Thursday, August 30, 2007

பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3

(On Sept 1st)


என்னடா எல்லாரும் பிறந்த நாளுக்கு கேக் போடுவாங்க.. எதுக்கு ஆகாயம்?
உலகித்தின் எல்லா இடத்திலும் இருக்கும் ஆகாயம் போல்,
உங்கள் வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கனும் என்பதற்காக தான் :)



எப்பவும் எல்லார்க்காகவும் வாழ்த்து பதிவு போடுறது நீங்க! So , இந்த பதிவு உங்களுக்கே டெடிக்கேட்டட்!

(இனி பொது தத்துவம்)
அப்புறம் ஆகாயம் மேட்டர் இன்னும் முடியல. சில சமயம், நாமளே வீட்டுக்குள்ள அடைந்து கிடந்து, ஆகாயம் இல்லனு நினைப்போம்.. வெளியில வந்தா கண்டிப்பா ஆகாயம் இருக்கும்.
ஆக, எந்த தருணத்திலும், சந்தோஷம் நீங்கள் காண காத்து இருக்கு....
கதவை திறந்தால் காற்று வரும்..
மனதை திறந்தால் மகிழ்ச்சி வரும் அப்படினு சொல்லிட்டு, நான் அப்பீட்டு!


G3 க்கு இன்னொரு சல்யூட். Wish you a very Happy Birthday (Advanced)

Thursday, August 23, 2007

அன்னை தெரஸா - தெரிவது என்ன?

முழுசா படிக்காம என்னை குற்றம் சொல்லாதீங்கப்பா!



Article reference : http://www.time.com/time/world/article/0,8599,1655415,00.html

இந்திய பத்திரிக்கைகளில் வந்ததானு தெரியல. அன்னை தெரஸாவும், அவரின் சேவையும், கடவுள் பக்தியும் அறியாதவர்கள் இந்தியாவில் இருப்பது கடினம்.

கடவுள் இருக்காரா என்பது, நமக்கெல்லாம் எப்படி பெரிய புதிரா இருக்கோ (சரி, atleast எனக்கு), அதே மாதிரி தான் இவங்களுக்கும் இருந்திருக்கு! கடைசி வரைக்கும்!! தன் கடவுள் நம்பிக்கையின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கிறார்கள்..

இதோ அவர் எழுதிய கடிதம்


"Lord, my God, who am I that You should forsake me? The Child of your Love — and now become as the most hated one — the one — You have thrown away as unwanted — unloved. I call, I cling, I want — and there is no One to answer — no One on Whom I can cling — no, No One. — Alone ... Where is my Faith — even deep down right in there is nothing, but emptiness & darkness — My God — how painful is this unknown pain — I have no Faith — I dare not utter the words & thoughts that crowd in my heart — & make me suffer untold agony.

So many unanswered questions live within me afraid to uncover them — because of the blasphemy — If there be God — please forgive me — When I try to raise my thoughts to Heaven — there is such convicting emptiness that those very thoughts return like sharp knives & hurt my very soul. — I am told God loves me — and yet the reality of darkness & coldness & emptiness is so great that nothing touches my soul. Did I make a mistake in surrendering blindly to the Call of the Sacred Heart?"


இது ஒரு சாம்பிள் கடிதம். இது போல தன் நம்பிக்கை பற்றி சந்தேகங்களை பல கடிதங்கள் எழுதியதாகவும், அதை வேளியே வெளியிடாமல், அழித்து விட வேண்டிக்கொண்டதாகவும் சொல்கின்றது அந்த article.


என்னடா இது? அப்படினு ஒரு நிமிஷம் முழிக்க தோணுது.
One Aggravated Assault every 34 seconds
One Property Crime every 3 seconds
One Violent Crime every 22 seconds
One Larceny Theft every 5 seconds
One Auto Theft every 27 seconds
One Burglary every 15 seconds
One Murder every 34 minutes
One Robbery every 1 minute
One Rape every 6 minutes
அப்படினு World Staatistics சொல்லுது. இதெல்லாம் நடக்கும் போது எங்கப்பா கடவுள்? ஏன் இவங்களை எல்லாம் காப்பாத்தல? (மேல உள்ளது சின்ன லிஸ்ட்.. இன்னும், பசினால சாகிறவங்க, suicide அப்படினு நிறைய இருக்குல!)

என்ன சொல்ல வர? கடவுள் இல்லைனா? அப்படினு கேட்கறீங்களா? அது தான் இல்லை!

