Sunday, April 29, 2007

நான் அவ(ள்/ன்) இல்லை!

மு.கு: ஒரு உண்மை கதை. ஒரு பட அலசல். சில கேள்விகள்..

நம்ம கதை ஹீரோ பெயரு ராஜ். இவர் அமெரிக்காவில இருக்கும் 3rd Generation இலங்கை தமிழர். இவர் இன்னைக்கு இந்தியாவில் - பொள்ளாச்சிக்கு செல்ல கிளம்புகின்றார். எதுக்கு? இவர் காதலியை பார்க்க. இவர் இதற்கு முன் அவளை பார்த்ததே இல்லை. அப்புறம் எப்படி காதலிச்சாங்க? கனவில் கடவுள் வந்து சொன்னாராம். ஹி ஹி.. அது எல்லாம் இல்ல. எல்லாம் Internet Chatting தான். 4 மாதமா பேசிக்கிறாங்க. அவள் பேரு ஜாஸ்மின். ஆரம்பத்தில் நட்பா பழகி, பின்ன பேசி, போடோ எக்ஸ்சேஞ் பன்னி.. இப்ப Internet காதலர்கள்.

இப்ப நம்ம ஹீரோ இந்தியா எதுக்கு போறாரு? அங்க ஜாஸ்மின் வீட்டுல கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காங்க என்று கேள்வி. அதுக்கு தான் இவரு போறாரு.

சென்னை விமான நிலையம்:
வருகிறேன் என்று சொன்ன ஜாஸ்மினை காணவில்லை. ராஜ்க்கு இங்கு வேறு யாரையும் தெரியாது. இரு வழியாக ரு ஹோட்டலில் ரூம் புக் செய்து, அப்புறம் ஜாஸ்மினுக்கு போன் செய்தால் மறுமுனையில் யாரும் எடுப்பாரில்லை. நள்ளிரவில் போன் கால். ஜாஸ்மினடமிருந்து. தன்னை வீட்டில் சிறை வைத்திருப்பதாகவும், தன்னால் வர முடியாமல் போனதன் காரணம் அது தான் எனவும் சொன்னாள். மேலும், தான் பொள்ளாச்சியிலிருந்து வர வேண்டுமானால், கொஞ்சம் பணம் தேவை என்றும் தனக்கு தெரிந்த ஒரு தோழியை நாளை அனுப்பி வைப்பதாகவும் சொன்னாள்.

தோழியும் வந்தாள். பணமும் கொடுத்தான். 3000$. பயனில்லை. இரண்டு நாள் கழித்து தனக்கு திருமணம் ஆகி விட்டது என்றும், மன்னிக்கும் படியும் இன்னொரு போன். அதன் பிறகு எவ்வளவு முயற்சித்தும் பயன் இல்லை. ஆகையால் ராஜ் மீண்டும் அமெரிக்காவுக்கே கிளம்பி சென்று விட்டான்.

இங்க தாங்க நாங்க வரோம். நம்ம பேரு சூர்யா! ராஜ் எனக்கு நண்பன்.. கொஞ்சம். காதலியை கைபிடிக்க சென்றவன் சோகக்கடலில் கவிழ்ந்து வந்தான். விவரங்கள் கேட்டேன். ஐயோ பாவம். சரி அவள் புகைபடம் இருக்கா என்று கேட்டேன். e-mail இல் காண்பித்தான்.



ஆமா நம்ம அஸினக்கா தாங்க. இத காண்பிச்சு யாரோ ஒருத்தர்/ஒருத்து ஜாஸ்மின் என்ற பெயரில்..மீதி கதை நான் சொல்ல வேண்டியது இல்லை. ஆம் இது ஒரு உண்மை சம்பவம்.












நான் அவன் இல்லை - இன்றைய சமுதாயம் பார்க்க வேண்டிய படம். பாட்டு சீன தவிர மீதி எல்லாம் பார்க்கின்ற மாதிரி தான் இருக்கு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள். அந்த படத்தில ஒரு வசனத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.



"இந்த பெண்கள் எல்லாம் ஏமாந்ததற்கு காரணம் இவர்கள் பேராசை இல்ல, லஞ்சம், மூட நம்பிக்கை... " என்பது போல வரும் ஒரு வசனம். பேராசை இதில் முக்கியமான பங்கு என்பது என் கருத்து. பேராசை இருக்கலாம் தப்பில்லை. ஆனால் முட்டாள்களுக்கு இருக்கு கூடாது. நாம் எல்லாருமே ஏதாவது ஒரு சமயத்தில் முட்டாளாகத்தான் இருக்கின்றோம்.

