Monday, December 25, 2006

Veyil - வெயில் , வாழ்க்கை ....

கவிதை பற்றி ஒரு Post போடலாமா... இல்லை comedy track ஒன்று போடலாமா.. என்று யோசித்து கொண்டு இருக்கையில், சரி இரண்டும் வேண்டாம்... நேற்று பார்த்த படம் பத்தி, அப்பறம் கொஞ்சம் comedy, கவிதை என்று கலந்து போட முடிவு எடுத்தேன்... அது தான் இது!

மு.கு: கொஞ்சம் different ஆக format இருக்கும்.. hopefully, easy ஆக புரியும்!

முதலில் படம்:
படத்தின் ஆழம் இவங்க காதல்தான்! கொஞ்சம் வித்தியாசமான கதை ... வாழ்க்கையில் ஜெயிப்பவர்களை பற்றியே கதை எடுப்பவர்கள் மத்தியில், ஒரு variant attempt .. மனதை தொடும் சமுதாய உண்மைகள்... படம் முடிவில் மனதில் நிற்பவை ..Pasupathy character.. மற்றும் வாழ நினைத்து தோற்று(?) போன அவரது முடிவு... இது தொல்வியா? வெற்றியா? என்று தோன்றும் climax குழப்பம்! படத்தின் பாட்டுக்கள் நல்லா தான் இருக்கு. " உருகுதே.. மறுகுதே... " super!

அடுத்து comedy:

படத்துக்கு இவங்க ரெண்டு பேரும் முக்கியம் இல்லை! comedy track தவிற... ;)

உங்களுக்காக ஒரு குட்டி comedy scene: இங்க உள்ள "Boxing Day" culture பற்றி..
(அவரவர் பாணியில் படிக்கவும்)
நம்ம விவேக் : இடம்: Walmart முன்னாடி.. நேரம்: 5:OO AM
(டெய் என்னடா இது... இங்க எதாச்சும் church ல நம்ம மாரியாத்தா கோவில் rangeல கூழ் ஊத்தறாங்களா.. எதுக்கு இப்படி வெள்ளை கார பயலுக இங்க queueல நிக்கிறாங்க?)
ஒரு வெள்ளை கார madamமிடம்
"Hello.. escuse me.. "
"what?"
"here church கூழ் pouring? why you standing"
"church? no i went there yesterday.. this is shopping"
(ஒன்னும் புரியலையே!)
"What you doing here?"
"idiot, i just said it"
"என்னது இடியாப்பம் தராங்களா... ஆகா.. அது தான் matter a.. நம்மளும் நிற்ப்போம்"

நம்ம வடிவேல்: is running early morning singing "Black and love... love and black"
("யம்மே ..என்னாடா இது...எதாச்சும் மரியல் கிரியல் பன்றாங்களா?... சரி அங்க நிற்கிற வெள்ளை figure கிட்ட பேசி அப்படியே correct பன்னிட வேண்டியதுதான்..")
"hello..excuse me .. இங்க என்ன நடக்குதுனு சொல்ல முடியுமா?"
"What?"
"Oh sorry.. u dont know Tamil.. but i know English.."
"???"
"Oh me introduce.. I am terror of Tamilnadu.. you know tamilnadu.. I am terror there! people see me they run"
"What you are a terrorist?"
"yeah..yeah.. so you what? who?"
நம்ம அம்மணி அவ்ங்க hubbyய கூப்பிடராங்க..
"honey, this man claims to be a terrorist..he is watching and talking to me for the past 15 minutes"
அவரு "hey who are you man"
"ஆஹா... இது யாரு புது character!"
"Oh nothing..me just seeing... early morning running..seeing crowd...asking"
"non-sense..go away or I will call 911"
என்னாது 9/11க்கு நான் தான் காரணம் என்று உள்ள பிடிச்சு போடுவியா... escape!

அடுத்து கவிதை:
படத்தோட கவிதை அம்சம் இவங்க கதை! பாண்டி character, கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் பதியும் உண்மை.

சரி ..ஒரு குட்டி ஹைக்கூ அல்லது கவிதை.. எப்படி சொன்னாலும் ரோஜா ரோஜா தான!
யாராச்சும் ரம்மி விளையாடி இருக்கீங்களா?

