Thursday, March 29, 2007

Quantum Reflections - I - ஐம்பது வருடம் கழித்து..

மு.கு: மக்களே..இது heavy duty post. கொஞ்சம் பெரிய பதிவு.

உலக யுத்த வியூகங்கள். அதாவது War strategy on global level. அதுல நமக்கு தோணினது. I am always fascinated by war. especially since they are one constant - worthless - yet never leaving aspect of humanity. or maybe simply because i am male!

மனிதர்கள் Social Animals. அவங்களுக்கு குழுக்களாக இருப்பது தான் பிடிக்கும். மிக அடிப்படையான நிலையில் பார்த்தீங்கனா நாடு, மதம், ஜாதி ... எல்லாம் அதுக்கு மேல கட்டபட்ட பெரிய குழுக்கள். நாம் என்ற சொல் எப்பவுமே நான் என்ற சொல்ல விட மயக்கம் கொடுக்க கூடியது. எடுத்துகாட்டுக்கு சாதாரண கல்லூரி பெண்ணை எடுத்தீங்கனா, நாம நடந்து போனம்னா, அது பாட்டுக்கு அமைதியா போவும். அதுவே ஒரு 5-6 பொண்ணுங்க சேர்ந்து இருக்கும் போது தனியா போனா! The Behavior of a mob/group is distinctly unrelated and different from any given individual. அதனால தான் நாட்டு பற்று வெறியர்களும், மத வெறியர்களும் இருப்பது. அது ஒரு மயக்கம். A sense of invulnerability. Like a herd of Zebras are more safe from the predator than a isolated one. இதுல சரி தவறு என்று எல்லாம் யாரும் யோசிக்காதீங்க. சரி தவறு என்பதே மிகவும் relative terms. Mostly there is no absolute right, nor wrong.

இப்ப உலக வரைபடம் பாத்தீங்கனா, நாடுகள் தான் மிக முக்கியமான குழுக்கள். அதுக்கு போட்டியா இருப்பது மதம். (for this discussion pls ignore the spiritualistic impact of any religion - and just consider them as a group of power like nations - which in truth they are ;) ) எல்லாரும் நம்பற மாதிரி மதம் இல்லன பிரச்சனை இருக்காது என்பது பைத்தியக்காரத்தனம். பிரச்சனை எப்பவும் இருக்கும்.. மதம் ஒரு சாக்கு. நாடு ஒரு சாக்கு. நான் பெரியவனா, அவன் பெரியவனா என்ற எண்ணம் இருக்கும் வரை... மனிதர்கள் இருக்கும் வரை.. பிரச்சனைகள் இருக்கும்.ஆனால் அது எப்பவும் நாடு, மதம் என்னும் போர்வைக்குள் ஒளிந்து இருக்கும். ஆக, இப்ப உள்ள மேஜர் குழுக்கள் - மதம் ரீதியா, நாடு ரீதியா.

சரி. இப்ப நம்ம சில பிற்கால சூழ்நிலைகல பத்தி பேசுவோம்.

இப்ப நம்ம அமெரிக்கா Iraq, Afghanisthan ல சண்டை போடுது. அவங்க அங்க என்னைக்கும் ஜெயிக்க முடியாது. Not unless they break the will of every soul in those nations or nuke them. காரணம் - guerilla warfare. பாஷ்டுன் மக்கள் மலைகளில் பரம்பரை பரம்பரையாக வசித்தவர்கள் - அந்த போர் முறை அவர்களுக்கு அத்துபடி. அன்றைய Alexander ல இருந்து நேற்றைய பிரிட்டிஷ், இன்றைய அமெரிக்கா வரை யாரும் நிலையான வெற்றி பெற முடியல. ஆனா அவங்களாலும் ஜெயிக்க முடியாது.

இப்ப நடந்த British soldiers Kidnap பாத்தீங்கனா, Iran விவரமா British soldiers கடத்தனான்..இல்ல பிடிச்சான். அதே US army people அ பிடிச்சு இருந்தான்.. இவ்ளொ நேரத்ல இரெண்டு பேரும் மோதிட்டு இருப்பானுங்க. It is by mere luck(?) this did not happen.. எப்படி இவன் சரியா அமெரிக்கா ஆளுகளை பிடிக்காம இவனுங்கள பிடிச்சான்?? I cant believe it was a chance encounter. smells like pre-mediated.

சரி இது இன்றைய நிலை. இப்ப நாம கொஞ்சம் variables introduce செய்வோம்.

கடந்த பல நூற்றாண்டுகலை விட, crusades அ விட, இப்ப இஸ்லாமுக்கு சோதனை காலம். Islam as a religion to survive, is facing a tough time in this time. Against the western onslaught on everything that is Islam. ஆக, இந்த நாடுகள் (Arab states)ஐரோப்பாவிடமும் அமெரிக்காவிடமும் சண்டையில்ல மீள முடியாத நிலைக்கு தள்ளபடும். Lower economy. Less technology. Less power. இப்படி நடந்தா, நம்ம அண்டை நாடான பாகிஸ்தான் மட்டும் எப்படி சும்மா இருக்கும்? Not unless they reduce their religious interests from the state to the level of present day Turkey... or even further.
ஏனா, அணுகுண்டு வச்சி இருக்கும் ஒரே நாடு அது தான். இஸ்லாமிய நாடுகளில். ஆனா கண்டிப்பா அமெரிக்கா மேல எல்லாம் போடாது. நம்ம தான்! எப்படியும் ஒரு அணுகுண்டாச்சும் நம்ம மேல விழும். அப்படி நடந்தா மறுநாள் அது இருக்க்காது என்பது வேறகதை. நம்ம கிட்ட இருக்க்கும் அணுசக்திய வச்சி we can burn every square kilometre into ahses. ஆனா நம்ம பக்கத்துல இன்னொரு கண்டம் இருக்கு. பேரு சீனா. எப்படியும் நாம கடசில ஜெயிச்சிடுவோம். ஏனா இந்த மாதிரி நடந்தா ஐரொப்பாவும் அமெரிக்காவும் நம்ம பக்கம் இருக்கும்.

