Wednesday, October 31, 2007

கவிதை M.A

எங்கடா பரிசு அப்படினு எல்லாரும் துரத்தி விரட்டி.. இப்ப இங்க... இப்படி...

மதித்து கவிதை எழுதின எல்லார்க்கும் நன்றி. கவிதைகள் குழந்தைகள் மாதிரி. 5 குழந்தைல, இது தான் ரொம்ப நல்ல குழந்தைனு எப்படி சொல்லுவேன்? ஒவ்வொன்றும் ஒரு விதம்...

மு.கு:: ஆக்சுவல் பரிசுகள் என்னுடைய 75வது பதிவில் கொடுக்கப்படும்.
அட நிஜமாங்க!


//சப்தமில்லாமல் அசைவது சலனமாமில்ல - ரசிகன்//
இந்த வரிகள் அசத்தல்...

//நொடிகள்புரண்டும் நிறுத்தமறுக்கும்
உன் விழிப்பட்ட சலனமட்டும்... - ஜி//
நச் வரிகள்...

//கல்லெறிந்தவனின் குற்றமோ
அனுமதித்த உன் குற்றமோ - வேதா
..// என மொத்த கவிதையிலும் ஆழ கருத்துக்கள்..
அருமை...

//மனதுக்கு இனியவள்!
அருகில் அம்சமாய் நான்
மரிக் கொழுந்தாய் மச்சினி! - அம்பி//
ROFL! கவிதையில் நகைச்சுவை தூவி..

//என் தனிமையின் முகவரி
தேடிப்பிடித்து என் முன் வந்தாள் - C.V.R
// சீக்கிரம் வருவாங்க! வாழ்த்துக்கள். உங்களுக்காக ஒருத்தி எங்கேனும் பிறந்து வளர்ந்து காத்திருக்கின்றாள். தேடினாலும், தேடானாலும், பார்த்தாலும், இல்லாலும், கிடைப்பாள்.. கிடைக்கும்.



சரி, சமாளிச்சாச்சு. இனி மேட்டர்க்கு. போன வாரம் மட்டும் 78 மணி நேரம் வேலை பார்த்தேன்.. இந்த வாரம் கொஞ்சம் பரவாயில்லை. வேலை கொஞ்சம் கம்மி..

ம்ம்..இன்னைக்கு தான் தமிழ் M.A படம் பார்த்தேன்... எல்லா படமும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த படம் மனதில் உறங்கி இருக்கும் பழைய நினைவுகளை தட்டி எழுப்புகின்றது. எவ்வளவு சின்ன முடிவுகள்... எவ்வளவு எளிதாய் உலகம் மாறுது!

சின்ன வயசுல என்ன ஆகனும்னு கேட்டப்ப, தமிழ் வாத்தியார்னு சொன்னவன் நான். தமிழ்னா உயிர். ஆனா தமிழ், 12வதோட போச்சு. தமிழ் படிச்சு இருந்தா இப்படி தான், 2000 ரூபாய் சம்பளத்துக்கு இருந்திருப்பேனோ? தமிழ் இனி மெல்ல சாகும் னு சொன்னாங்க. நாமளே கொல்லுவோம் என்பதை மறைப்பதேன்...?

கற்றது தமிழ்..... அழகு. அழகு எப்போதும் மகிழ்ச்சியை தருவதில்லை. உண்மைகள் இனிப்பதில்லை.

இந்த உலகத்தில் பொய் மட்டும் இல்லனா... அழகு ஏது? அதிசயம் ஏது? ....

love marriage னா, பொருள் வராது.. பொண்ணு வரும்..Arranged marriage னா பொருள் வரும்.. பொண்ணு?(ணோட மனசு) வருமா.... ? படத்தின் நச் வசனங்கள்..

"Unbutton me", "Touch me here If you Dare" போன்ற வசனம் எழுதி, பாரதி கண்ட புதுமைப்பெண், ஆண் வர்க்கத்தின் egoism அதை தவறாக பார்ப்பதாக சொல்கின்றாள். பெண்ணாக இருக்கனும் என்பது என் கருத்து. (இது பெண்களிம் சுய உரிமையை மறுக்கும் கருத்தல்ல. ஆண் பெண் சமம் என்பது முட்டாள்தனம். இருபாலர்க்கும் சில ஏற்றத்தாழ்வுகள் உண்டு. they compliment each other. Trying to be masculine doesnt make feminine equal to it.. nor greater... nor lesser... How can Yin and Yang be equal or one better than the other? But yes they are opposing forces of the same balance. என்பது என் மனப்பான்மை. தவறாயிருக்கலாம்)