"என்று தனியும் எங்கள் சுதந்திரத் தாகம்..
என்று மாடியும் இந்த அடிமையின் மோகம்"
என்று அன்றே கேட்டான் ஒருத்தன். இன்னும் மோகமும் விட்ட பாடில்லை, சுதந்திரமும் வந்த பாடில்லை. இன்னமும் western மோகமும், மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாகவும் தான் இருக்கின்றோம்.

ஹேர் டை அடிச்சால் சுதந்திரம் எனவும், கிழிந்த பேண்ட் போட்டால் பேஷன் எனவும் நினைப்பவர்கள் இருக்கத்தானே செய்கின்றார்கள்!

வாயில் இருந்து லிங்கம் எடுக்கிறவன், தலை முடிய புதர் மாதிரி வைத்து ஊர ஏமாத்திறவன், கட்டி பிடிச்சு பக்தி மார்க்கத்த வளர்க்கின்றவர்கள் என ஏகப்பட்ட சாமியார்களை நம்ம மக்கள் நம்பிகிட்டு தான் இருக்காங்க... இவர்கள் என்றைக்கு தங்களை நம்ப ஆரம்பிக்க போகின்றார்கள்?

"என்று திருந்தும் என் தமிழனின் நெஞ்சம்?"

Thursday, April 26, 2007

விளக்கம்...

போன பதிவுல போட்ட கவிதைக்கு பலர் விளக்கம் கேட்டி இருக்காங்க. அதில் சில மட்டும்..
இதுல என்ன விஷயம் என்றால், கவிதையா எழுதினால் விரசமில்லாம இருக்கும் பல விளக்கமெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சா.. ஒரு மாதிரி இருக்கும்.. So let me try to say w/o any such thing...

இத படிச்ச பின்னும் புரியலனா நான் பொருப்பு இல்லப்பா ;)

1. இரவெல்லாம்
பகல் தேடும் நிலவு உனது..
வழியெல்லாம்
உனை தேடும் விழிகள் எனது..


விளக்கம்: இரவு மட்டும் இருந்துவிட்டு பகலை தொலைக்கும் நிலவு போல, அவனை தொலைக்கின்றாள் அவள்..
மேகங்கள் மறைத்தாலும் நிலவை தேடுவது போல - அவன், அவளை தேடுகின்றான்..

2.இதழெல்லாம்
பூக்கும் புன்னகை உனது..
மலரெல்லாம்
மொய்க்கும் மறதி எனது..


விளக்கம்: புன்னகையாக பூத்தவளை பூக்களிலே தேடுகின்றான் அவன். Or in other words, He flirts with other women whenever he sees a reflection of her in that person even hough it is not the same. அது தான் 'மறதி"

3.இசையெல்லாம்
இரைந்து கிடக்கும் ஸ்வரங்கள் உனது...
பூமியெங்கும்
விளைந்து இருக்கும் மூங்கில் எனது..


இது easy. இசை - புல்லாங்குழல் - மூங்கில் - இது தான் சம்பந்தம். ;)

இதுக்கு கமெண்ட் எல்லாம் கிடையாது! ஏனா இது பதிவு இல்ல ;)) அப்ப என்னனு உங்களால கேட்க முடியாது :P

Monday, April 23, 2007

தேவதை கனவுகள்..

இதறகு முந்தைய பகுதி - தேவதை ஊர்வலம்



ரவெல்லாம்
பகல் தேடும் நிலவு உனது..
ழியெல்லாம்
உனை தேடும் விழிகள் எனது..




தழெல்லாம்
பூக்கும் புன்னகை உனது..
லரெல்லாம்
மொய்க்கும் மறதி எனது..







சையெல்லாம்
இரைந்து கிடக்கும் ஸ்வரங்கள் உனது...
பூமியெங்கும்
விளைந்து இருக்கும் மூங்கில் எனது..




டியெல்லாம்
மலர்ந்து வரும் மேகம் உனது..
பூவெல்லாம்
வெடித்து திறக்கும் பேரொலி எனது..






மையெல்லாம்
திறந்து வரும் கண்ணீர் உனது..
லியெல்லாம்
கடந்து வரும் சிரிப்பு எனது..



தயமெல்லாம்
தொலைத்து விட்ட காதல் உனது..
னதெல்லாம்
மறத்து விட்ட கடமை எனது..




தோ
அர்த்தம் தொலைத்த கவிதைகள் உனது..
விழித்தும்
கலைய மறுக்கும் கனவுகள் எனது..
தேவதை கனவுகள்..

Sunday, April 15, 2007

காதல் இருக்கும் பயத்தினில் தான்...

மீண்டும் காதல் பத்தி.

மு.கு:நான் ஒரு பால்ல சொன்னாலும், நான் சொல்லுவது எல்லாம் இரு பாலுக்கும் பொருந்தும்.