Just remember not to stay in Delhi or Mumbai during those time. Prime targets for nukes!

அடுத்தது இஸ்லாமிய நாடுகள் முழித்து கொண்டால்.. அப்போ அது எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு வைக்கும். they will control most of the oil production in the world. இப்போ தான் சிக்கல். இப்போ இந்த இஸ்லாமிய கூட்டமைப்பு கொஞ்சம் புத்திச்சலிதனமா இருந்தா, they will strive for peace. and grow. economically.. and eventually militarily into a formidable power. இல்லனா இதுக்கு முன்னாடி சொன்னாப்ல தான்.

If the later happens, that will be WWIII. The casualties will be more than X10 times of WWI and WWII casualities combined. இது சீனா இல்லாம. சீனா குதிச்சா, X50 to X100 தான்.

இதுல நமக்கு என்னடா பிரச்சனை என்று தான கேட்கறீங்க.. சொல்லறேன். நம்ம மக்கள் பெரும்பாலும் இந்துக்கள். கொஞ்சம் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என இரெண்டு மதங்களும் உண்டு. அப்போ ஒரு பகுதி மக்கள் ஒரு பக்கமும் மீதி இன்னொரு பக்கமும் இருப்பாங்க. Expect Riots.

இது ஒரு scenario. இன்னொன்னு சண்டையில்லாத யுத்தம். உலக மக்களெல்லாம் கிறிஸ்துவர்களாக மாற்றும் ஒரு scenario. Core biblists/ Evangelists in their zest to show "enlightment" to masses of pagan worshippers (நம்ம தான்) in Asia - China and India - will invade as missionaries. நம்ம நாட்டுல ஏற்கனவே அதுக்கான அடித்தளம் இட்டாச்சு. கிறிஸ்துவ பள்ளி கூடங்கள் - friday seminars என்று பைபிள் போதிப்பது, influencing vulnerable young minds, western culture influence that makes todays youngsters knowledge of traditons and their understanding zero.. என்று.

இன்னொரு scenario. இது நம்ம நாடு இந்துத்துவ நாடா மாறுவது. அப்புறம் we can share the fate of Islamist fundamentalist states of today :) அரோகரா!.

சரி.. அப்ப என்னதான் பண்ணனும் இந்தியா? நிறைய. உள்ள இருந்து ஆரம்பிச்சு நிறைய மாத்தனும். உள்ள மாத்த வேண்டியது பத்தி அடுத்த பாகத்தில்.
முதல்ல Jammu and Kashmir. எப்படியும் பாகிஸ்தான் எங்கயாச்சும் சருக்கும். அமெரிக்காவுக்கு எதிரா பாகிஸ்தான் வரும். அடுத்த நாள் நாம போருக்கு செல்லனும். இந்த முறையாச்சும் கேனத்தனமா ஜெயிச்சும் நிலத்த வாரி வழங்காம, போன காரியத்தா ஒழுங்கா முடிக்கனும். அத செய்தால் அப்புறம் நமக்கு கிட்டத்து முதல் எதிரி சைனா தான். நாம ஒன்னு சைனா கூட கூட்டு வைக்கனும். அது நடக்காது. Not with communism in china in its present avatar. despotic-communism. பாப்போம்.

ஒரு அணுக்குட்டி 4 states of Quantum ல இருக்கலாம். So the number of possible futures is given by the formula XC4 where X = number of அணுக்கள் involved. ஆக நான் சொல்ல வருவது.. நான் சொன்னது எல்லாம் நடக்க கூடிய chance ரொம்ப கம்மி.
(அப்புறம் எதுக்குடா சொன்ன என்று தான கேட்கறீங்க? ;) ) (உங்களுக்கு எல்லாம் physics மறந்து இருக்கும் என்ற தைரியத்துல சொல்றேன்.. +2 ல படிச்சது)

But Scientists have partially proved that the probability of a electron in one quantum state can be influenced by human thoughts. அதாவது நாம எல்லாருமா சேர்ந்து ஒன்ன நம்பினா அது நிஜமாயிடும். ஆக, ஐம்பது வருஷம் கழிச்சு இதுல எதுனா நடந்தா என்ன திட்டாதீங்க.