வண்டியில் போகும் போது காதலி தோளில் சாய்வாள் பாருங்க. ஒரு நிமிஷம் இதயம் நிற்கும். எப்பவாச்சும் உங்களுக்கு இந்த நிமிஷத்தோட செத்திடனும்னு தோன்றி இருக்கா?
5 வருஷமா பழகி காதலிச்ச பொண்ணு தோளில் சாய்ந்தால் கண்டிப்பா தோணும்..
ஆணும் பெண்ணும் தொட்டுப் பேசறது இப்போ சாதாரணமாயிருக்கலாம். ஆனாலும் கூட...
ம்ம்ம்ம்... என்ன சொல்ல... சில விஷயங்களை விளக்க முடியாது.. உணர வேண்டும்..
உண்மையின் பிரதிபலிப்புக்கள்... சினிமாவிலும்.

தைரியமாக படம் எடுத்த டைரக்டருக்கும், producerக்கும், நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கின்றது தமிழுலகம். இப்படி பட்ட படங்களை ஊக்குவித்தால் தான், தமிழ் பட கலாச்சாரம் கொஞ்சமாச்சும் மாறும். (எங்க வீட்டுல என்னை தவிற யாருக்கும் பிடிக்கல என்பது வேற மேட்டர்!).. நடிகரின் நடிப்பு ... 10/10. அப்புறம் யாருப்பா அந்த பொண்ணு. So cute!

ஏப்பா, 2000 வருஷமா இருக்கும் மொழிப்பா.. அவ்வளவு லேசில் போகாது! அப்படினு வேதாந்தம் பேசாதீங்க. > 2000 வருஷமா இருந்த civilisation - Native Americans. ஒரு 200 வருஷத்தில், சுவடில்லாமல் அழியவில்லையா?

ஆரம்பம் ஆன எல்லாத்துக்கும் முடிவுண்டு. மறுப்பில்லை. எனக்கும், உங்களுக்கும்.. தமிழுக்கும். ஆனால் சில விஷயங்களுக்கு ஆரம்பமே இல்லை. தமிழை எப்ப நேசிக்க ஆரம்பிச்சேனு எனக்கு தெரியாது.

ஏனோ தெரியவில்லை
காதலுக்கான
அணைத்து முயற்ச்சியும்
விரிசலில்.. விலகலில்
(எழுத்து பிழைகளோடு)
முடிகின்றது.
இப்பதிவு
என் காதலுக்கான
கடைசி சந்தர்ப்பம்..
தங்குவாளா தமிழ்?

35 மறுமொழிகள்:

d4deepa said...

super....... tamil mela evvalavu patra.

Raji said...

Naan innnum padam pakkala..indha weekend paarthutu solluraen...

ungal tamil patru vazhga...

Apuram prize ennanu sollavae illayae...

Raji said...

idhu dhaanga en mandaikku ettinadhu unga headingaa paarthu:)

மனகுளத்தில் விழி கற்களை எறிந்தாய்
சலசலப்பை சலனமாக நினைக்க தோன்றவில்லை
ஓவிய வளைவுகளை காதலாக நினைக்க தோன்றியது
என் மனதில் நிலைத்த அந்த ஓவியம் ஏனோ
உன் விழிகளை நீரில் முழ்கசெய்துவிட்டது

Raji said...

//78 மணி //

paarthunga ivalavu neram laam velai paarkuradhulaam nalladhilainga...Take care.

ரசிகன் said...

// மதித்து கவிதை எழுதின எல்லார்க்கும் நன்றி. //
சாய்ச்சுபுட்டீங்களே மாமு..சாய்ச்சுபுட்டீங்களே மாமு..(பிரியலியா?.. நம்ம வீட்டுக்கு வந்து பாருங்க..பிரியும்)ஹிஹி...

ரசிகன் said...

// பொண்ணு வரும்..Arranged marriage னா,பொண்ணு?(ணோட மனசு) வருமா.... //இதுக்கு நான் முரண் படரேன்.
ஏனுங்க.. அப்ப எதுவுமே எதிர் பார்க்காத Arranged marriage செஞ்சிக்கிட்டவங்க உண்மையா நேசிச்சிக்கிறதில்லையா?

ரசிகன் said...

