மறந்து போ என் மனமே...
மு.கு: மக்களே.. எச்சரிக்கை. இன்னைக்கு நான் ரொம்ப யோசிச்சிட்டு இருக்கேன்.. சில நாளுல, நமக்குள்ள இருக்கும் சின்ன சின்ன வலிகள்.. நம்ம இதுவரை மறைத்து வைத்தது வெளிய ஒரேயடியா வந்து நம்மளா தொல்லை பண்ணும்.. அப்படி ஒரு நாளில எழுதறேன்..
நம்ம சமுதாயத்தில, ஜெயித்த காதல விட, தோற்ற காதலுக்கு அதிக மரியாதை செய்யறோம்! காதலர் சின்னமா நம்ம கருதுவது ஒரு கல்லறைய.. காதலர்கள் என்று சொன்னவுடன் நமக்கு நியாபகம் வருவது romeo&juliet மற்றும் பலர் - காதல்ல தோற்று(?) உயிர விட்டவங்க.. காதல்ல தோற்றவங்க சிலர் ஒரு பக்கம் தங்க வலிய மறக்க காதலை குற்றப்படுத்தி, இன்னும் சிலர் காதலை மறுத்து,சிலர் அதை கொச்சை படுத்தி, சிலர் காதலை "உடல் அழிகின்ற காதல் அழிவதில்லை" என்று வாழ்க்கையை முடித்து காதலை ஜெயிக்க வைக்க முட்டாள்தனமான முடிவுகள் எடுத்து அழித்து கொண்டு.... ஏன் இப்படி?
வாழ்க்கை காதலை விழுங்கி விடுதோ?
உண்மையில காதலுக்காக உயிர விடுபவர்கள் என்று பார்த்தீங்கனா,அதுல நிறைய பேரு சுயநலத்துக்காக செய்பவர்கள்.. வாழ்க்கையின் எதிர்ப்புகளை சமாளிக்க தெரியாதவர்கள்..
வாழத் தெரியாதவர்கள். ஆனா இன்னும் சிலர்.. காதலை ஒரு ideal ஆ வெச்சு, அதுக்காக உயிர விடுவாங்களா! என்னால நம்ப முடியல! நம்ம எல்லாம் அப்படி ஒரு வேளை வந்தா ஒரு நாலு பேரை போட்டு வேணா தள்ளுவோம் ;)
என்னோட பெரியப்பா பையன், தன்னோட காதலிய வீட்டுல ஜாதி பார்த்து (மற்றும் பல காரணங்கள்) ஒதுக்கியத எதிர்க்காம, அம்மாபிள்ளையா வேற ஒருவரை கல்யாணம் செய்தான் என்று அன்னையில் இருந்து அவனிடம் பேசுவதில்லை நான்! இப்ப நம்ம நிலைமையே அப்படி ஆயிடுச்சு! (இனிமே தனியா நம்ம கிட்டயே பேசக் கூடாதுல! எழுதி காமிக்கணும் :D)
எனக்கு தெரிஞ்சு காதல் அழகா ஜெயிக்கும் ஒரே இடம் .. சினிமா தான்! அங்க மட்டும் நம்மாளுங்க hero வும், heroine உம் சேரணும் என்று நினைப்பாங்க போல! நிஜத்தில பன்னு!
உண்மையில காதல்னா என்னங்க? இருவர் சேர்ந்து வாழ்வதா? அது கல்யாணமில்ல? ஒரு தலை காதல்.. காதலா? இல்ல ஒருத்தருக்காக நம்ம உயிர கொடுப்பதா? அது தியாகம் தான!
சேர்ந்து வாழ்வதால ஒரு காதல் ஜெயிக்குமா? முதல்ல காதல் என்ன விளையாட்டா? ஜெயிக்க.. தோற்க்க? யாரையாச்சும் "நீ அன்புல தோத்துட்ட" அப்படினு சொல்லுவோமா? அப்புறம் காதலுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கேள்வி?
காதல் என்பது தெய்வீக உணர்வு என்று கதை எல்லாம் நான் சொல்ல வரலை! (அப்ப என்ன தாண்டா சொல்ல வர? என்று நீங்க உறுமுவது எனக்கு கேட்குது.. தெரிஞ்சா சொல்லிட மாட்டேனா!)
தன் காதலுக்காக உயிரை விட்ட காதல், காதலுக்காக பெற்றோரை துறந்த காதல், காதலிக்காக காதலையே தியாகம் செய்த காதல், காதலுக்காக இறுதி வரை கல்யாணம் செய்துக்காத காதல், சந்தர்ப்ப சூழ்நிலகளால் சொல்லாத காதல் என் பல! இதில் எதுங்க பெரிய காதல்? காதலில் பெரிய காதல், சிறிய காதல் உண்டா? Is it a Quantifiable emotion?
I had the feeling of invinvcibility that every youth has. ஒரு நாள் மஹாபாரதம் புரட்டிட்டு இருந்தேன்.. அப்போ அதுல ஒரு இடத்துல... கடசில.. கிருஷ்ணர் இறந்து போகும் போது, அர்ஜுனன் அவர் ஊருக்கு போய் அங்குள்ள பெண்களை, குழந்தைகளை அவரு ஊருக்கு கூட்டிட்டு போவாரு.. (கிருஷ்ணர் ஊரு தண்ணில முங்கும்ல.. அதனால).. அப்படி போகும் போது எதிர்ல திடீர்னு வழிக்கொள்ளையர்கள் வருவாங்க! இவ்வளவு பேருக்கும் ஒரே ஆள் காவலுக்கு வ்ந்தத பாத்து சிரிப்பாங்க. அர்ஜுனன் கோபமா அவ்ரோட காண்டீபத்த (அவரு வில்லு பேரு) தொடுக்க பார்த்தா அவரால முடியாது (வயசு ஆகி)
This was the first thing that shook my feelings of invincibility.
அப்புறம் எங்க பாட்டி இறந்தது. அதுவரை சாவுக்கு பயப்படாதவன், அதன்பிறகு பயந்தேன்.. என் சாவுக்கு அல்ல.. என்னை சுற்றி உள்ளவர்களைப் பற்றி. It makes me treasure every single second i spend with them. எவ்ளோ நாளா கூட இருந்தவங்களை எவ்ளோ எளிதா கொண்டுட்டு போயிடுது... அதையும் மறந்து நாம காலத்தின் கோலத்தில் எவ்ளோ சீக்கிரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பாக்கின்றோம்!
And then things like this ... they shake my foundation of invincibility a little bit.. slowly..
சரிங்க! இதோட நிறுத்திக்கிறேன்! நான் ஏதொ சொல்ல போறேன் என நினைத்தவர்கள் மன்னிக்க! எல்லா கேள்விகளுக்கும் எனக்கு விடை தெரியாது.. எல்லா பதிவுகளுக்கும் எனக்கு முடிவு தெரியாது!
காத்திருக்க வைக்குதடி
காதல் செய்ய சொல்லுதடி
கனவாக போன பின்னே
கண் திறக்க பண்ணுதடி
காலம் அதன் பெயராம்
காயம் பல பொய்யாம்
வாழ்க்கையும் கவிதகளாம்
விளங்கவில்லை கண்மணியே.....