Peace is an expensive commodity maintained by strength. Not by idealogy or principles. you enforce peace. Not close your eyes and hope everything will remain calm. American arrogance, Pakistanian pestilence, Chinese cannons.. நாம வல்லரசு ஆகும் முன் செய்ய வேண்டியது.. நடக்க வேண்டியது நிறைய.எந்த வல்லரசும் பக்கத்துல நம்மள மாதிரி எதிரிகள வைத்து வல்லரசு ஆனதில்ல.. சும்மா எல்லாரும் ITல வேல பாத்தா இந்தியா வல்லரசு ஆகாது. கீழ்நிலை குடிமகன்ல இருந்து எல்லாருக்கும் அடிப்படை தேவை, கல்வி கிடைக்கனும். Pakistan and Chinese nuclear threats should be eliminated... Internal policies need to change... இது போல ஏகப்பட்டது.

ம்ம்... சரி.. இதோட முடிச்சுக்கின்றேன். அதுத்த பாகத்துல உள்ள என்ன மாறுதல்கள்கள் வந்தா நல்லா இருக்கும் என்று பார்ப்போம்.

"ஆயிரம் இளைஞர்களை கொடு
நான் உலகத்தை மாற்றுகின்றேன்
என்று சொன்ன விவேகானந்தருக்கு
காத்திருப்பதை விட்டு விட்டு
வா...
ஆயிரம் விவேகானந்தர்கள்
உலகத்தை எப்படி மாற்றுவர் என
காண்பிப்போம்"

ஜெய்ஹிந்த்.

Friday, March 23, 2007

மனதில் இத்தணை ரணமா... வலியில் இத்தணை சுகமா...



நம்ம கிரிக்கெட் கலக்கல் பத்தி தான் போடலாம்னு இருந்தேன்.. அப்பால பாத்தா நம்ம மருதம் மாட்டி விட்டுடாங்க! சரி இரெண்டும்!

முதல்ல கிரிக்கெட்: Supposedly a Gentle Man game. This World cup பத்தி கொஞ்சம்
Too much Commercialisation..Too Little Cricket.
1 Billion hopes.. It is just a game.. but still a shame.
To add icing, A cold blooded murder. To add more icing, a despirited, rudderless Indian Team. The worst, I was hoping Sachin would atleast make a gracefull exit, if this happens to be his last world cup.. And all that happened was 0.
நம்மாளுங்க ஜெயிக்கலனாலும், இவ்ளோ கேவலமா விளையாடி இருக்க வேண்டாம்:(
A Sachin.. A Dravid.. A Ganguly.. And all we could manage was?

சரி விடுங்க.... டாபிக் மாத்துவோம்..நம்ம மருதம் tag.
மேட்டர் இது தான்! நமக்கு நடந்த / நம்மளை பற்றிய விசித்திரமான விஷயம் ஐந்து சொல்லனும்.... இது நமக்கு easy! நம்ம தான் totala விசித்திரமாச்சே! ;)

1. நான்.
யார் கூடவாச்சும் பேசினா, எனக்கு அவங்க point of view ல இருந்து நிறைய புரியும்.. so எனக்கு அவ்ளொ எளிதா கோபமே வராது.. எங்க காலேஜ் professors மேல கூட எரிச்சல் வராது என்றால் பார்த்துக்கோங்களேன்..
நான்: டேய்.. அவர் தப்பா என்ன சொன்னார்.. நம்ம classக்கு போகல அதான் அப்படி பேசினார்..
நண்பன்: என்ன சொல்ல வர? அடுத்த முறையில் இருந்து போகப் போறியா?
நான்: இல்லையே! அவருக்கு அவர் சொல்வது சரி! எனக்கு நான் செய்வது..

இந்த மாதிரி attitude. Some times it is Helpfull. Sometimes, I just feel irritated at myself that I understand too much and cannot feel enough anger to blame some one else

2. நான்.
ரொம்ப வெளிப்படையா இருக்கனும் என்று எதுக்கும் அடங்க மாட்டேன். எங்க காலேஜ்ல முதல் முறையா strike! The first time in the history of our college. And what did I do? I went straight and confronted one HOD who would just not listen to reason. அப்புறம் அது ஒரு பெரிய கதை.. seniors, professors, ஊர் பெரியவர்கள் (அப்படினு நினைச்சிட்டு எனக்கு advice சொல்ல try பண்ணறவங்க..) என்று யாரையும் விட்டு வைத்தது இல்ல.

எனக்கு கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன் character ரொம்ப பிடிக்கும். காரணம் Most of the times I am like that! Diplomacy ரொம்ப கம்மி! (அதாவது கேனத்தனமா பேசுவேன்.. அத தான் இப்படி சொல்லறேன்)

3. நான்.
ரோம்ப யோசிப்பேன்.(தெரியும்டா லூசு என்று நினைச்சீங்க தான?) religion, history, psychology என்று வேறுப்பட்ட interests. அதிகமா யோசிச்சு, சரி போடா என்று எப்பவும் போல இருப்பேன். நம்மளோட Orkut community ஒன்றுல, எனக்கு வயது <25 என்றால் எவனும் நம்ப மாட்டேன்கிறான். நீ பேசறாத பாத்தா உங்களுக்கு எப்படியும் ஒரு 60 வயது என்று அடிச்சு சொல்றாங்க!