காந்தி, நேரு முதல், அன்னை தெரஸா வரை, எல்லாரும் நம்மளை போன்ற சாதாரண மனிதர்கள் தான். இந்த மாதிரி சந்தேகங்கள் எல்லார்க்கும் எழும். அன்னைக்கு இவ்வளவு சந்தேகம் இருந்தாலும், ஏழைகளின் குரல்களுக்கு செவி கொடுத்து, அவர்களுக்காக பாடுபடாம இருந்தாங்களா? கடவுள் இருக்காரானு எனக்கே தெரியல, நாம எதுக்கு நல்லது செய்யனும்னா இருந்தாங்க? இல்லை. She at her core believed in goodness, believed in helping others. That makes her great. It is the perseverence, knowing the odds. It is the trait of not giving up.

கண்டிப்பா அவர்கள் canonize செய்யப்பட்டு, saint ஆக அங்கீகரீக்க படுவார்கள் என வேண்டிக்கொள்ளுவோம். எந்த கடவுள் கிட்ட வேண்டுகின்றோம் என்பது முக்கியமில்ல. நாம எவ்வளவு நம்பறோம்னு கூட முக்கியம் இல்லை! (சரி கொஞ்சம் hypocrisy என ஒத்துகிறேன், but, her acts win over her thoughts), என்ன செய்யறோம் என்பது தான் முக்கியம்.

And for the record, I am not a fan of religious conversions and personally consider them a killer of cultures. I am not in favour of preisthoods either, or foreign funded religious institutions or missionaries..But then, let us leave it fo a future post...

தினமும் பசியினால சாகிற ஏழைகள் மத்தியில், பதவிக்கும் பணத்துக்கும் அலையும் மற்றவர்கள் மத்தியில் வாழ்ந்த அன்னைக்கு இந்த சந்தேகங்கள் எதோ நியாபகப்படுத்துகின்றன. இதே போன்ற சந்தேகங்கள் இன்னொருத்தருக்கு வந்துச்சு. ஆனா அவர் ஞானம் பெற்று புத்தரானார்.

இதுல இன்னொரு பாடம், இதெல்லாம் பாத்தா, she is no different from one of us. Great People are not born! People raise to greatness by their actions. She rose and she deserves it.

அதே போல நம்மளாலும் முடியும். நன்முயற்சி மனிதரையும் தெய்வமாக்கும். இங்க இருந்து ஆரம்பிக்கலாமே..

Tuesday, August 14, 2007

காணவில்லை: சுதந்திரதேவி.

ச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
என முழங்கி வாங்கின சுதந்திரம்..
மிச்சமில்லை மிச்சமில்லை
மிச்சம் வைப்பதில்லையே
என கொள்ளை அடிக்குது ஒரு கூட்டம்..

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்றில் கிடைத்தது
கத்தி கதறி ரத்தம் சிந்தி
அர்த்த நெறியில் கிடக்குது

நாட்டு கொடியை
மறந்து விட்டு
கட்சிக் கொடிகள்
பறக்க..
தேசப்பாடல் பாடக்கூட
மதங்கள் தடை செய்ய..

காந்தி வாங்கி கொடுத்ததாம்
சுதந்திர நாள் மட்டும்..
சாந்தி தியேட்டரில் கூட்டம்
கொடி கட்டி பறக்குமாம்..

தனிமனித சுதந்திரம்
தனியே சென்று விட
பொது மனித அங்கீகாரம்
போதை ஏறி நடக்குது...

ஜாதியென்ன மதமென்ன
பண்பாடென்ன மொழியென்ன
ஆண்னென்ன பெண்னென்ன
எதில் பிடித்தாலும் வெறி தான்..

காதலர் பேச கூட
தாய் மொழியில் பேச கூட
தடை விதிக்கும்
கூட்டத்தில் காணாமல் போன சுதந்திரம்..

நம் கைக்கு எட்டிய சுதந்திரம்
போனது யார் வாய்க்கோ?


ஒட்டுங்கப்பா போஸ்டர..
கிடைத்தற்றிந்த அந்நாளே
அரசியலில் தொலைந்தவள்
மத ஜாதி சண்டைகளில்
வீழ்ந்து போய் மறந்தவள்
நம் வாழ்க்கை சோம்பலில்
மறந்து போய் கரைந்தவள்..
கிடைப்பாளா மீண்டும்?
காணவில்லை: சுதந்திரதேவி.

Monday, August 06, 2007

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.. உறவுத்திணை

ரொம்ப நெருக்கமா பழகிட்டு, உங்க நண்பன் அல்லது நண்பி கிட்ட இருந்து பிரிந்து, அடுத்த 5 வருஷம் அவங்களை பாக்க மாட்டோம் என்று தெரிந்து பிரிந்தா, என்ன பேசுவீங்க? அந்த கடைசி நிமிஷம்? மௌனமா?

