Tuesday, February 26, 2008

யாரடி நீ மோகினி..

கண்டதும் காதல் எல்லாம்
கட்டுக்கதை..
என சொல்பவன் எவனும்
உன்னை
கண்டதில்லை போலும்

விழி திறந்தும்
கலையாத
கனவு தேவதை
நீ..

உன்னை படைத்த
இறைவன் இரக்கமில்லாதவன்..
என்னை படைக்காமலேயே
இருந்து இருக்கலாம்..
பார்வை இல்லாதவன்
வெளிச்சத்திற்கு ஏங்குவதில்லை!

எல்லாமான கடவுள்
எங்கும் தெரியவில்லை..
எங்கேயோ இருக்கும் நீ
எல்லாமாய் தெரிகின்றாய்..

உன்னில் தொலைந்த இதயத்தை
கண்டுபிடிக்க முடியவில்லை..
என்னில் கிடைத்த காதல்
படித்தறிய முடியவில்லை..

என் இதயத்தை விட்டுவிட்டு
உன் காதலில் உயிர் துடிப்பது
மட்டும் நிஜமாய் போனது..

இதே தலைப்பில் ஒரு படம் இருப்பது, யாத்ரீகனின் இந்த பதிவை பார்த்த பின்பு தான் நியாபகம் வந்தது. அவர் பதிவிட்டிருக்கும் அதே பாட்டு.. இங்கேயும்..

Wednesday, February 20, 2008

போகாதே.. (அழகிய கவிதை - III)



அழகிய விதை
சொல்லவிட்டு சென்றவளே..
மனதில் விதை
விதைத்த வெண்ணிலவே..
எனற்கு பிடித்த
மாதங்களில் தை
மரணங்களில் நீ..

சிகப்பு ரோஜா
மஞ்சள் வெயில்
நீல வானம்
எல்லாவற்றையும் விட..
அழகியது
உனற்கும் எனற்குமான
கருப்பு வெள்ளை நினைவுகள்..



இமை மூட
காத்திருக்கும் விழியானதடி
என் காதல்..
காத்திருப்பின் சிகப்பில் கூட
கண்ணீரில்லாமல்
காதல் தான் வழிகின்றது..

மழை பேசும்
மொழியெல்லாம்
எனற்கு புரியாது..
நான் குடையில்லா ரசிகன்..
என் காதலுக்கும்
நான் ரசிகன் தான்..



நீ வேற்று மொழி
கவிதை போலும்..
பிடித்திருக்கின்றது
ஆனால் புரியவில்லை..

இரவெல்லாம்
பகல் வர காத்திருந்து
பகலெல்லாம்
இரவு வர காத்திருக்கும்
விந்தையின் பெயர் தான்
காதலோ?



ஆயிரம் நட்சத்திரம்
மின்னினாலும்
ஒற்றை சூரியனில் தான்
விடியலும் இருட்டலும்..

ஆயிரம் கவிதைகளை
ரசித்தாலும்
அழகிய கவிதை உன்னில் மட்டுமே
என் ஜனனமும் மரணமும்..

Thursday, February 14, 2008

இன்று காதலர் தினமாம்..

மு.கு: (முத்தக் குறிப்பு என அர்த்தமில்லை :P)
Added later. மக்கா இந்த பதிவுல கொஞ்சம் எட்டி பாருங்க. நம்ம சகா என்னமா உருகி இருக்கார்னு.
ஒற்றை அன்றில் ..ஸ்ரீ





காதலர் தின வாழ்த்துக்கள் மக்களே!

Tuesday, February 12, 2008

காதலிப்பது எப்படி...

இதுக்கு முன் எத்தணையோ முறை முயற்சி செய்து இருக்கேன்.. ஆனா இப்போ தான் கடைசியா செட் ஆச்சு! நிஜம் தாங்க. என் இரண்டு வருட தவம்..இது ரொம்ப கஷ்டம். ஆரம்பிக்கும் போது ஈஸியா தெரியும். ஆனா, ஒவ்வொரு படி தாண்டும் போதும்.. ஓவ்வொரு அனுபவம். கண்டிப்பா chance ஏ இல்லனு தான் நினைச்சேன்.. ஆனா கடைசில... நடந்திடுச்சு! நான்.. நான்.. 100வது பதிவு எழுதிட்டேன்! (சரி சரி.. அடிக்க வராதீங்க!)