4. நான்.
எதையும் லேசில் விட மாட்டேன். சின்ன வயசுல் கார்ட்டூன் பார்க்கும் போது, I always liked Batman. Reason: In one episode, Where a couple of super heroes like our superman, spiderman, batman are all there, some one asks Batman, why are you among heroes? What is special about you? you are just a normal human being. He replies "I never Give Up" . நம்ம policy.. சரி.. கிட்ட தட்ட.. ;)

5. நான்.
எதையாவது செய்ய ஆரம்பிச்சா சீக்கிரமா பண்ணி முடிக்கனும். I cant think of anything else until I finish it. அதுனால தான் ஆணி பிடுங்கற எடத்துல இப்படி அல்லோல படறேன். ஆனா காலேஜ்ல ரொம்ப useful ஆ இருந்தது. 3 hour examஅ 1.5 hoursla முடிப்பேன். பசங்க எல்லாம், டேய் இப்படிபாதி நேரம் எடுத்து இவ்ளோ மார்க் வாங்கறியே.. முழு நேரம் எழுதினா இன்னும் நிறைய வாங்கலாம்ல என்று சொல்லுவாங்க.. எவ்ளொ நேரம் எழுதினாலும் அவ்ளொ தான் வாங்குவேன் என்ற மேட்டர் நமக்கு தெரியும் :)
எப்பவும் கடசி exam அ.. அதாங்க semesterக்கு semester வரும்ல அத முக்கால் மணி நேரத்துல முடிப்பேன்!


இதுல என்னடா விசித்திரம் இருக்கு? எல்லா மனிதர்களுக்கும் இல்லாதது மாதிரி scene போடற என்று நீங்கள் கேட்கறீங்களா? நல்ல கேள்வி. ஒரு மறை கழண்டு இருக்கும்.. இரண்டு கழண்டு இருக்கும்.. ஐந்தும்? அது!

இத இன்னும் ஐந்து பேருக்கு நான் நியாயப்படி tag செய்யனும்.. ஹி ஹி! என்ன பத்தி இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே.. எனக்கு அடுத்தவங்க ஒன்னு சொன்னா, அத முழுசா செய்யும் பழக்கம் இல்ல. So Njoy :)

சரி முடிவா இரு புதிர்.. நான் ஒரு பாட்டு லைன் சொல்லுவேன். ஒரே லைன் தான். கரெக்டா பாட்ட சொல்லனும்.

"வானத்து நிலவை தண்ணீரிலே
சிறை வைத்த கதை தான் உன் கதையே.."

பாபா count down starts now 1...2...
(கல்லெறியும் முன் S)

Saturday, March 17, 2007

பழையதில் நீ பரம்பொருள்.. புதியதில் நீ புதன்ரோபோ

பழையன கழிதலும் புதியன புகுதலும்... மாற்றம் என்பது மானிட தத்துவம்... தன்னில்லும் தம்மக்கள் அறிவுடையோர்.. இப்படி நம்ம போகில இருந்து, வள்ளுவர், கண்ணதாசன் என பலர் சொன்னாலும் நமக்கு உண்மையில் புறிகின்றதா?

நம்ம மக்களிடம் பொதுவா இருக்கும் சில "சந்தேகத்துக்கு இடமான" நம்பிக்கைகள் பத்தி தான் சொல்லறேன்.. இல்ல இல்ல.. கடவுள் பத்தி இல்ல.. எதுக்கு எடுத்தாலும் பழசு என்றா ஒச்த்தி, புதுசு என்றால் குப்பை என்று நம்முள் பலரிடம் இருக்கும் எண்ணம் பத்தி தான் இந்த பதிவு. (இல்ல நான் பாப் ம்யூஜிக் பத்தியும் சொல்லல!)

1. அந்த காலத்தில ஆரோக்யமா நிறைய நாள் வாழ்ந்தாங்க! இப்ப பாரு..
சிந்திக்க: அந்த காலத்து Mortality rates கிட்ட compare பண்ணோம்னா இது விளங்கிடும். இப்ப உள்ள மருத்துவத்தில் எவ்ளோ பேர் நம்பி இருக்கோம்.. சாதாரண கண்ணாடில இருந்து.. Vicks மாத்திரையில் இருந்து.. Cancer Treatment, Kidney replacement வரை.. These were things unthinkable in the past. Yes the occasional sheltered village person lived long, but what about the effects of war? famine? Wouldn't you rather live now?

அப்ப எல்லாம் பிறந்ததில் 80 குழந்தை முதல் வருடம் தாண்டும் முன் இறந்து விடும்.. இப்ப?

2. அந்த காலத்து காதல் (ஆரம்பிச்சான்யா.. என்று நீங்க சொல்றது கேட்குது ;) )
சிந்திக்க: இப்ப மாயக்கண்ணாடில ஒரு பாட்டு கூட.. அந்த காலத்து காதல் சுத்தம், இந்த காலத்து காதல் ஆசை மட்டும்.. அப்படி இப்படினு! இத விட காமெடி எதுவும் இல்ல. இந்த பாட்ட கேட்டு சரி கடுப்பானேன்!

