Thursday, November 29, 2007

கவிதையே சொல்லவா...

மு.கு: இந்த முறை நிஜமாவே எனக்கும் அவளுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது! சும்மா சின்னதா ஒரு கதையும் கவிதையும் கலந்து! ("கலந்ததால ரெண்டுமே இல்லாம போச்சு!" அப்படின்னு எல்லாம் சொல்ல கூடாது!)



அவள்: உன் வருங்கால மனைவி கிட்ட இருந்து என்னடா எதிர்பாக்கின்ற?
அவன்: (இப்படி கேட்டதுக்கு இவ feel பண்ணனும்.. எடுத்து விடுடா!)

அழகில் வடித்தெடுத்த தேவதை தேவை இல்லை
காலை விழி பார்க்கும் முகதாட்சண்யம் போதும்

உயிரை உருக்கும் தமிழ் பேச தேவை இல்லை
மனதை மருகவைக்கும் உரையாடல் போதும்

இன்னொரு தாயாய் எனக்கு இருக்க தேவை இல்லை
என் தாய்க்கு இன்னொரு மகளாய் இருத்தல் போதும்..

ஒத்த மனக்கருத்து உடையவள் தேவை இல்லை
மற்ற கருத்தை மதிக்க தெரிந்தால் போதும்..

இதில் எதுவுமே தேவை இல்லையடி
என்னை நீயும் ..உன்னை நானும்
முழுமுதலாய் காதல் செய்வதாய் ஆனால்..

அவள்: அழக இருக்க வேணாமா? அழகா இல்லன பசங்க sight கூட அடிக்க மாட்டீங்க! எங்கன காதலிக்க போறீங்க?
அவன்: காதலுக்கு மனசுக்கு பிடிக்கணும்! கண்ணுக்கு இல்ல! உண்மை தான், அழகு பாப்போம், ஆனா அது just oru first impression. அதுக்கு மேல எத்தனயோ இருக்கு!
அவள்: like?
அவன்: you!
அவள்: ஆஹா! எனக்கேவா!
அவள்: அப்பறம் தமிழ்ல கவிதை எல்லாம் எழுதற! தமிழ் பேசும் பொண்ணு வேணாமா?
அவன்: மொழிகள் முக்கியமில்லை! மனதின் புரிதல்கள் அவசியம்.. மனசே புரிஞ்சதுனா கவிதை எல்லாம் எதுக்கு சொல்லு!
அவள்: அப்புறம் குழந்தை தேவை இல்லையா? தாய் வேணாம்னு சொன்ன!
அவன்: அப்படி சொல்லல! எனக்கு ஏற்கனவே ஒரு தாய் இருக்காள். இன்னும் ஒரு தாய் தேவை இல்லை! ஆனால் என் தாய்க்கு மகள் வேணும்னு சொல்ல வந்தேன்..
அவள்: அப்புறம் அது என்ன முழுமுதல் காதல்? கேள்வி பட்டது இல்லையே..
அவன்: எந்த ஒரு மனிதனும் குறைகள் இல்லாம இல்லை. அந்த குறைகளோட சேர்த்து நேசிப்பதாக இருக்கணும் காதல். நிறைகளை மட்டும் நம்பி வர கூடாது! அப்புறம் ராமர் மாதிரி மக்களுக்காக மனைவியை எரித்தால் அதுல முதல் காதல் மக்கள்! மனைவி இல்லை. அது மாதிரி இல்லாம வாழ்வின் முதல் காதலா இருக்கணும்! அது தான் மொத்தமா - முழுமுதல் காதல்!

அவளும் அவனுமாய் பேசி அவர்களாய் பிரிந்து சென்றார்கள்..வீட்டுக்கு.

பி.கு: அட பல நாள் கழிச்சு சந்தோஷமான முடிவா? சில பிரிவில் கூட சந்தோஷம் இருக்குங்க!

Wednesday, November 28, 2007

நட்பெனும் காதல்....

**UPDATE - Must read post! check this out!


மு.கு: "லூசாடா நீ" அப்படின்னு கேட்கும் அளவு உரிமையுள்ள அன்பு அக்கா G3, அப்புறம் "நான்" ( ;) )அப்படின்ற ஒரு கதா பாத்திரமும் பேசும் நிஜம்.. உங்கள் கருத்து சொல்லுங்கப்பா கமெண்ட்ல!