சரி..பதிவு எங்கே இந்த வாரத்துக்குனு கேட்பவர்களுக்கு.. அது இங்கன இருக்கு. நம்ம வ.வா.ச பாசக்கார பயலுக, அங்க எழுத சொல்லி கூப்பிட்டு இருந்தாங்க. அதுனால அங்கன போய் படிங்க மக்கா! காதலிப்பது எப்படினு தெளிவா சொல்லி இருக்கு!

சரி வந்தது வந்தாச்சு.. ஒரு குட்டி கவிதை..



முறைக்காதீங்க.. சின்னதா கவிதை எழுதினாலும் குட்டி கவிதை தான்.. ஒரு அழகான பெண்'குட்டி' (மலையாளம்.. மலையாளம்) கவிதை கணக்கா இருந்தாலும் அதே தான்! சரியா!

Saturday, February 09, 2008

(அழகிய கவிதை - II) இப்படிக்கு நான்..



இரெண்டு வரி திருக்குறளை
விடவும் அழகு..
உன் இருவிழி திருகுரல்..
வள்ளுவன் தோற்றான் உன்னிடம்..

காதலித்து பார்
கவிதை வரும்.. சரி..
கவிதையை காதலித்தால்..
நீ வருவாயா?



நிலவுப்பெண் தானடி நீ..
இரவெல்லாம் கனவில் தோன்றிவிட்டு
நிஜத்தில் விடிந்ததும்
மறைந்து போகின்றாய்..

சூரியப்பெண் தானடி நீ..
காலையில் விழி திறந்து ஆசை காட்டி
மதியம் சுட்டெரித்து விட்டு
மாலை மயக்கத்தில் மறந்தும் போகின்றாய்..



"உங்களுக்கு என்ன இசை பிடிக்கும்?"
கேட்பது நீ..
உனற்கும் எனற்குமான
குழந்தையின் மழலை பிடிக்கும்..
வெட்கப்படும் நீ..
அட.. இந்த வெட்கத்தை ரசிக்கத்தான்..
நான் திருக்குறளை கூட
கடன் வாங்க வேண்டி இருக்கு..

"காதல் பொய்யா?" ..நான்..
"இருக்கலாம்.. இல்லாமலிருக்கலாம்" ..என நீ..
எல்லாம் நீயாக இருக்கும்பொழுது
மீதி எதுவும் இல்லாமலிருக்கும்
என சொல்கின்றாயோ?



எங்கிருந்து ஆரம்பித்தாலும்
அது கடைசியாக பூமியில் விழுவதாக..
எதைப்பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தாலும்
அது இறுதியாக உன்னில் முடிகின்றது..

எல்லா கவிதையும்
கற்பனை தான் என்றிருந்தேன்..
அழகிய கவிதை
உன்னை பார்க்கும் வரை...

நீ வந்து அணைக்கும் வரை
எரிந்து கொண்டிருக்கும்
உன் வாசல் தீபமாய் நான்..

A for Anna.. B for Birthday.. C for Cake... K for..?

சரியா தான் யூகிச்சீங்க! கார்த்திக் ராஜா! நம்ம கார்த்தி அண்ணன் தான்!

அண்ணா!
ஊருக்கே நீ ஒரு மன்னா!
அந்த சூரியனுக்கே நீ சன்னா!
லண்டனில் நீ தான் கண்ணா!
எல்லார்க்கும் கொடுக்கும் பன்னா!
கிரிக்கெட்ல நீ போனா 100 ரன்னா!
உன்னை பார்த்துதேன் ஐஷ் ஆகல நன்னா!
நீ எதுல கால வைச்சாலும் வின்னா!
நிக்கிற நீ டன்னா!
(சரி சரி...இதுக்கு மேல எனக்கே தாங்கல.. ஹிஹி)

அண்ணா! பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

உங்க எண்ணப்படி எல்லாம் இனிதாய் நடக்க என் வாழ்த்துக்கள். அப்புறம், அண்ணிக்கு சீக்கிரம் விசா கிடைச்சு, அங்கன வர நான் Uk high commisionகு ரெகமண்ட் செய்யறேன்..