எங்க தாத்தா சின்ன வயசுல அவங்களுக்கு தெரிஞ்சு நடந்த சம்பவம் இது.. ஒரு வயசுக்கு வந்த பொண்ணு ஜன்னல் வழியா வெளிய நடக்கற ஆளை எட்டி பார்த்திட்டா என்று அவளை நிலையில் தள்ளி சாகடிச்சிட்டாங்களாம்!
இப்படி ஒரு பொண்ணும் ஒரு ஆணும் சந்திக்க கூட சந்தர்ப்பம் இல்லனா காதல் எங்க இருந்து வரும்! சும்மா மஜ்னு, Romeo என்று Dialogue தான் பேசலாம். Shahjahan க்கு எத்தணை பெண்டாட்டிகள் என்று யாருக்காவது தெரியுமா? இப்ப காதலிச்சிட்டு ஏமாத்துகின்ற ஒருவன், 50 வருஷம் முந்தி பிறந்தா நல்லவனா இருப்பானா? Logic இடிக்கல! Just because people have more choices and make more informed independent decisions, does it mean we are incapable of true love as they managed in the past. Utter nonsense.
10 - 500 வருஷத்துக்கு முன்னால ஜாதி பேரிலும், மதம் பேரிலும் இவங்க generation காதலை, காதலித்தவர்களை கொன்றது மறந்திடுச்சா?

3. General Feeling that Old is Gold.

பழையது என்பதால் அது புனிதமும் இல்ல
புதியது என்றால் அது பயனற்றதும் இல்ல.

Dowry கொடுமை, sati, விதவைகளின் கொடுமை.. இன்னும் எத்தணை மூடத்தனம்? இதுல பழசு தான் பெரிசா? யாரு கிட்ட கதை விடறீங்க?
ஆமா.. இன்னைக்கு வாழ்க்கை இயந்திரத்தனமா தான் போயிடுச்சு.. பணத்த சுத்தி ஓடுது. 100 வருஷம் முந்தி மட்டும்? 1000 வருஷம் முந்தி மட்டும்? சலவை தொழிலாளி மகன் சலவை தொழில் தான் செய்ய வேண்டும் என்பதை விடவா இயந்திர வாழ்க்கை கஷ்டம்? அரசனின் ஆட்டதுக்கு எல்லாம் ஆடியதை விடவா இன்று பணத்துக்காக ஆடுகின்றோம்?

எங்க பாட்டி காலத்தில, அவங்க கிட்ட கொட்டாங்குச்சியில் கூழ் வாங்கி குடித்த தீண்டத்தகாதவர் பிள்ளைவழிகள் இன்று ஊரின் பெரிய businessman. இது முன்னேற்றம் இல்லையா?

4. கடவுள்
இப்ப நம்ம மாலைமுரச எடுத்துகிட்டீங்கனா மாசத்துக்கு ஒரு முறையாவது "மேரி கண்ணில் இருந்து இரத்தம்", "வாயில் இருந்து லிங்கம், கீதை எடுக்கும் சாமியார்" என்று லூசுத்தனமான செய்திகள் வரும். இத இப்ப யாராவது நம்பறோமா? (நான் சிந்திக்க்கும் மனிதர்களை பற்றிப் பேசுகின்றேன்) அப்புறம், ஆயிரம் வருஷம் முன்ன யாரோ செய்தார்கள் என்றதும் மட்டும் ஏன் நம்பறோம்?

5. கூட்டுக் குடும்பங்கள்

ஆமா.. ஒத்துக்கொள்கின்றேன்.. கூட்டமா, பிள்ளைகளை பார்த்துக்க ஆள் வசதியா எல்லாம் இருக்கறது கேட்க நல்லா இருக்கும். சும்மா இரண்டு நாளிருந்தாவே சண்டை பொடறோம் சொந்த காரங்க கூட. இதுல வாழ்க்கை பூராவா? பெறியவா அறிவே இல்லாம சொன்னா கூட தலை ஆட்டும் அந்த காலத்தில் ஒத்து போயிருக்கும். இப்ப? இது வரமா சாபமா? Dont u thing this has equal pros and cons like anything else!

For some reason we always want to believe our ancestors were better knowledgeable, radiating knowledge and lived a better life than ourself! Isnt this a pitfall of self-appeasement?

All the Miracles of the past are nothing but words of men uttered in delusions and recorded without verifying the proof. நான் இன்னைக்கு கடவுள் கிட்ட தினமும் பேசறேன். கடவுள் வந்து என்கிட்ட நீங்க எல்லாம் இதுவெல்லாம் பண்ணலாம் இதுவெல்லாம் பண்ண கூடாது என்று சொல்ல சொன்னாரு என்று சொன்னா நம்புவீங்க? அப்புறம் ஆயிரம் வருஷம் முன்ன நடந்தத மட்டும்?

பழச மறக்கக்க்கூடாது தான்.. ஆனால் பழைய பெருமையே சொல்லி எத்தணை நாளுயா ஓட்டுவீங்க? பழையதை மறக்காதீர்கள்.. ஆனால் நிகழ்காலத்தில் வாழுங்கள் ... சாதித்து காட்டுங்கள்..

இந்த காலத்து காதல்
நீரில் எழுத்து..
சொல்கின்றான் அந்த காலத்து கவிஞன்
அவன் காலத்தில்
திருமணமான நாளில் தான்
முதலில் ஒரு பெண்ணை அருகில் பார்த்தவன்!
(8 வயது குழந்தையை மணம் முடித்தது இன்னொரு மேட்டர்)

நான் ரோபோ கண்டுபிடித்தேன் - ஜப்பானியன்
நான் சாட்டிலைட் கண்டுபிடித்தேன் - ரஷ்யன்
நான் கார் கண்டுபிடித்தேன் - ஜெர்மன்
இதை எல்லாம் 5000 வருஷங்களுக்கு முன்னமே
நாங்க கண்டுபிடிச்சோம்.. ஆனா இப்ப தான் ஒன்னும் இல்லாம
இருக்கோம் - நாம்மாளு!
நாம் என்றைக்கு பழைய பெரூமைய விட்டுட்டு நிகழ்காலத்தில் சாதிக்க?