Gayathri: சரி உன்னை கேக்கணும்னு நினைத்தேன்.. அது என்ன கமெண்டு வேதா போஸ்ட்ல? பையனும் பொண்ணும் நெருங்கி பழகினா நட்பா இருக்கவே முடியாதா?
நான்: அதுக்கு உன்மையில பதில் எனக்கு தெரியாது. I cant logically comprehend .. ஆனா எனக்கு நெருங்கிய தோழிகள் இருக்காங்க and i dont love them but என்ன சொல்ல? எல்லாமே ஒரு அளவுக்கு தான் என நினைக்கிறேன். மிகவும் நெருக்கமான ஒரு ஆண் பெண் நட்பின் அடுத்த படி காதல் என்பது என் கருத்து.
Gayathri: லூசாப்பா நீ? இவ்ளோ தெளிவா confuse பண்ணற?
நான்: ஹிஹி thanks
Gayathri: அப்போ ஒரே பொண்ணு 4 பசங்களோட closea பழகினா அதுல யார் propose பண்ணாலும் ஒத்துகனுமா? என்ன கொடும இது?
நான்:ஒரு பொண்ணு 4 பசங்களோட close ஆ பழகலாம் but if she ever gets a lover that circle of closeness is closer than what she had with those 4 இல்லையா?
Gayathri: obviously
நான்: அந்த level of closeness க்கு only one தான் போக முடியும். அது இந்த நாலு பேருல ஒருத்தரா இருக்கலாம் இல்லாம போகலாம்.. உண்மைய சொல்லனும்னா எனக்கும் புரியல..
Gayathri: hmm.. அந்த நாலு பேருல யாருக்காவது அந்த level தோன்றி இவளுக்கு தோனல என்பது தான் வேதா சொல்ல வந்தது.
//உண்மைய சொல்லனும்னா எனக்கும் புரியல..// - LOL :)
நான்: yeah but அது தான் ஏன்னு கேட்கிறேன்? why do girls think some ppl are good enough to be frnds but not good enough to be lovers. Friendship என்பது ஒரு உயிருள்ள ஜீவன் மாதிரி.. பிறக்கும், வளரும், ஒரு நாள் கொஞ்சம் கொஞ்சமா குறையும், தேயும்..
Gayathri: lover and frnds are completely diff angles. friendshipku தகுதின்னு நினைக்கிற எல்லாரையும் காதலிக்க முடியாது!
நான்: see நீங்க தகுதின்னு word use பண்ணறீங்க. So அத தான் நானும் சொல்லறேன். she thinks அவனுக்கு நண்பனா இருக்க தகுதி இருக்கு, ஆனா காதலனா இருக்க இல்லைன்னு ?
Gayathri: obviously. not that everyones minsdset gets well with everyone. சிலருக்கு அவங்க partner ரொம்ப matureda இருக்கனும்.. சிலருக்கு innocenta இருக்கணும்.. but friendshipku அவ்ளோ perfect qualifications தேவை இல்லை
நான்: accepted agreed.. அதே தான் நானும் சொல்ல வந்தேன்.. friendhsip தான் உயர்ந்தது nee friendshipku துரோகம் பண்ணிட்ட..
Gayathri: u accept the person as they are.
நான்: ....அப்படின்னு ஏன் சொல்லணும்?
accept and tell the truth that u do not consider him to have the quality u expect in ur partner..
Gayathri: hehe.. இதுல i accept to ur point.. friendship is not higher than love
நான்: அப்பறம் அடுத்த விஷயம் girls expect the friendship to continue .. i mean this is the most ridiculous thing.. first they hurt the guy by rejecting the love but then they still want to have the "normal" happiness of friendship :P
Gayathri: அது கொஞ்சம் லூசு தனம் தான்.. i too accept அது ரொம்ப கஷ்டம் .. its better to part after that
நான்: i think it is selfishness
Gayathri: hmm.. என் கதையில் நான் அதனால் தான் அதுக்கப்புறம் 1st லவர் character பத்தியே சொல்லி இருக்கமாட்டேன் .. its actually tough to be on that side
