்கு போஸ் கொடுத்த மாடல் பொண்ணுக்கு விஷயம் தெரிந்து, வந்து பார்த்து, லவ்ஸ் ஆகி, கல்யாணம் செய்துகிட்டு.... இப்போ சென்னையில் இருப்பதாக கேள்வி சார்'

கேட்டதும், என்னையும் அறியாமல் சிரித்தேன்.. ஏனோ அழ தோன்றியது. அதனால் சிரித்தேன்.

போதுமான காதல் இருந்தால், தூங்குவது போல் நடிப்பவர்களை மட்டும் அல்ல, இறந்து போனவர்களையும், உயிரற்ற பொம்மையையும் கூட உயிரூட்டி எழுப்பி விடலாம் என அவன் சொல்லாமல் சொல்லி சென்றதாக பட்டது.

உடனே அவள் செல்பேசிக்கு அழைப்பதென முடிவு செய்தேன்.. இன்னமும் அதே ரிங்டோன் பாடல் வைத்திருந்தாள்... ஒலிக்க தொடங்கியது...
இரகசிய கனவுகள் ஜல் ஜ
'ம்ம்ம்' பதில் எதிர்முனையில்.
அந்த விநாடி, மகரத்தை இதை விட அழகாய இசைக்க கூடியவர் எவரும் இல்லாமல் போனார்கள். என் மனதையும் தான்!

அந்த அதிர்ச்சியில் சட்டென்று முழிப்பு வந்தது. கனவு மட்டுமே தரும் ஏமாற்றம் மனதில் மெதுவாக படர தொடங்கியது. என்றைக்கோ பாரில் பார்த்தவன் மதன். அவனுக்கு கல்யாணம் ஆச்சு என்றெல்லாம் கனவு வருதே என சிரித்துக்கொண்டேன். என்னவள் குரல் பல நாட்கள் கழித்து கனவிலாவது கேட்டது, மனதை மெதுவாக குளிர செய்தது.

விடியக்காலை கண்ட கனவு பலிக்கும் என்பார்களே.. அதனால், பல மாதம் கழித்து அன்று அவள் செல்பேசிக்கு அழைத்துப்பார்த்தேன். 'தாங்கள் அழைத்த தொலைபேசி எண் தற்போது உபயோகத்தில் இல்லை' பதிலாய் கிடைத்தது!

அதன் பின் என் நண்பனை அழைத்து மதனை பற்றி விசாரித்தேன்.
'ஓ அந்த பைத்தியமா, அவனை சிகிச்சைக்கு கேரளாவிற்கு அவன் பெற்றோர் அழைச்சிட்டு போயிருக்காங்கடா.. போய் ஒரு இரெண்டு மாதம் ஆகும்.. ஏன் கேட்கிற' என்றான்.

என்னையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. சிரிக்க தான் தோன்றியது. அதனால் அழுதேன்.

Monday, May 26, 2008

காதல் முகமூடி (அழகிய கவிதை -VII)

மு.கு: இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே
4. கவிதைகளின் கவிதை
5. ஒற்றை வலி கவிதை
6. விழிக்கத்தி




விரதங்களின் முடிவு
பசியும்..
காதலின் முடிவு
பிரிவும்..
காத்திருப்பில் கலைந்த மேகங்கள்!

வானமாய் நானிருந்தாலும்
சிறு சிறு கோடுகளில்
என்னை அழகாக்கும்
வர்ணவில் நம் காதல்..



"இப்படியே பின்னால சுத்திட்டு இரு..
உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்"
அது சரி.. அப்பொழுதாவது
பைத்தியத்தை உனற்கு பிடிக்குமா?





அழகான உன் கோபங்களில்
ரசித்து மடியும்
விட்டில் பூச்சியாய்
நானும் என் காதலும்..

இடிகள் இடித்தாயிற்று
மின்னலும் வெட்டிவிட்டது
இனி..
மழை விழத்தானடி
மனம் காத்திருக்கிறது..



காதல் முகமூடி...
வெளியே சிரித்துக்கொண்டே
உள்ளே அழ கற்றுத்தரும்..
காதலின் வரம்.

'அழகிய கவிதை..'
சொல்லிக்கொண்டே..
படித்து விட்டு
கிழித்தும் எறிந்தாய்..
--------------------------------------------------------------------------------
பி.கு: இத்துடன் அழகிய கவிதை நிறைவு பெறுகின்றது.