இன்னும் எத்தணை நாளப்பா பழைய வழக்கங்களில் மூழ்கி, முகமது கௌரியை மன்னித்து விட்ட பிருத்வியை போல், நாமும் முட்டாள் தனமாக பேசிக்கொண்டு இருப்போம்!
தூங்கறவங்களை எழுப்பலாம்.. தூங்குவது போல் நடிப்பவர்களை?

Tuesday, March 13, 2007

ஏதோ ஒன்று...




இன்று தான் பிரம்மன்
கடமை முழுமை அடைந்தது
பூமி மலர்களுக்கு எல்லாம்
பிறவிப் பயன் கிடைத்தது
இன்று தான் என் வாழ்க்கையின்
முதல் தேடல் பிறந்தது

வின்னட்சத்திரம் காட்டவில்லை
வானவில்லும் தேவையில்லை
அப்பொழுதும் நான் அறிந்தேன்
இந்நாளை



பி.கு:: Techincally Only now it is Morning for me :)

Saturday, March 10, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை.. தொடர்ச்சி



உளறுதல் என் உள்ளத்தின் மறுவேலை..
மறுவேலையாய் இருந்ததை
முழுவேலையாய்
ஆக்கிக் கொடுத்தவள் நீ.

நான் சிவன்
ஆனாலும் உன்மயம்..

இது என்ன?
உன் தெரு விளக்கு மட்டும்
மிக பிரகாசமாய் இருக்கு?
இரவுப் பிரிவை தாங்காமல்
அவதரித்திருக்கும் சூரியன்..
எப்படி அறிவாள் உன் தோழி?

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமெங்கோ நடந்ததாம்..
எனற்கு தெரியாமல்
நீ எங்கு சென்றாய்?

உன் விழிகளில் தொடங்கி
உன் விழியிலேயே இறக்குது
என் கவிதை..
உன் விழிகளை எனற்காக
சைவம் மாறச்சொல்..

நட்சத்திரமாய் எல்லாம்..
சூரியனாய் நீ..
வின்மீணுக்கு பதிலாய்
வரமளிக்கும் உன் கண்கள்..

நீ வெளியில் வரும் இரவெல்லாம்
அம்மாவாசை ஆகின்றதாம்
உன் அழகை கண்டு
வெட்கி வரமறுக்கும் நிலவு.

சூரியோதத்தை TVயில் சொல்கின்றார்கள்
அவர்களுக்கு எப்படி தெரியும்
உன் Alarm அடிக்கும் நேரம் ?

கடவுள் இல்லை
என கோஷமிடுபவர்களுக்கு தெரியுமா?
என்னை தினமும்
நீ கொன்று உயிரெழுப்புவது?

உன் சிரிப்பு சத்தத்தில்
அணு அணுவாய் சிதைந்தவனை
உதட்டுக் குவியலில்
ஒன்றாக சேர்க்கின்றாய்..

இப்படி
கனவில் எல்லாம்
வெளிச்சம் காட்டிவிட்டு..
விழி திறந்ததும்
இருட்டி விடுகின்றாய்..

பி.கு: இந்த கவித்தொடர நம்மளுக்கு முன்ன ஆறு பேரு எழுதி கலக்கி இருக்காங்க.

கார்த்திகையில் தோன்றி
பரணி நட்சத்திரத்தில் மலர்ந்து
வேதத்தை உணர்ந்து
கண்மணியாய் நமக்கு கிடைத்து
ஜீவ விருட்சகமாய் வளர்ந்து
அந்நியம் ஒழித்த அம்பியாய் இருந்து
இப்போ என்கிட்ட சிக்கிகிச்சு..
அடுத்து?

Wednesday, March 07, 2007

வாழ்க்கை - பாகம் II

மு.கு: Warning...Serious topic. The views told are solely based on personal opinion and do not intend to harm anyones feelings. இதற்கு முந்தைய பதிவு. ஆங்கில பதிவு-English-Not the Same

ஒரு பேப்பர் எடுத்து உங்க பேர எழுதுங்க. இப்ப, chinese ஒருத்தன்கிட்ட அது என்ன என்று கேட்டால் பேப்பரும் மையும் என்பான். அத நான் பார்த்தா படிச்சிட்டு அது நீங்க என்று சொல்லுவேன்.இப்ப இத பார்த்து, ஏன் டா, பேப்பரும் மையும் போய் அவன் என்று சொல்லறியே என்று கேட்டால், அது எவ்வளவு அறியாமையோ, அதே தான், "கல்லை எதற்கு கடவுளாக வழிபடுகின்றீர்கள்" என்பதற்கான பதில். கல்லை யாரு கும்பிட்டா? கல்லிலும் காணும் கடவுளின் பிரதிபலிப்பை தான் நாம் வணங்குகின்றோம்.