" Joker வந்தாலும் ஆடலாம்
set சேர்ந்தாலும் ஆடலாம்
ஆனா
ரம்மி வந்தா தான் அடிக்கலாம்!"

இது வந்து

"நிலவில்லா வானமும்
அழகு தான்! அம்மாவாசை இரவு
ஆனால் முழுமை இல்லை
முழுமை - பௌர்ண்மி இரவு"

என்னும் அதே concept! கொஞ்சம் மாற்றி :)

Added on Dec 26th: மக்களே சொல்ல மறந்து விட்டேன்.. Belated Merry Xmas and Advanced Happy New year!

Tuesday, December 12, 2006

Life...நல்லதொரு வீணை செய்தே..

கதை comedy கவிதை என்று கற்பனைகள் எழுதினாலும், வாழ்க்கை போல் சுவையானதொன்று எதுவும் இல்லை! உங்களுக்காக சில Flash Backs!

Flash back 1 : இது நான் நீச்சல் கத்துக்கிட்ட புதுசு! ஏதோ ஓரளவுக்கு apartment ல உள்ள swimming pool போகி கத்துக்கிட்டேன்! அன்று என்னை பார்க்க வந்தார் என்னோட நண்பர் ஒருவர். நான் swimming pool போக கிளம்பி கொண்டு இருந்த பொழுது வந்தார் சரி நீங்களும் வாங்க என்று கூப்பிட்டு கொண்டு போனேன்.. தனக்கு நீச்சல் அவ்வளவாக தெரியாது என்று சொன்னார். அங்க pool ல shallow side இருக்கும், deep side உம் இருக்கும், வாங்க என்று கூப்பிட்டு போனேன். நான் முதல்ல உள்ள இறங்கி விட்டேன். ஆடை மாறறி கொண்டு வந்த நண்பர் திடீர் என்று ஓடி வந்து deep side ல dive அடித்தார். அட பாவி, நீச்சல் தெரியாது என்று சொல்லிவிட்டு இப்படி super அ dive பண்றார் என்று நான் நினைக்கும் பொழுது, "ஐயோ டேய் காப்பாதது டா" என்று அலற ஆரம்பிச்சார்! ஆகா.. என்று அவரை காப்பாற்றி கரை சேர்த்து விட்டு பின் கேட்டால், "தண்ணீர் பார்க்க ரொம்ப deep ஆ தெரியல..அதான் குதித்தேன"் என்று அசடு வழிஞ்சார்! "அடப்பாவிகளா, swimming pool ல பெருசா கொட்ட எழுதில DEEP,SHALLOW என்று red colorla paint பண்ணி வைத்தததா கூடமா பார்க்காம வந்து குதிப்ப" என்று நினைத்து கொண்டேன்... ஏதோ போங்க.. ஒரு உயிர காப்பபத்தின நல்ல காரியம் அன்னைக்கு பண்ணேன்!

அதோட கொடுமை இன்னொரு நாள் அதே swimming pool ல ஒரு வெள்ளை கார 2 year old குழந்தை ஓடி வந்து DEEP side ல கு்திச்சது தான் - without the life saver! ஏதோ நான் அங்கயே இருந்ததால டக் என்று பிடித்தேன்! அவங்க அப்பா கிட்ட "Dad, I forgot it was the deep side and my tubby (life saver toy)" என்று அது சொன்ன அழகு இருக்கே!


Flash Back 2 :"டேய் உன் மூஞ்ச போய் யவ Love பண்ணுவா?" என்று நண்பன் கேட்ட அதே நாள் மனசுக்கு பிடிச்ச ஒரு பெண்,என்னிடம் "நீ ரொம்ப Handsome அ இருக்க" என்று சொன்னது! (சரி சரி விடுங்க.... அந்த பொண்ணுக்கு கண்ணில ஏதோ கோளாறு என்று நீங்க சொல்றது கேட்கிறது!)


Flash Back 3: Fire Alarm அப்போ 12த் floor ல இருந்து கீழ இறங்கின பொழுது "பார்த்து நட அண்ணா" என்று சொன்ன தம்பியிடம் "டே நாங்கெல்லாம் படு steady ... ஒண்ணும் நடக்காது.." என்று 8த் floor ல dialogue பேசி 5த் floorla வழுக்கி விழுந்து, என் தம்பி சிரிப்பை அடக்கி கொண்டு "அண்ணா என்ன ஆச்சு" என்று கேட்க, நான் அசடு வழிந்தது


FlashBack 4: 2002(?) Worldcup soccer ல Senegal ஜெயிக்கும் என்று சொல்லி Bet கட்டினது! (அப்ப எல்லாம், எனக்கு cricket தவிர எதுவும் தெரியாது !)


