Tuesday, September 25, 2007

இராமரில் இருந்து கொலம்பியா வரை..

--மு.க:: அரசியல் பதிவு. சொந்த கருத்துக்கள். constructive arguments are welcome. If you belong to the category -- You do not agree and cannot comment constructively, please donot comment. Saves me the trouble of deleting them.

நிறைய பேர் ஏன் வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்று இருக்கின்றார்கள் என தெரியவில்லை.
நம்ம முதலமைச்சர் என்னவென்றால், இராமர் இல்லை என்று சொல்லுகின்றார். இதே மற்ற மதக்கடவுள் பத்தி பேச மாட்டார். பேசினா இருக்க மாட்டார்.
அவர் நிஜமான - நியாயமான - ஆத்திகவாதியா இருந்தால் "இயேசு இல்லை" அப்படினு அறிக்கை விடசொல்லுங்க! நீங்கள் மதங்களை பொய்யென்பதால், மக்களின் நம்பிக்கை பொய்யாகி விடாது!

சிலர் , சேது சமுத்திர திட்டத்தால் வரும் நன்மைகளை உணராமல் இது தான் சாக்கு என்று, மத பேத பிரச்சாரம் செய்து மத்தியில் ஆட்சிக்கு ஆப்பு வைக்க பார்க்கின்றார்கள்!

What is the extent of the damage done to the rock formation because of the project? Is it technically feasible to minimise it to acceptable amounts? இதெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. யோசிச்சா அதுனால ஓட்டு கிடைக்காதுல!

"நீ ஒரு கேவலமான அயோக்கியத்தனமான சர்வாதிகாரி" என ஒரு நாட்டின் பிரதமருக்கு அறிமுகம் கொடுக்கின்றார் ஒரு சிறிய, சாதாரண பல்கலைகழகத்தின் முதல்வர். அவரின் நாட்டின் முக்கிய "தீவிரவாதிகளின் எதிர்ப்பு கூட்டணி" பாகிஸ்தான். (Isnt this the biggest joke?). அவரின் நாட்டின் பிரதமர் பொய் பேசுபவர். ஊழல் செய்பவர். (தெரியாதவங்க Bush பற்றி வந்த Farenheit9/11 படம் பார்க்கவும்). ஒரு நாகரீக அறிமுகம் செய்ய கூடாதா? நமது ஜார்ஜ் Fernandes மத்தியில் அமைச்சாராய் இருந்த பொழுது அமெரிக்காவில் துகில் உரியப்பட்டு சோதனை செய்ய பட்டது நினைவுக்கு வருகின்றது. I mean i donot care about that guy, but being an Indian central minister (defence??) must mean something.. shouldnt it?

ஈரானின் பிரதமரா, Holocaust is a myth என்று புலம்பிட்டு இருக்கார். I mean come on, it happened 60 years ago. 1000's of people died. Is it a myth? If you want your arguments to be heard, you must argue reasonably!

இவனுங்களுக்கெல்லாம் நிஜமாவே அறிவு இல்லையா? இல்லை அரசியல் நாடகமா?

We donot want to chose between American Imperialism nor Islamic Fanaticism என்று ஒரு போர்டு வைத்திருந்தார்கள் இங்கு. அதை "We do not want to chose between capatalisst Imperialism nor Religious fundamentalissm" என்று மாற்றனும்!

சென்னையில் கூட "We do not want to choose between "Ridiculing a religion because we can get away with it" nor "Opposing everything because we are dumb and cannot think" " அப்படினு யாராச்சும் போர்டு வைங்கப்பா!

Friday, September 07, 2007

தேவதை யாசகன்..

ஆண் பெண் சமம்
என தான் நானும் சொல்லிவந்தேன்
உனை பார்த்ததும் தான் தெரிந்தது
பெண் ஆணினும் மேல் என்று...

ம்ம் என்னும்
ஒற்றை தலை அசைப்பில்
எனற்கான எத்தனை வாழ்க்கைகளை
படைக்கிறாய் நீ..





மண் மழையில் நினைந்து
வரும் மண்வாசனை
விண் மழையில் நினைந்து
வரும் பலவர்ண வானவில்
நீ மழையில் நினைகையில்
மட்டும்
ஏனடி எனக்கு காய்ச்சல்..