நான்: எல்லாமே ஒத்துகிட்ட நீங்க என் கட்சி தான!
Gayathri: எனக்கு அந்த ஒரு பாயிண்ட் தான் உதச்சிது.. good enough to be a friend and not enough for a lover னு சொன்னியே . .அதான் கேட்க வந்தேன். .அப்போ யார் love propose பண்ணாலும் ஒத்துகனுமா?
நான்: அப்படி கிடையாது but stop being close to a guy if you wouldnot accept him. donot let his friendship to grow.. Unless it is obvious he is in love with someone else.. why do you wait until it reaches the critical part .. where he expects it to grow and u expect it to stagnate because u r selfish
and dont want to lose the intermediary happiness?
Gayathri: அந்த level தெரியாதது தானே problem. யாரும் அவனுக்கு இப்போ இப்படி தொனலாம்னு guess பண்ணிட்டு உட்கார்ந்து இருப்பதில்லையே
நான்: ஒரு பையன பாத்து அப்பப்ப hi சொன்னா ஓகே.. எல்லா weekendum
அந்த பையனோட சுத்திட்டு அப்பறம் சொன்னாக்க? பசங்க அப்படி இல்ல if we consider someone as a potential we make it clear in the beginning we dont make friends unnecessarily or let them get too close so engalku இவ்ளோ closea பழகினா..
Gayathri: nyayamaana kelvi. every weekend ஒருத்தரோட சுத்தின இந்த problem genuine தான்.. naan generalla group friendship pathi pesinen.. nee thaniya 2 per mattum பழகுவத பத்தி சொல்ற
நான்: we think it is ok nu
Gayathri: ஆஹா.. இவ்ளோ preplanneda லான் relationa start பன்னா அது normala இருக்கும்னு நினைக்கியா
நான்: இது preplanned இல்ல this is normal for guys
we dont unnecessarily get closer to each and everyone நல்லா யோசிச்சு பாருங்க எப்போவுமே ஒரு பொண்ணுக்கு அதே levela clossea நாலஞ்சு பசங்க friendsa இருப்பாங்க
ஆனா அந்த பசங்களுக்கு ஒரு பொண்ணு தான் இருப்ப மத்தவங்க இருந்தாலும்
they wont be of the same level
Gayathri: accepted
நான்: ஹிஹி இதை சொன்னா பொண்ணுங்க லேசுல ஒத்துக்க மாட்டாங்க :D
Gayathri: aaha.. இது வேறயா ? எனக்கு correctunu தோணுச்சு ஒத்துக்கிட்டேன் :)
நான்: ஹிஹி நானும் யோசிச்சு பாத்து இருக்கேன்
எனக்கும் அது தான் தோணுச்சு
so unless i am presented with logical
arguments to the contrary
i will go with this
:D
Gayathri: aaha.. தெளிவா தான் இருக்க. இரு proofoda யாரவது வருவாங்க :)
நான்: :P
logicala ஒத்து போகணும்
there is a certain level of attraction in any male female relation
enbathu freudian truth
that cannot be denied
so, சிலர் அவங்களையே decieve ..
Gayathri: fraudian trutha :P
நான்: ;)
lol
Gayathri: :))
நான்: hehe
next postuku matter கிடைச்சுச்சு
இத copy paste பண்ணிடலாம்
:D
Gayathri: aaha.. தத்துவம்னு sonna அதுக்குள்ள topic மாறிடுச்சா ?
நான்: hehe இது தான் போட்டு வாங்கிறது
Gayathri: என்னத்த வாங்கின ? எல்லாத்தையும் நீ தான் போட்ட :P
நான்: hehe நீங்க ஒத்துகிடீங்கள்ள so பெண்கள் rep ஆ g3ye ஒத்துகிட்டாங்க அப்படின்னு ad போட்டுட மாட்டோம் :D