Flash Back 5: நான் மயிர் இழையில் உயிர் தப்பிய பல தருணங்களில் இதுவும் ஒன்று! என்னோட college பக்கத்தில ஒரு Railway station. Mostly, College Bus பிடிச்சு வந்தாலும், சில நாள், Train ல வர பழக்கம்.. அப்படி ஒரு நாள், வந்தேன். Railway station ல இருந்து எங்க college வாசல் ஒரு 0.5 km. எப்பொவும் விசில் அடிச்சிக்கிட்டு track மேல நடப்பது என் பழக்கம். அன்றும் அப்படி தான் நான் பாட்டுக்கு நடந்து கொண்டு இருந்தேன். திடீர்னு ஏதோ தோன்றி பின்னால திரும்பி பார்த்தா, ஒரு 50 அடி ல Train அதே track ல என்னை நோக்கி வந்து கொண்டு இருக்குது ஒரு second நம்ம போன கதையில் வந்தது போல இதயம் நின்று துடித்தது! அப்படியே side ல இருந்த புதர் ல ஒரு dive ... சில சின்ன காயங்களோட தப்பினேன்!


சரிங்க, இதோட முடித்து கொள்கிறேன்... அப்பறம் நம்ம அடுத்த ரெண்டு வாரம் Christmas Vacation! So, கொஞ்ச time தான் வந்து பார்ப்பேன் ... அதனால ..

Tuesday, December 05, 2006

ஐந்து பேர் சேர்ந்து வளக்குற மரம் !

சில நல்ல எண்ணவாதிகள் நம்மள மாட்டி விட்டததுல நானும் இந்த மரத்துக்கு தண்ணி ஊத்துகின்றேன்! அநியாயமா ஒரு அமானுஷ்ய கதைய crime கதைய மாத்துகின்றா தப்பு நடந்திருக்கு SO நாங்க அத மீண்டும் பேய் கதை யா மாத்துகின்றேன்!

இது உஷாவோட கற்பனை
The Unusual Endings
"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...

இது வேதா எழுதின பகுதி...
மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...
ட்ரிங்,ட்ரிங்
'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'
ட்ரிங்,ட்ரிங்
'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'
ட்ரிங்,ட்ரிங்
'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'
இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.
'ஹலோ யாரு?'
'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்
'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'
'மீரா பேசுறேன்'
'எந்த மீரா?'
'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'
'என்னது? யாருங்க இது?'
'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி திரொலித்தது.
அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

இது நம்ம கார்த்தி அண்ணாத்த!

ரத்தமெல்லாம் உறைய அப்படியே சேரில் அமர்ந்தான் சூர்யா..
யா..யார் போன் பண்ணி இருப்பா..
அவன் தலைக்குள்ளே ஆயிரம் கேள்விகள்... சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய் அந்த இடமே கருங்கும்மென இருட்டாகியது.. நெஞ்சில் பயத்துடன் மெல்ல மெழுகுவர்த்தியை தேடி மெதுவாக அடி எடுத்து வைத்தான்.. அப்போ காற்றில் மெல்ல கொலுசு சத்தம் கேட்டது.. அந்த சத்தம் மெதுவாக இவனை நோக்கி வந்தது..எடுத்து வைத்த காலைக்கூட திரும்ப பின்னால் எடுத்து வைத்தான்.. கொலுசு சத்தம் நெருங்க நெருங்க மல்லிகைப்பூ வாசமும் இவன் நாசியை துளைத்தது.. சூர்யாவுக்கு அதிர்ச்சியில் தொண்டை வறண்டது..
சூர்யா.. எப்படி இருக்க சூர்யா.. காதல் தொய்த்த மயக்கம் கலந்த ஒரு பெண் குரல் கேட்டது.. இந்த இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று சூர்யா குழம்பிய போது..
என்ன சூர்யா..என்னை மறந்துட்டியா..நான் தான் நீ காதலிச்சு ஏமாத்துன மலர்விழி..

இனி நம்ம கதை!

