தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் என்ன வித்தியாசம்? தன்னால மட்டும் தான் முடியும்னு சொன்னா தலைக்கனம். தன்னாலயும் முடியும்னு சொன்னா தன்னம்பிக்கை (சரி.. சரி.. கஜினில பார்த்துட்டீங்க..)
பற்றுக்கும் வெறிக்கும் என்ன வித்தியாசம்?
வெறினா உடனே என்ன நியாபகம் வரும்? ஜாதி வெறி. மத வெறி. கட்சி வெறி.. அது தப்புனு உடனே சொல்லிடறோம். (அதுவே தப்பு இல்லைனு நினைச்சீங்கனா.... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை! சந்தோஷமா இருங்கப்பு) அது போக நிறைய இருக்கு.
மொழி வெறி: இதுவும் தப்பு தாங்க. மொழி என்பது மனதில் தோன்றும் எண்ணங்கள் பிறரை சென்று அடையும் ஒரு வழி. அவ்வளவு தான். தமிழ்ப்பற்று இருக்கலாம். வெறி இருக்க கூடாது! தமிழ் பதிவுல ஆங்கில வார்த்தை போட கூடாது.. தமிழ் சினிமாக்கு தமிழ் பெயர் வைச்சா வரி விலக்கு.. என்னங்கடா காமெடி பன்னறீங்க!!!!! ;)
கலாச்சார, பண்பாட்டு வெறி: ஒரு முறை ஒரு அரசியல்வாதி சொன்னான் கமலை(நடிகர் கமல்) பற்றி ஒரு பேட்டியில். உதட்டுக்கு உதடு முத்தம் கொடுக்கிறது தமிழ் கலாச்சாரம் இல்லை அப்படினு. (தெரியலை. இவன் ஒரு வேலை கை கொடுக்கிறது தான் முத்தம்னு நினைச்சிட்டு இருக்கானோ?). ஜீன்ஸ் போட கூடாது, கதர் போடனும்னு இன்னமும் சொல்லிட்டு திரியற ஆளுங்க இருக்காங்க. தப்புனு சொல்லலை. கலாச்சார பாசம் இருக்கலாம். நீங்க போடாதீங்க. உங்க பொண்ணை தாவணி கட்டி காலேஜ் அனுப்புங்க. அடுத்தவர்களை கட்டாயப்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.
நம்ம மும்பைல காமெடி செய்வாங்க. பார்க்ல காதலர்கள் உட்கார்ந்தா அது இந்திய கலாச்சாரம் இல்லைனு இவனுங்க ரகளை செய்த காலம் உண்டு. ஏன்டா.. பிறந்ததுல இருந்து அங்க தான இருக்க. பாம்பே ரெட்லைட் ஏரியாவை முதல்ல சுத்தம் செய்யறது தான! காதலர்கள் தான் கிடைத்தாங்களா? (திரும்ப எதுவும் செய்ய முடியாதுல.. ஸ்டூடண்ட்ஸ் பவர் மண்ணாங்கட்டி எல்லாம் சும்மா! வெத்து பேச்சு. இந்த லூசு சிம்பு படத்துல தான் பேசிட்டு திரிவான். பார்த்து நம்பிடாதீங்க! உயிரோட நாலு பொண்ணுங்களை எரிச்சப்ப எல்லா காலேஜ் ஸ்டூடண்ட்ஸும் சேர்ந்து கிழிச்சத தான் பார்த்தேன்ல! அட.. சும்மா அமைதி ஊர்வலம் போலாம் வாங்கடானு சொன்னா கூட இஞ்ஜினியரிங் பசங்க எங்க வந்தாங்க!)
உங்க வீட்டுல இருக்கும் வரை நீ உன் கலாச்சாரம்னு சொல்லி கோமணம் கட்டிகிட்டு இரு. We dont care. அடுத்தவங்க எப்படி இருக்கனும்னு நீ சோல்லாத!
1000 வருஷம் முன்னாடி சைவர்களும் வைணவர்களும் அடித்து கொண்டு செத்தார்கள். 500 வருஷம் முன்னாடி சமணர்களை கழுவில் ஏற்றியது சைவமும் வைணவமும். 100 வருஷம் முன்னாடி பொண்ணுங்களை உயிரோட எரிச்சீங்க. (இப்பவும் தான்!). கலாச்சாரம், பண்பாடு என்பது காலத்துக்கு ஏத்த மாதிரி மாற தான் செய்யும்! புரிஞ்சுகோங்க. "மாற்றம் என்பது மானிட தத்துவம்.. மானிட தத்துவம் மகத்துவம் அறிவீர்"... கண்ணதாசன் வரிகள்.(I think so )
தேசிய(இந்திய) வெறி: First, I have to agree i had this for a long time. It took me 3 years staying outside India to cure me out of this. I dont think it has made me less Indian. If anything, now i understand more abt why I am proud to be an Indian. And NO. it doesnt mean I think we are the best, most generous, kind hearted, blah blah blah... greatest culture in the world.
நீங்க காசுக்காக வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வேலை பார்ப்பதை .. Microsoft Runs because of Indians என்றும், தமிழ் மன்னர்கள் மலேசியா மேல எல்லாம் படை எடுத்ததை மறந்து, India never Invaded any country என்றும், முதன் முறையா மதபோதகர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினது நாம தான் என்பதை மறந்து India never aggresively spread its religion என்றும் சொல்லி chain mail அனுப்பினா உண்மையாகாது!
Without knowing the truth and just blindly following something is similar to the 'Faithfullness' trait of a dog. You dont have to be a human to do it. புரிந்து நேசியுங்க. அது தான் மனிதம். அந்த நேசம் வெறியாகாம பாத்துக்கோங்க. கர்ணன் எவ்வளவு தான் நல்லவனா வல்லவனா இருந்தாலும், அதர்மம்னு புரியாம அவன் வைத்திருந்த நட்பு தான் அவனை கொன்றது.
இப்படி சொல்லிட்டே போகலாம். கடவுள்ல இருந்து காதல் வரை எதுல வெறி இருந்தாலும் தப்பு தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!
அப்புறம் இன்னும் ஒரு பரவலான அபிப்பராயம்.. இந்த குறிப்பிட்ட ஜாதி/மதம்/மொழி சம்பந்த பட்டவர்கள் அதுல வெறியா இருப்பாங்கனு. Pls dont generalise. இந்த வெறிக்கு மதம் ஜாதி மொழி தேசம் இதெல்லாம் ஒரு சாக்கு தான்.
வெறி என்பது ஒரு நோய். எப்போ உங்க கொள்கைக்காக அடுத்தவங்க கஷ்டபடுவது தப்பே இல்லைனு நினைக்கறீங்களோ (ஏனா உங்க கொள்கை அவ்ளோ உசத்தில :P) அப்போ உங்களுக்கு அந்த நோய் முற்றி விட்டதுனு சொல்லலாம். உன் கொள்கைக்கு நீ உயிரை கொடு. என்னத்தனா பன்னு. அதுக்கு சம்பந்தம் இல்லாதவரை அது எப்போ பாதிக்க ஆரம்பிக்குதோ.. அப்போ அந்த கொள்கை மேல உள்ள உன்னோட பற்று வெறியா மாறுது. அந்த வெறி உன்னையும் உன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் கெடுதல் மட்டுமே செய்ய முடியும்.
அப்ப வித்தியாசம் வெறிக்கும் பற்றுக்கும் புரியுதாங்க? Any 'நச்' one liners?