// வண்டியில் போகும் போது காதலி தோளில் சாய்வாள் பாருங்க. ஒரு நிமிஷம் இதயம் நிற்கும்.//
ஆஹா நெனச்சு பாக்கவே நல்லாயிருக்குதே.. ஏனுங்க சிவா ..சொந்த அனுபவமோ?..
//ம்ம்ம்ம்... என்ன சொல்ல... சில விஷயங்களை விளக்க முடியாது.. உணர வேண்டும்..//
ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்...ஹிஹி...

ரசிகன் said...

// எங்க வீட்டுல என்னை தவிற யாருக்கும் பிடிக்கல என்பது வேற மேட்டர//
கவலை படாதிய்ங்க..
// அப்புறம் யாருப்பா அந்த பொண்ணு. So cute!//
அதான பாத்தேன்.. படம் புடிச்சதுக்கான காரணத்த..ஹிஹி...

ரசிகன் said...

// ஆரம்பம் ஆன எல்லாத்துக்கும் முடிவுண்டு//
வட்டதுக்கு ஆரம்பம்,முடிவு இல்லன்னு பள்ளிக்கூடத்துல சொல்லிக்குடுத்தாய்ங்களே..
(நம்ம தமிழ் பதிவர்களோட லொள்ளுக்கு கூட..)ஹிஹி..

நாகை சிவா said...

நல்ல பதிவு..

தமிழ் ஏம்.ஏ. நல்ல படம் தான். ஆனால் குறிப்பிட்டு கணிணி துறை சாடி இருப்பது தான் தவறு.

நான் கணிணி துறை அல்ல...

என்னை பொறுத்த வரைக்கும் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் பெற்றுக் கொண்டு தான் இருக்கு. குறிப்பாக வரும் இளைய சமுதாயத்துடன். பலருக்கு படிக்கவோ எழுதவோ தெரியவில்லை. :(

இப்போதைக்கு ஒரே நல்ல விசயம், தமிழில் வரும் பதிவுகள் எண்ணிக்கை உயர்கின்றது. அதுவரை மகிழ்ச்சியே

G3 said...

//கவிதைகள் குழந்தைகள் மாதிரி. 5 குழந்தைல, இது தான் ரொம்ப நல்ல குழந்தைனு எப்படி சொல்லுவேன்? ஒவ்வொன்றும் ஒரு விதம்...
//

Nallavae samalikkara raasa :)

G3 said...

//அழகு எப்போதும் மகிழ்ச்சியை தருவதில்லை//

Idhu konjam odhaikkudhey.. [seri thalli ninnukkonganellam sollapudaadhu :P]

G3 said...

//Arranged marriage னா பொருள் வரும்.. பொண்ணு?(ணோட மனசு) வருமா.... //

Adhu enga arranged marriage ellamae virupamillamala nadakkudhu? adhulayum kaadhal irukku.. sila arranged marriages vena out of compulsion ponnoda sammadham illama nadakkalaam but thats not the case always.

G3 said...

//How can Yin and Yang be equal or one better than the other? But yes they are opposing forces of the same balance. என்பது என் மனப்பான்மை//

Indha pointae appadiyae naan othukkaren.. Thats my mindset too :)

G3 said...

//வண்டியில் போகும் போது காதலி தோளில் சாய்வாள் பாருங்க. ஒரு நிமிஷம் இதயம் நிற்கும். //

:)) Andha nigazhchiyae oru arumaiyaana kavidhai dhaanae ;)

G3 said...

//ஏனோ தெரியவில்லை
காதலுக்கான
அணைத்து முயற்ச்சியும்
விரிசலில்.. விலகலில்
(எழுத்து பிழைகளோடு)
முடிகின்றது.
இப்பதிவு
என் காதலுக்கான
கடைசி சந்தர்ப்பம்..
தங்குவாளா தமிழ்?//

Super kavidhai.. ippadiyae pochunna unga kavidhaigalukkaaga enguvaal thamizh :)

G3 said...

Seri romba pesitten. Aana naan innum padam paakalae :P

G3 said...

///78 மணி //

paarthunga ivalavu neram laam velai paarkuradhulaam nalladhilainga...Take care.//

Repeatae :)

Dreamzz said...

@d4d//super....... tamil mela evvalavu patra.//
thanks anni :)

Dreamzz said...

@raji
//puram prize ennanu sollavae illayae...//
shhh.. athellam solla koodathu... atha ennoda 75th postla poda poren..

Dreamzz said...

@Raji
//மனகுளத்தில் விழி கற்களை எறிந்தாய்
சலசலப்பை சலனமாக நினைக்க தோன்றவில்லை
ஓவிய வளைவுகளை காதலாக நினைக்க தோன்றியது
என் மனதில் நிலைத்த அந்த ஓவியம் ஏனோ
உன் விழிகளை நீரில் முழ்கசெய்துவிட்டது//
அட்ரா அட்ரா... கவிதை அசத்தல்! கலக்கற்றீங்க!