சூர்யா மெதுவாக திரும்பி பார்த்தான்... பார்த்தால் அது அவன் அத்தை மகள் சீதா!
"அட குரங்கே, நீ தானா ... நான் கூட பயந்துட்டேன்"
"என்ன நீ காதலிச்சு, வேற ஒருத்தன் கல்யாணம் பண்ண மலர்விழி என்று நினைத்தியா?"
"வந்த உடனே ஆரம்பிச்சிட்டியா..ஆமா எப்போ வந்த திருச்சில இருந்து? Phone பண்ணறதில்ல? "
சத்யா: "யாரு கூட பேசரீங்க? ...கொஞ்ச நேரத்துக்கு முன்ன எதுக்கு கூப்பிடீங்க?..phone அ ஒழுங்க வைப்பதில்ல?"
"இங்க வந்து பாருடி யாரு என்று"
சூர்யா பேசி திரும்பினால் சீதா காணவில்லை..
"எங்க போனா அவ இதுக்குள்ள..."
"யாரு கூட பேசிக்கிட்டு இருக்கீங்க? "
"இப்போ தான் சீதா வந்த எங்க போன என்று தெரியல.. "
"சீதாவா? எப்போ வந்த திருச்சியில் இருந்து... ஒரு phone கூட பண்ணல "
"தெரியல.. சரி ...எங்கயாவது போகி இருப்ப..திரும்ப வருவா.. "
ட்ரிங்,ட்ரிங்,ட்ரிங்,ட்ரிங்
"நீ போய் எடு சத்யா .. போன முறைய யாரென்னு தெரியல.." சொல்லிவிட்டு தான் எழுதும் கதையை continue செய்ய உட்கார்ந்து பார்த்தான்.. எழுதிய கதையில், மீரா என்ற பெயருக்கு பதில் சீதா என்று இருந்தது ..அதிர்ச்சியில் உறைந்தான்!
"என்னாங்கா...!" சத்யா வின் அலறல் சத்தம் .உள்ள ஓடினா சத்யா மயக்கமுற்று தள்ளாடி நின்றாள். ஓடி போய் பிடித்து, சோபாவில் உட்கார வைத்து தண்ணி எடுத்து முகத்தில் தெளித்து.. "என்னடி ஆச்சு?"
"எண்ணங்க சீதாவும் உங்க friend மலர்விழியும் சேர்ந்து வந்த Bus ஆக்ஸிடெண்ட் ஆகி ரெண்டு பேரும்......" விம்மினாள்
சூரியாக்கு ஒரு முறை இதயம் நின்று பிறகு மீண்டும் துடித்தது..

***********************************************************************

சரிங்க இதோட நம்ம கதைய முடித்து கொள்கின்றேன் .. நம்ம மரம் தொடர்ந்து வளர்க்க
எங்க அக்கா அபர்ணா உம் , அண்ணாச்சி கிட்டு வையும் மாட்டி விட்டு நான் ஜூட் !

ஓ...அப்பறம் ஏதோ rules, மரமெல்லாம் இருக்காம்.. time கிடைத்தால் இதுக்கு முன்னால இந்த மரம வளர்த்தவர்கள் blog பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்க... ஏதோ சின்ன பையன் நான் தான் rules அ follow பண்ணல... தவறுக்கு நான் ஒரு முறை கன்னத்துல போட்டு கொள்கின்றேன்! அடுத்து போடுபவர்கள்... :)

Sunday, December 03, 2006

வருத்தப்படாத வாலிபர் சங்கம்....

சரி பல blog entries ல நம்ம senti யா போட்டு தாக்கிட்டோம் என்ற மன வருத்தத்திலும்
இதுக்கு முன்னால நாம comedy (Gaptain Interview) போட்டு பல நாள் ஆனதால இது