நான் சொல்லியும் கேட்கலனா இந்த போட்டோவ காமிங்க! உங்க பவர் தெரியும்!






அப்புறம் இது சும்மா! பிறந்த நாள் ஸ்பெஷல். அண்ணி, என்னை அடிக்க கூடாது!



நம்ப அண்ணனுக்கு மீதி மூனு இடத்துல போட்டு இருக்கும் வாழ்த்து பதிவையும் பாருங்க!


ஒன்னு



இரெண்டு



மூனு



நாலு (இது தான்)



பின்ன K 4 K <-- இதுல 4 சும்மாவா இருக்கு :) அதுக்கும் காரணம் இருக்குல! அண்ணனுக்கு ஒன்னுனா அவரு தனி ஆளு... இல்ல இல்ல இல்ல இல்ல! நாலு பேரு ..நாலு பேரு ..நாலு பேரு ..நாலு பேரு! யாருப்பா அது நாலு ட்ரீட் கேட்கிறது! நம்ம G3 யக்கா சாயல்ல இருக்கே.... அதுவும் நாலு நட்சத்திர ஹோட்டல்ல வேணுமா? (அட... நான் எடுத்து கொடுக்கல...) எல்லாரும் சொன்னாப்ல செய்திடுங்கப்பு! வர்ட்டா!

Monday, February 04, 2008

மனிதனுக்குள்..

சரி.. மனிதனுக்கு பல குணம் உண்டு.. அதில் சில அலசல்...
முதல்ல Prey மற்றும் Predator behaviour in humans...

Brucelee ஒரு படத்தில சொல்லுவார், எல்லா சண்டைக்கும் மிக எளிதாக வெல்லும் வழி ஒன்று உண்டு. அது தான் சண்டையை தவிர்ப்பது. The Better you are at avoiding problems and unnecessary fights, the higher your survival rate. நம்ம எல்லாருக்கும், ஏதெனும் ஒரு சமயம் இந்த இரெண்டு பக்கமும் நிற்க வேண்டி இருக்குது. சில பிரச்சனைகளில் we behave like preys. சில சந்தர்ப்பங்களில் we behave as predators.


சாது மிருகங்கள்ல இரெண்டு வகை. ஒன்னு, முயல் மாதிரி.. இவை ஒளிந்து கொள்வதால் தப்பிப்பவை. இதை போன்ற மனிதர்கள், மத்தவங்க கண்ணுல படாம இருந்து தப்பிப்பவங்க.
Like they avoid getting in line with authoritative figures..

இன்னொன்னு, மான் மாதிரி. ஒரு மான் அல்லது அப்படி சாதுவான மிருகங்கள் எப்படி சிங்கம், புலி போன்ற கொடுமிருகங்களுக்கு இறையாகாமல் தப்பிக்கும்? வேகமாய் ஓடும்.. ஆனா அது predator அதை துரத்தும் பொழுது. முக்கியமான அம்சம்.. கூட்டமாய் இருப்பது. எப்படி நூறு மான்களில் ஒன்றை மட்டும் அந்த சிங்கம் துரத்துது. Their aim is to merge in the crowd. சிங்கம் அல்லது புலி, ஒரு மிருகத்தை என தேர்ந்தெடுத்து தான் துறத்தும். வரிகுதிரைகள் உருவானது evolutionல அப்படி தான். கூட்டமா வரிக்குதிரைகள் நிற்கும் பொழுது, தனியா ஒன்றை தேர்ந்தெடுப்பது, கஷ்டம். எல்லாம் ஒரே மாதிரி blend ஆகி நிற்கும். இப்படிபட்ட நபர்கள், கூட்டத்தில் இருப்பதால் தப்பிப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் எது பெரிய கூட்டமோ, அதில் போய் ஒளிந்து கொள்ளுவார்கள். Numbers is their strength.

நமக்கும் வாழ்க்கையில் அப்படி தான். சில நேரம், கூட்டத்தில் ஒன்றாய் இருப்பது.. ஒரு safety. எல்லாரையும் போல ஆடை அணியனும்... Be a Roman when you are in rome ..போன்றவை அதுனால தான். எந்த இடத்திலும், முக்கியமாக குழந்தைகளும், பெண்களும் "தனியா தெரியற" மாதிரி ஆடை அணிவதை, நகை போடுவதை தவிர்க்கனும்.. இது சமூகத்தின் மோசமான மனிதர்களிடம் இருந்து அவர்களை காப்பபற்றலாம். Obviously, this is not possible all the time.