Dreamzz said...

@@ரசிகன்
//அப்ப எதுவுமே எதிர் பார்க்காத Arranged marriage செஞ்சிக்கிட்டவங்க உண்மையா நேசிச்சிக்கிறதில்லையா?
//
அப்படி இல்லைங்க! எல்லா கருத்துக்களும் பொதுவானவை இல்லை. காதலை காசு வரும் என தட்டி விடும் வாலிபர்களுக்கு இந்த டயலாக்.

Dreamzz said...

@ரசிகன்.

இதோ வந்து பார்க்கின்றேன்..

Dreamzz said...

@ரசிகன்
//ஆஹா நெனச்சு பாக்கவே நல்லாயிருக்குதே.. ஏனுங்க சிவா ..சொந்த அனுபவமோ?..//
என்னதுங்க? காதுல சரியாஅ விழல. :PP

Priya said...

Very touchy indeed.

Dreamzz said...

@நாகை சிவா
//தமிழ் ஏம்.ஏ. நல்ல படம் தான். ஆனால் குறிப்பிட்டு கணிணி துறை சாடி இருப்பது தான் தவறு//
உண்மை தான். ஆனால், அதை தமிழின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கவும். தான் வளர்த்த பிள்ளைகள் காசுக்காக தன் பெயரை மாற்றி, மொழி மறந்து, பேச கூசப்பட்டு... கணிணி மேல தப்பு இல்ல.. தப்பு எப்பவும் மனிதர்கள் தான் பன்னுவாங்க...

Dreamzz said...

@@g3
//Nallavae samalikkara raasa :)//
உங்க ட்ரையினிங்!

Dreamzz said...

@G3
//Adhu enga arranged marriage ellamae virupamillamala nadakkudhu? adhulayum kaadhal irukku.. sila arranged marriages vena out of compulsion ponnoda sammadham illama nadakkalaam but thats not the case always.
//
ரசிகனுக்கு சொன்னது ரிப்பீட்டு! இது எல்லார்க்கும் அமையும் பொது கருத்தல்ல.

Dreamzz said...

@g3
//Indha pointae appadiyae naan othukkaren.. Thats my mindset too :)//
:D


//Seri romba pesitten. Aana naan innum padam paakalae :P//
:D seekiram paarunga.

Dreamzz said...

@priya
seekiram elunthiteenga pola :D
thanksnga :)

ஜி said...

:))))) neraiya mattera ore postla sollirukeenga...arumai...

(thanglish la type panrathukku reason thamiz meethu patru illaama illai.. inga officela thamiza type panna mudiyaathu.. athaan :))

ambi said...

நானும் கேள்விப்பட்டேன் அந்த படத்தை பற்றி, இனிமே தான் பார்க்கனும்.

சொக்கா அந்த ஆயிரம் பொன்னுல என் பங்கு எவ்ளோ? தீவாளி வேற வருது. நிறைய செலவு இருக்கு. :p


//பிராந்திய மொழிகளில் எழுதப்படுகிற வலைப்பக்கங்களில் தமிழுக்கு தான் முதலிடம் என்று நினைக்கும்போது தமிழ் இனி மெல்ல மீட்டெடுக்கப்படும் என தான் தோன்றுகிறது //
@veda, அட, தீர்ப்பு சொல்லிடாங்க பா நம்ம புரபசரம்மா! :p

MyFriend said...

வித்தியாசமான ஒரு பதிவு தினேஷ். உங்க எழுத்துக்கள் நாளுக்கு நாள் மெருகுடிக்கிட்டே போகுது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். :-)

Sudha said...

Tamiz chagadu.Adil pira mozhi chorkal vandu kalakkum.English oru absorbing language.Adavadu adil pira mozhi chorkal elidil cherum.Adanal spread um adikam.Tamil oru closed language .Tamilukku tuya tamil chorkal undu alladu uruvakkuvarkal.Idu ellamal angilam pol tamililum pira mozhi chorkal kalandal tamilin spread adikarikkum.Adu entrum nilaittu nirkum.CT scanai Tamilil cT scannu cholla vittal podum, adai vittu oodukadir ultalappada kanakkittu karuvi nu mozhi peyarka thevai illai.Enna karuttotrumai unda?

ரசிகன் said...

மாம்ஸ்....
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.