நீ என்ன
மின்னலில் இறங்கிய தேவதையா?
உன் ஓரச்சிரிப்பில்
என் எல்லா எண்ணங்களையும்
எரித்து கருக்கி விட்டு
நீ மட்டும் நிற்கின்றாய்
தனியாய் முழுதாய்..

எத்தணை கூட்டத்திலும்
உனை கண்டதும்
தாயை கண்ட குழந்தையாய்
அதிவேக துடிப்புகளை
தொடங்குகின்றது என் இதயம்





காற்றின் மீது பொறாமை வருமா?
பறக்கும் உன் முடிக்கற்றை
இறக்கும் என் இதயம்..











எனற்கான உன் சிரிப்பையும்
உனற்கான என் உலகத்தையும்
தொலைத்து வந்தேன்
உனற்கான உன் சிரிப்பிற்க்கு..

முழுமதி ஆகும் முன்னமே
தேய்பிறை ஆவதேன்
நமக்கான எல்லாமும்

நட்சத்திரத்தை தொட முயன்ற
மேகமானது என் கனவுகள்
காற்றோடு கரைவது
மேகம் மட்டும் இல்லை

காதலில் தான் புரிய ஆரம்பிக்கும்
கவிதைகளும் வலிகளும்...

Tuesday, September 04, 2007

வினையிதுவோ....சுதந்திரமோ..

மு.க: எப்பவும் போல கதை மையம் சூர்யா. நிஜத்துக்கும் கற்பனைக்கும் இடையேயான மெல்லிய கோடுகளை தழுவி.. ரொம்ப சின்ன கதை தான். (படிச்சிட்டு, கதைனு சொன்னியே எங்கனு யாரும் கேட்கபடாது சொல்லிட்டேன்!)

அன்று:
அவன் பேர் சூர்யா. காலேஜ் படிக்கிறான். சிக்கன், மீன் எல்லாம் ரொம்ப பிடிக்கும். கூட படிக்கும் பையன் கார்த்திக். பிராமிண பையன். அசைவம் எல்லாம் சாப்பிட மாட்டான்.
சூர்யா பல முறை அவனிடாம் ஏன் சாப்பிட மாட்ட என்று விவாத்தித்து பார்த்தான். ஒன்னும் நடக்கல. ஒரு முறை கார்த்திக் வீட்டுக்கு வந்த பொழுது கத்திரிக்காய் ப்ரை என்று சிக்கன் துண்டை கொடுத்து விட்டான். கார்த்திக்கும் சாப்பிட்டு விட்டான். அப்புறம் காலேஜில் அதை சொல்லி ஒரே சிரிப்பு.

இன்று:
சூர்யா. அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கம்பெணியில் வேலை செய்கின்றான். கூட வேலை ப்ர்ப்பவர்கள் வெள்ளைகாரர்கள். சாப்பிடும் பொழுது எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள்.
ஒரு நாள் Lasagne என்று ஏதோ ஒன்றை (It is something like pasta) கொண்டு வந்த பக்கத்து சீட்டு stephen, கொஞ்சம் சாப்பிட சொல்லி கொடுத்தான். சாப்பிட்டு பார்த்தான். நல்லா இருந்தது. கடைசில தான் தெரிஞ்சது அது Beef போட்டு செய்தது என்று.

என்றும்..
எது சாப்பிடலாம், எது சாப்பிடக்கூடாது என்பது விவாதமில்ல. விவாதங்களுக்கு முடிவு கிடையாது. The most important point is to have the choice. We donot want some one else deciding / arguing / compelling us what to eat and what not to eat - or anyother thing for that matter. இது தானங்க சுதந்திரம். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்தில இருந்து ஆரம்பிக்கும். எது சரி எது தப்பு என்பது இல்லை. அதை செய்யாலாமா வேண்டாமா என்பது (அடுத்தவரை negative ஆக பாதிக்காத வரை) நம் முடிவாக இருக்க வேண்டும். அடுத்தவர் கட்டாய படுத்த கூடாது. அதுவே உண்மை சுதந்திரம்.