அடுத்து, predators. இதே மாதிரி தான் இரெண்டு வகை. கூட்டமாய் வேட்டமாடும் விலங்குகள். ஒநாய் மாதிரி. இந்த வகை மனிதர்கள், தனியா இருந்தா, குனிந்த தலை நிமிறாம அமைதியா இருப்பாங்க. ஆனா, கூட்டம் சேர்ந்தா... (சில பொண்ணுங்க தனியா இருந்தா, அமைதியா சீன் போடுறதும், கூட்டமா சேர்ந்தா, தவறி அந்த பக்கம் வரும் பாவ பட்ட பசங்களை கலாய்ப்பதும்..ஹிஹி)

இரெண்டாவது வகை.. புலி மாதிரி. தனியா சிங்கிலா வரும் சிங்கங்கள். (Technically, பெண் சிங்கங்கள் கூட்டமாகவும், ஆண் சிங்கங்கள், pride கிடைக்கும் வரை, தனியாகவும் வேட்டை ஆடும்)

அடுத்த மேட்டர்.. பொதுவா. மனிதர்களில் மூன்று வகை.. Leaders (தலைவர்கள்), Followers (தொண்டர்கள்), Loners (தனியா இருப்பவங்க). இதுல நீங்க எதுனு தெரிஞ்சுகனுமா? ஈஸி.
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.

1. உங்களுக்கு காலேஜ்ல, ஸ்கூல்ல ஒரு தனி "நண்பர்கள்" செட் உங்களை சுத்தி இருந்தது.
2. நீங்க காலேஜ்/ஸ்கூல்ல ஒரு 'நண்பர்கள்" செட்ல இருந்தீங்க.
3. உங்களுக்கு நண்பர்கள் தான் உண்டு.. செட் எல்லாம் இல்லை.

பதில வைச்சு உங்களுக்கே, எது எதுக்குனு தெரிஞ்சு இருக்கும்..
இப்போதைக்கு இவ்ளோ தானுங்க! (இதுக்கே தாங்கல... இரத்தம் வருதுனு யாரோ சொல்லறாங்க) ... வர்ட்டா!

Friday, February 01, 2008

(அழகிய கவிதை - 1) விழியெழுத்து

மு.கு: சொன்ன மாதிரி புதிய கவிதை தொடர். 'அழகிய கவிதை" அப்படினு தொடருக்கு பெயர் வைக்கலாம்னு இருக்கேன்.. என்ன சொல்லறீங்க?



நீ அழைப்பதற்காகவே
தவம் கிடப்பது
நானும் என் தொலைபேசியும்..
யாரை அழைக்க போகின்றாய் முதலில்?

பெயர் தெரியாத பூக்களை
பார்க்கும் போதெல்லாம்..
பெயர் வைக்காத
நம் காதல்
நியாபகம் வருகின்றது..





நமக்குள்..
அழகிய கவிதை
சொல்வதாய் போட்டி..
நான்..
ஏதோதோ நினைத்து
வார்த்தைகளை தேடி பிடித்து
சொல்லி முடிக்க..
நீயோ..
உன் சிறு புன்னகையில்
பரிசை தட்டி செல்கிறாய்..



தேவன்
நம் தலையில் எழுதுவது
தலையெழுத்து..
தேவதை நீ
உன் விழியில் எழுதியது
விழியெழுத்து..

உன் செல்ல கோபங்களில்
கறையாத
என் பிடிவாதங்களை தேடி
முடிவில்லா
ஒரு பயணத்தில் நான்..



எந்த கவிதை அழகென்று
என்னை கேட்கின்றாய்..
உன் விழிக்கவிதையா
உன் இதழ்க்கவிதையா...
ரசிப்பதை தவிற
வேறொன்றும் அறியாத
நடுவராய் நான்.

விட்டுக்கொடுக்க சொல்கின்றாய்..
நானும் அதை தானடி செய்கின்றேன்..
என்னை விட்டு.. உன்னிடம் கொடுக்கின்றேன்..