கதை இங்க இருந்து ... வடிவேல் பாணில படிச்சு பாருங்க

SCENE 1:
வடிவேலு attended அ IT interview,
வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட சொல்றாரு:
நான் சரி ஒரு round தானே னு ஒரு interview கு போனேன்
அங்க 5 பேர் மா,
மாத்தி மாததி கேள்வி கேட்டானுங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் answer சொன்னேன். அப்புறம் 4த்
floor போங்க offer வாங்கிக்குங்க னு சொன்னானுங்க
சரினு நானும் நம்பி 4த் floor கு போனேன்.
அங்க 8 பேர் மா,
அவங்காளால எவ்ளோ முடியுமோ அவ்ளோ கேள்வி கேட்டாங்க.
திடீர் னு ஒருத்தன் HR கு phone அ போட்டு
" மச்சான்.. free ய இருந்தா வாடா இங்க ஒருத்தன் சிக்கி
இருக்கானு சொன்னான். "
நானும் எவ்ளோ நேரம் தான் answer தெரிஞ்ச மாதிரியே
நடிக்கறத்து
அதுல ஒருத்தான் சொன்னான் , என்ன கேட்டாலும்
பேந்த பேந்த னு முழிக்கிறான்டா
இவன் ரொம்ப நல்லவனு சொல்லித்டான் மா....

Scene 2:
5 வருடம் கழிச்சு
கைப்புள்ள எழுதிய code இல் bug இருப்பதாக testing engineer ஒருவர் வந்து சொல்கிறார்...
டெஸ்ட் : என்னது codeல bug இருக்கு?
கை : நாம நாலு code எழுதும்போது ஒரு நாப்பது bug வரத்தான் செய்யும்...bug இல்லாத code எந்த கம்பெனியில எழுதுறாங்க?? ம்ஹும்...நல்லா கேட்க வந்துட்டான்யா டீட்டேயிலு...
டெஸ்ட் : சரி எப்ப bug எல்லாம் fix பண்ணப்போற?
கை : தம்பி testing team பக்கம் போய் கேட்டுப்பாருங்க நம்மளப் பத்தி...இதுவரைக்கும் எத்தன buggoda code எழுதிக் கொடுத்திருப்போம்....ஒன்னாவது fix பண்ணியிருப்பேனா?? ச்சும்மா சத்தமில்லாம support team க்கு assign பண்ணிட்டு போயிக்கே இருப்போம்ல!!!
டெஸ்ட் : சரி அப்ப நானே fix பண்ணிக்கிறேன்..
கை : தம்பி இது சாதாரண கம்பெனி இல்ல..ஒரு டொச்சுக் கம்பெனி..இங்க code எழுதினா output வராது வெறும் error தான் வரும்...இது bug gu பூமி....
(அந்தப் பக்கமாக ஒரு சீனியர் டெஸ்டிங் எஞ்சினியர் போகிறார்...அவரைப் பார்த்து நம்ம கைப்புள்ள...)
கை : அண்ணே, எதோ bug இருக்கு fix பண்ணனும்னு சொன்னீங்க அனுப்பவே இல்ல???

Matter பெரியதாகி, company MD கூப்பிடரார்
Scene 3:
TeamJrMember : தல தல வாங்க.. Testu உங்கள MD கிட்ட போட்டு கொடுத்திடுச்சு..அவரு உங்கள கூப்பிடாரார்
கை: என்னாது ம்ம்ம்... MD க்கு மண்டை empty ஆயிடுச்சு...testtu நமக்கு pest ஆயிடுச்சு..
இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு பண்றேன்...நானா அந்த MD யானு
MD office
கை: என்ன நம்மள பததி ஒரே e-maila இருக்கம்..என்ன விஷயம்... என்ன சொன்னான் அந்த testtu ?
MD: என்ன இது bug எழுதின fix பண்றது இல்ல?
கை ஒரு paper கொடுக்கிறார்
MD: என்ன printout இது?
கை: இது தான் என் இ-மைல்... இந்த இ-மைல் தாண்டி நானும் ஒண்ணும் சொல்லமாட்டேன் நீங்களும் ஒண்ணும் சொல்ல கூடாது
ம்த்: ஆண் ஆண் ...என்னாது
கை: பேச்சு பேச்சா இருக்கணும்..warning எல்லாம் கொடுக்க கூடாது
ம்த்: அப்படிய... இந்தா உன் warning letter
கை: ஹே..ஹே..வேடிக்கைய இருக்கு..சரி நான் வறேன்
ம்த்: ஏன்டா நீ திருந்தவே மாட்டிய? போன மாதம் தான ஒரு வர்நிங் கொடுத்தேன்?
கை: அது போன மாதம்..இது இந்த மாதம்...
தொடரும்...
பி:கு : இதுல முதல் 2 scene நம்ம orkut community-la சுட்டது
கடைசி scene மற்றும் முதல் Scene தமிழாக்கம் நம்மது