இதயங்கள் புரிந்து விட்டால், மொழிகள் தேவை இல்லை, வலிகள் எங்கும் இல்லை.

ல்லா உறவுகளுமே சந்தோஷம் மட்டும் கொடுப்பதில்லை. துக்கம், துயரம், ஏமாற்றம் என கலந்து தான் வரும். அது தான் மனிதா இயல்பு. 10 வருஷமா உயிருக்கு உயிராய் காதலிச்சு கல்யாணம் பன்னி, டைவார்ஸ் ஆனவர்களும் இருக்காங்க. கல்யாணத்தப்ப தான் தன் வாழ்க்கை துணையின் முகத்தை முழுமையா பார்த்து, சந்தோஷமா இருக்கும் குடும்பங்களும் உண்டு.

நாம் ஒன்று நினைக்க, விதி/இறைவன்/ஏதோ ஒன்று வேறு மாதிரி தான் நினைக்கும்! "நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏன் எதற்கு?" அப்படினு சும்மாவா பாடினாங்க.

ன் காதலிக்கனும்.. ஏன் மனசுடையனும்? ஏன பழகனும்.. ஏன் பிரியனும்? இப்படி நிறைய பேர் மனசுல லேசா பயம் இருக்கும். நம்மை முழுமையாக emotionally dependent ஆக்க விடாத இந்த பயம் ரொம்ப நிதர்சனமானது. This fear, always enables us to hold a little of us back, not surrender us ultimately to another... to help us recover, in case the relationship fails.

இது நல்லதா? கெட்டதா? எல்லாத்தையும் போல இரண்டும் இல்ல. தேவையான அளவில் இந்த பயம் நம் நல்லதற்கு தான். புயல் அடிச்சு, விதைச்ச பயிர் நாசமாயிடும் என விவசாயி விதைக்காமல், உழைக்காமல் இருப்பதில்லை. நம்ம மலர்ந்தா, தன்னை செடியில் இருந்து வெட்டி சூடிக்கொள்ளுவார்கள் என ரோஜாக்கள் பூக்காமல் இருப்பதில்லை. உறவுகளும் அது போல தான். பயந்து கொண்டே நாம் இருந்தால் நாம் அப்படியே இருக்க வேண்டியது தான். Yes you are emotionally safe. But I, as a person, would rather take the risk of succeeding (not that i did).

பிரிவுக்கு பயந்து, ஒதுங்கி விட்டால், நட்பால் கிடைக்கும் அந்த சில நாள் சந்தோஷமும் இல்லாமல் போய் விடும்.. உண்மை தான், கடசில மனசு கஷ்டப்படும், But for the happiness earlier, I think it is worth it.

அதே மாதிரி, காதல் வெறும் காயம் என்பதும் இல்ல. தோற்ற காதலிலும், ஒரு தலைக்காதலிலும் கூட ஒரு சுகமும் இருக்கு. ஒரு வாழ்க்கைக்கான பாடம் இருக்கு. வலிகள் இருப்பது நிஜம் தான். ஆனால், வழிகள் கிடைப்பதும் நிஜம்.

வலிக்கு பயந்து, வழியில் போகாமல் இருந்தால், எப்பவும் அப்படியே தான் இருப்போம். அப்போ நமக்கும், சந்தோசம் துக்கம் உணராமல் இருக்கும் மரத்துக்கும் என்ன வித்தியாசம்?

எல்லாவற்றிர்க்குமே ஒரு விலை உண்டு. ஏதேனும் ஒன்றை விட்டுக்கொடுத்தால் தான், மற்றொன்றை அடைய முடியும். வருங்காலத்தில் நிகழப்போவதை நினைத்து பயந்து செயலற்று இருந்தா எப்படி?

Having said this, It depends and differs from person to person. Some are more risk-willing than others ;). (And i think they are the ones who lose big time or win big time). If you never try, even the most feasible is impossible.

Moderation, is what life needs most.. of all qualities.

அளவுக்கு மின்ஞினால் அமிர்தமும் நஞ்சு. மிக குறைவான அளவில், நஞ்சும் உயிர் காக்கும்!
எது அமிர்தம், அது நஞ்சு என பிரித்தறிவது மிக சுலபமல்ல.. But then, if everything is clear cute, where is the challenge.. huh?

என்னடா சொல்ல வர்ற என நீங்க எப்பவும் போல கேட்பதும்,
"சொல்றது சிவன்னாலும்
செஞ்சது மனுஷப்பய தான்"
அப்படினு சொல்லிட்டு, நான் முடிச்சுக்கிறேன்!