தவறும்.. சரியும்...
இந்த பதிவை முதல்ல படிங்க. அப்புறம் நம்ம அண்ணன், இந்த தொடர விட்டாச்சு.
ஹ்ம்ம்.. அட இது தவறு.. சரினு நியாயபடுத்தல நான்.. பொய் சொல்லுவது தப்பு தான்.. Obviously. ஆனா, நாம எல்லாருமே ஏதேனும்மொரு சமயத்தில் பொய் சொல்லி தானே ஆகிறோம்..
There Is evil.. And there is necessary evil. அதாவது, சமூகத்தின் சீரான செயல்பாட்டை காப்பாற்றும் தவறுகள். அளவுக்கு மிஞ்சினால் எப்படி அமுதம் நஞ்சாகுதோ.. அதே மாதிரி சில நேரம், கொஞ்சம் குறைந்த அளவு நஞ்சு, மருந்தாகும்.
முதல்ல போதை மருந்து. அமெரிக்காவில் ஒரு ஆய்வில், ஒரு பெரிய நகரத்தில், போதை மருந்துகளை முற்றிலுமாக ஒடுக்க முயற்சித்தால், Robbery, assault, aggressive behaviour கூடுவதாக கண்டுபிடித்து இருக்கின்றார்கள். ஏனா, இவங்க வயலன்ஸ்க்கு ஒரு வடிகாலாய் இருந்த போதை மருந்துகள் கிடைக்கல. அதுனால தான் இதுன்னு கண்டுபிடிச்சாங்க.
இதே மாதிரி தான் Prostituion. As they closed this industry, they found the incidence of sexual assaults went up in that city.
இது மாதிரி.. நம்ம சமுதாய அமைப்பினால, சில பல தவறுகள் வெளிப்படையாக அங்ககரீக்க படவில்லை என்றாலும்.. நமது ஒட்டு மொத்த சமுதாயத்தின் Foundation ஐ மாற்றும் வரை.. தேவையான ஒன்றாகவும்.. ஓரளவில்.. கட்டுபடுத்தபட்ட.. necessary evil என்றாகவும் ஆகின்றது..
(இவ்ளோ ஏன், தீபாவளி முடிஞ்சா நம்ம ஊர்ல வெட்டு குத்து கம்மியாகும் சில மாதங்களுக்கு.. ஏன் தெரியுமா? ஏனா, பட்டாசு கூட நமக்குள்ள இருக்கும் வன்முறையை கொளுத்தும் ஒரு வடிகால் தான்.)
சரி.. நம்ம லெவலுக்கு வருவோம்..
அட உங்கள்ல எத்தன பேருப்பா இந்தியாவில் உங்க டிரைவிங் லைசன்ஸ்க்கு ரூபாய் வைக்காமல் வாங்கனிங்க? இல்ல எத்தன பேரு Police clearance certificate வாங்கும் போது போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு பேப்பர் கட்டு கூட அழாம வாங்கனீங்க? போஸ்ட்மேனுக்கு 5ஓ 10ஓ வெட்டாம இருந்தீங்க? Until we fundamentally change.. இதெல்லாம் நடக்க தான் செய்யும்.
ஒரு வேலைல Interviewer ஆ இருந்தால், வெள்ளை காரனை விட நம்ம ஊர்க்கரன் வர மாட்டானானு மனசு சொல்லும். இந்திய ஆட்களிலே, தமிழன் இருக்கமாட்டானானு ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கும். It is impossible to be fair always. நாம அப்படி இருக்க emotions இல்லாத இயந்திரங்கள் கிடையாது.
(என்ன சொல்ல வந்து என்ன சொல்லிட்டு இருக்க?? ஹிஹி)
சில தவறுகள் தெரிந்தே செய்து தான் போகின்றோம்.. ஆனால் சமுதாயத்தாலும், காலத்தினாலும் நிர்பந்தத்தாலும் என்று நான் இவைகளை நியாயபடுத்தல. but this is reality.கண்ணை மூடிக்கிட்டு, இதெல்லாம் எதுவுமே இல்லைனு சொல்லிகிட்டு இருக்கலாம். இதை பத்தி பேசினா இதை அங்கீகாரம் செய்வதா அர்த்தம் இல்ல. ஏனா நாம அங்கீகாரம் பன்னாலும் பன்னலனாலும், தப்பு செய்யறவன் செஞ்சுட்டே தான் இருப்பான். Donot Share the needles, புள்ளிராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா - விளம்பரங்கள் தவறை அங்கீகரிப்பதில்லை. நிதர்சனத்தை சொல்கின்றன.. அதில் கவனம் தேவைனு சொல்கின்றன.. Mistakes are unjustifiable. agreed. but sometimes they are also inevitable.
ஓரினச்சேர்க்கை (Lesbians and Gays) நம்ம ஊரில் சட்டப்படி குற்றம். North Americaவில் சட்டப்படி நியாயம். இதுல எது சரி? எது தவறு? I donot believe this makes Indians Morally superior or too narrow minded. It is as it is.
கடைசியா ஒன்னு. தப்பு செய்யலாம். Please do not try to assert your moral superiority over others or Please do not try to justify your wrong action. பாவமே செய்யாதவன் எரியட்டும் முதல் கல்லை. There is no absolute wrong or right. And If you think you havent done any sin todate, either you are stupid enough to deceive yourself or your age is 1 :P
இது தான் சரி. இது தான் தவறு எனும் கருப்பு வெள்ளை உலகமில்லை இது. கண்ணை திறங்க. வெள்ளைக்கும் கருப்புக்கும் இடையில் எவ்வளவோ வர்ணங்கள் இருக்கு. I, do not happen to be colour blind. நீங்க எப்ப கலர் டிவிக்கு மாற போறீங்க..?