அப்புறம், சிவ - லிங்க வழிபாடு. இதுக்கு இப்படி ஓரு அர்த்தம் இருக்கும் என்பது எனக்கு ரொம்ப நாளா தெரியாது. இத பத்தி யாராச்சும் கேட்டா சொல்ல தெரியாமல் முழிப்பவர்களுக்கும், தங்கள் திருப்திக்கும் இந்த பாரா. சிவன், ஆரம்பத்தில் started off as a fertility god of beasts and forests. ஆக, இந்த வழிபாடுல, நாம மனித குலம் தழைக்க காரணமா இருந்ததாக "சிவனை" இந்த ரூபத்தில் வழிபடறோம். நாம எல்லாரும் இப்படி தான பிறந்தோம். இதுல குறை சொல்ல என்ன இருக்கு? அது மட்டுமில்ல. Naturalஅ stones on the river side or rounded off in this shape. So Shiva represents the untouched object.. the natural consciousness that is supposedly shaped that stone. So it is not just what we think it is.

Semetic religions - (Christianity, Islam, Jewism) க்கும், Dharmic religions (Hindusin, Jainism, Buddhism, Sikhism) க்கும் உள்ள வித்தியாசம் இந்த இரு வரி.
எல்லாம் கடவுளுடையது. எல்லாம் கடவுள். இந்த ஒத்த concept variation ல எத்தணை பிரச்சனை! இதுல எது சரி, தவறு என்பது முக்கியம் இல்ல. கடவுள் இருந்தார்னா, Is he really going to care what concept you believed? நம்ம நல்லவங்களா இருப்பது முக்கியமா? இல்ல குறுப்பிட்ட மதக்கொள்கைகள கடைபிடிப்பவரா இருப்பது முக்கியமா?

எனக்கு இந்து மதத்தில் பிடித்த ஒரு விஷயம்- எல்லாத்துக்கும் allowance உண்டு. இத்தணை முறை, இந்த திசையில் கும்பிடணும் என்று கட்டுபாடு கிடையாது. இன்னாரை தான் வணங்கனும் என்ற கட்டுப்பாடு கிடையாது. என்னை போல நான் கடவுள்.. நீங்களும் கடவுள் என்று சொல்லு கொண்டு இந்த மதத்தை கடை பிடிக்கலாம்!

நம்ம மக்கள் மதங்களை ரொம்ப நம்பராங்க. அது தான் பிரச்சனையே. பல 1000 வருஷம் முன்னாடி ஒரிடத்தில் அவர் தோன்றி சொன்னார் என்று சொல்லும் புத்தகங்களை நான் ஏன் நம்ப வேண்டும்? கடை பிடிக்க வேண்டும்? உண்மை தான்.. நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் கடைபிடிக்கலாம்... ஆனால், என் காலில் இருந்து shudras உருவாக்கினேன் என்று சொல்லி ஓர் மனிதனை உயர்த்தி, இன்னொருவனை தாழ்த்தி சொன்னாரா கடவுள்? என்னை இந்த வடிவத்தில் வழிபடக்கூடாது என்று சொன்னாரா? என்னை வழிபடாதவர்களை கொல் என்று சொன்னாரா? என்னால நம்ப முடியல!
I think these were books created in their own time for their own purposes acting for its politcal and grandoising effects. Yes they do contain unrefutable truth. Which god will say you -to kill your neighbours? or -not worship him? But do we really need a God coming and saying these things to us? isnt these common sense to any compassionate human being?

Religions mainly serve to political ends. They have nothing to do with spiritualism. I, am not a religious person. But I believe I am far more if not as much as, spiritual, than any religious person in the world.

உண்மையில மதங்கள் பத்தியும், அதன் தோற்றம் பத்தியும் ஆர்வம் அதிகம் நமக்கு. High interest on the historical side of things.

என்ன பொருத்த வரை, ஒரு நாள் மலை குன்றிலே நான் தான் எல்லாம் என்று உணர்ந்த கிருஷ்ணர் கடவுள்னா, நம்ம எல்லாராலும் அத உணர முடியும். நம்ம எல்லாம் கடவுள் தான். பிறர் பாவங்களை சுமந்து சிலுவை ஏறினாரே ஏசு நாதர், அவர் கடவுளின் பிள்ளை என்றால், பிறருக்காக வாழும் எத்தணையோ கடவுளின் பிள்ளைகள். ஒரே கடவுள் என்று முழங்கினாரே, Prophet Mohammed, நம்ம எல்லாம் ஒன்று தான்.. the same conscious vibration is within us... நம்ம எல்லாம் தான் அந்த ஒரே கடவுளின் பிரதிபலிப்புகள்.

கடவுளை வணங்குவதில் கிடைப்பதில்லை சொர்க்கம். நம்மை நம்புவதில் இருக்கின்றது. தன் மேல் மதிப்பும், நம்பிக்கையும் கொண்ட எவனும் தவறு செய்ய மாட்டான். கடவுளை கல்லாக செருப்பால் அடித்த பெரியார், அதை மக்களின் அறியாமையை கலைக்க செய்தார்... அவர் சொர்க்கத்துக்கு தான் போவார். மக்களை ஏமாத்த வாயில் இருந்து லிங்கம், கட்டிப்பிடி வைத்தியம் என்று செய்யும் சாமியார்கள் கண்டிப்பாக அங்கே போக மாட்டார்கள்.