பி.கு: பொதுவா ஆண் பெண் என பேசினாலும், இரு பாலருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

Friday, November 16, 2007

தேவதை பருவம்

மு.கு:: இதற்கு முந்தைய தேவதை தொடர்கள்..
1. தேவதை ஊர்வலம் 2.தேவதை கனவுகள்
3.தேவதை தரிசனம்
4.தேவதை யாசகன்

காணல் பருவம்
வெறும் சிரிப்பென
நினைத்து விதைத்தது தான்..
இன்று பரந்து விரிந்து
மனமெங்கும்
காடாய் நிறைந்து நிற்கின்றாய்
நீ..

"நான் எழுதும் யாவும்
வெறும் எழுத்தாகத்தான் இருந்தது..
அது கவிதையானது எல்லாம்
நீ படித்ததில் தான்.."

என கவிதை சொன்னதும்
"அழகா கவிதை சொல்றடா,
என்னடா வேணும் உனக்கு" என்கிறாய்....
தேவதையிடம் வரம் கேட்கலாம்..
தேவதையையே கேட்டால்?


தீண்டல் பருவம்

சின்ன வயதின்
நிலவை தொடும்
ஆசையெல்லாம்..
ஏனோ நினைவூட்டுது
நம் முதல் தீண்டல்.

மூங்கிலாய் கிடந்தேன்..
உன் விரல் பட்டதும்
புல்லாங்குழல் ஆனேன்..
உன் இதழ் பட்டால்?


ஊடல் பருவம்

"உன் மனசுல என்ன நினைச்சுகிட்டிருக்க?"
பதிலையே கேள்வியாக கேட்க
உன்னால் மட்டுமே முடியும்..
தலையசைக்கும் நான்.

தன் கோபத்தில்
பாதி உலகை
அழித்தானாம் சிவன்..
உன் கோபத்தில்
எனை முற்றிலுமாய்
எரித்தாய் நீ..


பிரிதல் பருவம்

கல்லாகி காத்திருக்கவும்
செய்வேன்..
சிற்பியாக நீ
செதுக்க வருவதானால்..
நீயோ
உன் இதயத்தை கல்லாக்கி
நம் காதலை
செதுக்கி போகின்றாய்..


உனற்கான என் கவிதையாவும்
பிரிதலில் முடிந்தாலும்
உனற்கான என் காதல் மட்டும்
பிரிந்தாலும் முடியாதது..

Sunday, November 11, 2007

அழகிய தமிழ் பொய்கள்..

என்னென்னவோ சொல்லறோம்... இத சொல்ல மாட்டோமா?
மு.கு: There are no spoilers!

இந்த ஊர்ல வந்ததுல உருப்படியா நடக்கும் ஒரு விஷயம், முதல் வாரமே டிக்கட் ஈஸியா கிடைப்பது தான்! படத்தின் பலம்.. விஜய். விஜய்யை மட்டுமே நம்பி படம் எடுத்துள்ளார் டைரக்டர். விஜய் பிடிக்காதவங்க - நம்ம ஷ்ரேயா அக்கா முழுசா நல்ல துணி வாங்க கூட காசில்லாம ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சு இருக்காங்க... - அவங்களுக்காகவாச்சும் பாருங்கப்பு! இரெண்டுமே பிடிக்காதவங்க, இந்த படம் எப்படிடா ஓடுது அப்படினு தெரிஞ்சிக்க பார்க்கலாம்
(படத்துக்கு எததனை காலுனு எல்லாம் கேட்க கூடாது .. சொல்லிட்டேன்)

சரி படம் மேட்டர் அவ்வளவே...

தலைப்புக்கு வருவோம்.. திரும்ப தலைப்பு குடுத்து கவிதை எழுத சொன்னா கொல விழும்னு தெரியும்! அதனால அதையும் நம்மளே எழுதுவோம்...



காதல்
சாதலில் பாதி
என விலகி இருந்தேன்
வாழ்தல்-இலும் பாதி
என புரியவைத்தாய்..

காதலை சொல்கையில்
மறுத்து பேசும்
உன் உதடுகளில் உதிர்வது
அழகிய தமிழ் பொய்கள்..

கல்லாய் கடவுளும்
காதலி உன் இதயமும்..
கலியுக கொடுமை!

பி.கு: போட்டோல ஷ்ரேயா நல்லா இருக்கோ இல்லையோ, அந்த கலர் ட்ரஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்! அதனால போட்டது!

அப்புறம் நம்ம பதிவ படிச்சு...
உன் கிண்டல் பேச்சு
ஒரு போலிக்கோபம்
அதில் எந்தன் மூச்சு
கொஞ்சம் நின்று போகும்

நம் காதல் கணங்கள்
உந்தன் குறும்பு சினங்கள்
விளையாடும் நம் இரு மனங்கள்
காரணம் சில அழகிய தமிழ் பொய்கள்..


-இதை எழுதியது நம்ம C.V.R

Wednesday, November 07, 2007

தீபாவளி.....நியூயார்க்கில்..

முதல்ல தீபாவளி வாழ்த்துக்கள் மக்களே!


நியூரார்க் - ஜொலிக்கும் நகைகள் அணிந்த பூமகள்.. இருட்டாத பகல்கள்.. Unruly Pedestrians and Drivers!

இதோ கொஞ்சம் படங்கள்...







Friday, November 02, 2007

நியூயார்க் நகரம்... உறங்கும் நேரம்

மக்களே, யாராச்சும் அடுத்த வாரம் 6,7,8 அங்கன இருப்பீங்களா?
நான் வரேன்...............................!