Tagged by Sudhakar :) பாசமா ...கொலை வெறியா?
எனக்கு விவரம் தெரிஞ்சு நான் எடுத்த முதல் தீர்மானம் வாழ்கையில தீர்மானம் எல்லாம் எடுத்து நேரத்த வீணடிக்க கூடாது! தோணினா செய்யணும்! தேவை பட்டா செய்யணும்! நாலு பேருக்கு நல்லதுனா செய்யணும்!(அந்த நாலு பேருல நான் ஒருத்தனா இருக்க வேண்டியது முக்கியமான point!) அப்படின்னு தான்! அதுக்கு அப்புறம் எந்த தீர்மானமும் எடுத்தது இல்லை!
அதுனால நிஜமாவே ரொம்ப நேரம் யோசிச்சும் இதுக்க என்ன எழுதனு தெரியல!அதுக்காக விட முடியுமா? (டேய், இதெல்லாம் என்னடா அநியாயம்!). அதுனால நான் பதிவு உலகத்துக்கு வந்த பிறகு பல பேரு கிட்ட பேசி பழகி இருப்பதில் கிடைத்த சில adviceகளை பாப்போம்! கொடுத்தவங்க நியாபகம் இருந்த வீட்டுக்கு ஆள் ஆட்டோவிலோ, ஏரோபிளேநிலோ அனுப்பாம, சிரிச்சிட்டு மறந்திடனும்!
கலாய்த்தல் திணை! இனி ஆரம்பம்!
1. பொண்ணுங்கள சைட் அடிக்கலாம். ஆனா ஒரு முறை தான் பார்க்கலாமாம். இன்னொரு முறை பார்த்தா தப்பாம்! இத? (அதே பொண்ண திரும்ப வரும் போது பார்த்தா? அதுக்காக பாக்கிற பொண்ணுங்க கழுத்தில போர்டா மாட்ட முடியும்! ஒரு முறை பார்த்துட்டேன்னு? என்ன கொடும டா இது? மம்மி! என்னை அடிக்க வராங்க!)
2. தேவதை கவிதைகளில் நடிகைகள் படம் போட கூடாது. - இத? (அப்பறம் நம்ம படத்தயா போடறது? இல்ல தெரிஞ்சவங்க படத்த போட முடியுமா? பொதுவா ஒரு படத்த போட்டா கூட விடமாட்டாங்களே! நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும்!)
3. கவிதை போடரதையே நிறுத்தணும்! - இத? (தமிழ் சேவைல யாருப்பா கை வைக்கிறது? வளர்க்க விடமாட்டாங்களே!)
4. தலைப்புகேல்லாம் தமிழ்ல பேரு வைக்கணும்! இத? (ஆமா, ஏற்கனவே சினிமாக்கு எல்லாம் தமிழ்ல பேரு வைக்க சொல்லி மான்யம் கொடுத்து தமிழ் வளர்ப்பதற்கு நான்காவது சங்கத்த திறந்து இருக்காங்க! இது ஒன்னு தான் இப்ப பாக்கி! ஏன்டா, இதுக்கு வைக்கிற ஒத்தை பேருல தமிழ் வளர போகுதா? ஒரு வேளை இதுக்கும் பணம் கொடுப்பாங்களோ??... சின்ன பிள்ளை தனமால இருக்கு!)
5. tag போட்டா அதோட விதிமுறைகளை ஒழுங்கா கடைபிடிக்கணும்! இத? (டேய்!, நான் எல்லாம் நாலாவது வகுப்புல பிட் அடிச்சவேன்! என் கிட்ட இப்படி கெட்ட வார்த்தை எல்லாம் பேசின கோபம் வரும்! நாம இங்க நடத்திற olympics க்கு இது ஒன்னு தான் இப்ப குறைச்சல்!)
6. எதையாச்சும் எழுதி இது கவிதை, இது கதை னு நானே சொல்லிக்க கூடாது! இத? (இதுக்காக தனிய ஆளா appoint பண்ண முடியும்? சொன்னாலே பலருக்கு புரியறது இல்லை! எங்கடா கதைன்னு கேட்கறீங்க ;))
7. பதிவ எழுதிட்டு போன பதிவுல இது இல்லைன்னு கவலை பட்டீங்க. அதுனால இத போட்டேன் அப்படின்னு பீலா விடாம, தோணுச்சு எழுதினேன்னு dejenta சொல்லணும்! இத? (ஏற்கனவே கல் எரியறது பத்தாது! இதுல சில பேரு மேல பாரங்கல்லு செங்கல்லு போடலாம்னு எல்லாம் கூட்டம் கூடி பேசறாங்க! இதுல இப்படி உண்மைய போட்டேன்! ஒருத்தன் நல்ல இருந்தா விட மாட்டேன்களே..)
8. தத்துவம் சொல்லறதை நிறுத்தனும்! இத? (G3 சுடுவத நிறுத்தட்டும், வேதா கவிதைய நிறுத்தட்டும்,CVR போட்டோ பிடிக்கறதை நிறுத்தட்டும், கோப்ஸ் ஆங்கிலத்தில் தமிழை நிறுத்தட்டும்,புலி உறுமுவதை நிறுத்தட்டும், ரசிகன் ஆப்பு வைக்கிறதை நிறுத்தட்டும், மத்தாப்பு திவ்யா ஐடியா கொடுக்கிறதை நிறுத்தட்டும்... அப்புறம் நாம யோசிக்கலாம் )
9. அடுத்தவங்களை அதிகமா கலாய்க்க கூடாது! இத? (நானா கலாய்கிறதா? அப்படினா என்ன? ஒண்ணுமே புரியல!)
சரி கடைசியா மேட்டருக்கு வருவோம்! (அடப்பாவி! அப்போ மேல சொன்னதெல்லாம்?) பொதுவா நாம யாரையும் tag எல்லாம் பண்ணுவது இல்லை! ஆனா இந்த முறை! இவங்களுக்கு எல்லாம் ஆப்..ஐ மீன் taggu..!
1. வேதா
2. CVR
3. Divya
4. G3
5. Rasigan
எதோ நான் தான் இப்படி போட்டு ஏமாத்திட்டேன்.. நீங்களாச்சும், முன்னால link எல்லாம் பார்த்து ஒழுங்கா போடுங்கப்பு!.. (ஹேய் யாருப்பா, சொல்லிட்டு ஆரம்பிக்கணும்! பேசிகிட்டு இருக்கும் போதே கல்லு எரியற?).