இன்னும் சொல்ல நிறைய பாக்கி இருக்கு.. அடுத்து இன்னொரு பதிவுல.
பிகு: யாரும் கோபப்படும் முன்னாடி, என்னை திட்டும் முன்னாடி, முந்தைய 2 பதிவ படிக்க சொல்லி என் வேண்டுகோள்.

Saturday, March 03, 2007

ஒற்றை காலிலே பூக்கள் நிற்பது..

மு.கு: மக்களே, ஒரு வாரம் நான் பயங்கர பிஜி (ஆணி பிடுங்கர பிஜி தான்). அதான் வரல. இப்ப கொஞ்சம் வரேன்.. அடுத்த வாரம் நிறைய.. (உன் தொல்லை இல்லாம் இருக்கலாம்னு நினைச்சா.. என்று நீங்க சொல்றது கேட்குது... என்ன பன்ன! விதி விளையாடுது!). அப்புறம் போன பதிவுல எனக்கு கமெண்ட்டிட்ட எல்லாருக்கும் ஒரு நன்றி. I am bck to form!

இன்னொரு மு.கு: இந்த பதிவுல concept இல்ல. அதான் concept. ஒற்றை வரி விடைகள்..
கிட்டதட்ட விடுகதை மாதிரி.. ஆனா அதுவும் இல்ல :P

இன்னொரு மு.கு: (ஹி..ஹி... யோசிச்சிட்டுக்கொண்டு இருந்தேனா.. ஒரு நல்ல மேட்டர் தோணுச்சு.. அதான்) இதான் மேட்டரு.. ஒரு பாட்டு எடுக்கனும். அதுக்கு பதில் சொல்லனும் / comment அடிக்கனும் ... எப்படி வேணும்னாலும்.. நக்கல், ரசனை, கேள்வி.. எல்லாம்.

இன்னொரு மு.கு: சும்மா சொன்னேன்.. மேட்டருக்கு போவோம்.. இல்ல எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கல.

நம்ம பாட்டு: "கண் மூடி திறக்கும் போது...." from சச்சின்! இப்பாட்டின் ரசிகர்கள் கோபிக்க கூடாது... ஏனா நாந்தான் உங்க ரசிகமன்ற தலைவன்! ரசிச்ச பாட்ட இப்படி நக்கல் பன்ன மனசு கஷ்டமாதான் கீது. ஆனா.. பதிவு first..ரசிகமன்றம் next!

"கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அழகாக கண் முன்ன்னாடி வந்தாலே..."
டேய் பேய்,பிசாசு தான் அப்படி வரும். முக்கியமா மோகினி பிசாசு.

"குடையில்லா நேரம் பாத்து
கொட்டிப் போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து.."
அது அழகா, இல்ல அந்தளவு உன் மேல காறி துப்பினதா?

"உன் பெயரும் தெரியாதே, உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா...."

டேய், பறவைய பாத்து லவ் செய்து கல்யாணமா பன்ன போற! ஆனா பொன்னு அப்படியா! என்னடா logic இது?

"நீரில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா..."
அறிஞ்சு?? என்ன பன்ன போகுது?

"பூகம்பம் வந்தால் கூட
பதறாத இதயம் எனது..
பூ ஒன்று மோதியதாலே
சட்டென்று சரிந்தது இன்று.."
ஆமாடா.. குஜராத்ல பூகம்பம் வந்தா உனக்கு ஏன் பதறுது? நீ தான் நல்ல படுத்து தூங்கிட்டு இருப்பியே..

இப்ப அடுத்த மேட்டர்....

அமெரிக்கன் தோழி: டேய், பிறந்த நாளுக்கு எதுக்கு dress எல்லாம் எடுக்கிற?? உனக்கு தான் தெரியாதுல? (உங்களுக்காக மொழி பெயர்ப்பூ.. நாந்தான்! இதுக்கெல்லாம் என்ன ஆளா வைக்க முடியும்)
அமெரிக்க தோழன்: ஹா! உள்ள போய் எனக்கு பிடிச்ச கலருல ஒன்ன எடுத்துட்டு உடனே வந்துடுவேன்..
... தோழி : என்னாது! போய் வெரும் கலர பாத்து எடுப்பியா! ஒரு துணி எடுத்தா அதோட texture, label, (ஒரு பெரிய list).... எல்லாம் பாக்க மாட்ட?
(entry scene.. நான்)
நான்: எல்லாம் உங்கள மாதிரி தான். நீங்க காரே அப்படி தான வாங்கறீங்க!


இருங்க... அப்புறம் உங்களுக்காக இரெண்டு கவித போடுறேன்... இரெண்டும் எனதில்ல.. ஒரு சின்ன கவித..ஒரு பெரிய கவித..


கவித கவித... அப்பிடினு இரெட்டையா சொல்லுவோம்ல... அது இதுதான் போல!


இது அடுத்த கவித... பேரு நீது சந்திரா.. நாந்தான் சொன்னேன்ல கவித என்தில்ல என்று.. ஏன் முறைக்கறீங்க!

பி.கு: டேய்... நீ பதிவ போடுறியோ இல்லையோ.. இப்படி பி.கு, மு.கு என்று போட்டு bladeஅ போடுற... அப்படினு நினைக்கறீங்களா! ;)