காதல் புனிதமானதா? காதல் பொழுதுபோக்கா? காதல் வெறும் ஆசையா, ஈர்ப்பா? பெண்(ஆண்)களை ஏமாற்றும் வித்தையா? இதில் எதுங்க காதல்?

காதல் ஒரு உணர்வு. அதை மேல் சொன்ன சில மற்றும் பலதாக நாம் உபயோகப்படுத்தலாம்.
கல் என்பவர்க்கு கல். கடவுள் என்பவர்க்கு கடவுள். அது மாதிரி தான் இதுவும். விடை காதலில் இல்லை. உங்களில் இருப்பது. புனிதம் என்பவர்க்கு காதல் புனிதம் தான். விளையாட்டு என்பவர்க்கு காதல் விளையாட்டு தான்.

காதல் பத்தி வரும் சினிமாக்களை குறை சொல்லும் முன்.. சற்றே யோசியுங்கள்.. ஆம் Cinema love is impractical and laughable at..but that doesnt excuse you from being disloyal to love. சினிமாக்கள் காதலை புனிதமாக மட்டும் காண்பிப்பதில் இல்லை தவறு. மனிதர்களின் வித்தியாசங்க்களை கணக்கில் எடுக்காமல், எல்லாரும் காதல் செய்வது இப்படி தான் செய்யனும் என்று சொல்ல வருவதில்(?) இருக்குது. முடிந்தால் காதல் சேர்வது.. இல்லை என்றால் வாழ்க்கை தொடர்வது தவறா? என்னை கேட்டால் தவறு. உங்களுக்கு இருக்க தேவை இல்லை. தெரிந்தும் சில தவறுகள் வாழ்க்கையில் நடக்கத்தான் செய்கின்றன. மனசு வலிக்கத்தான் செய்கின்றது. 'சரி', 'தவறு' எனபதே பார்வைக்கு பார்வை மாறுவடுவது தானே!

எல்லாரும் நினைப்பது போல் காதல் வருவது கஷ்டம் இல்லை. வந்த பின் தான் கஷ்டம்.
சிம்புவ எனக்கு பிடிக்காது. ஆனாலும் இந்த கருத்தை நான் ஒத்துக்கொள்கின்றேன். ஒரு பொண்ணை உன்மையிலே நாம காதலிச்சா, அந்த பொண்ணு வேற யாரையும் காதலிக்கலனா, கண்டிப்பா நம்ம காதலை ஏத்துப்பா. இது உலக நியதி. இதில் அழகு முக்கியமல்ல. காதல் அளவு முக்கியம். நம்ம காதலை என்னவா நினைக்கின்றோம் என்பது முக்கியம்.

ஆண் பெண் இடையேயான உறவு என்பது ஒரு நெருப்பு மாதிரி. நாம அதில் குளிர் காய பயன்படுத்தலாம். I mean a fleeting relation, which we indulge knowing we will not be in it for ever. For eg; Flirting is one such. இதுக்கு நமக்கு முன்னே இதுல யாரு குளிர் காய்ந்தா என தெரிய வேண்டியது இல்லை. இதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என யோசிக்க வேண்டியது இல்லை. நம்ம வேலை முடிந்ததும் போய்கிட்டே இருக்கலாம்.
இது வேற ஒருத்தருக்கு தப்பா சரியா என்பதை சொல்லும் தகுதி எனக்கில்லை... உண்மையில்.. யாருக்கும் இல்லை. அதே உறவு நாம பண்ணுற யாக நெருப்பா இருக்கலாம். மரியாதை செய்து, தியாகம் செய்து அதை நமதாக்கலாம். (உடனே நம்ம சச்சின், அப்ப பல யாகம் செய்தா என்று எல்லாம் கேட்கபடாது சொல்லிட்டேன் :P). எதாச்சும் ஒன்னு வேணும்னா, ஏதாச்சும் ஒன்றை தியாகம் செய்யனும். எது முக்கியம் என்பது நம்மளை பொறுத்தது.

இப்ப நம்ம காதல் யானை கதை பத்தி. இதை ஹேமா சார்பா சொல்லி, தீபக் சார்பா ஒன்னுமே சொல்லாம விட்டுட்டாங்க என்பது என் சிறு சந்தேகம்.(ப்ரியா சண்டைக்கு வராதீங்க.. முழுசா நடந்தது எனக்கு தெரியாது.. அதனால..) யாருமே காதலை கை விடுவோம் என்னும் எண்ணத்தில் காதல் செய்வதில்லை. ஏன் எல்லா தோற்ற காதலுக்கும் ஆணே பொறுப்பேற்க வேண்டும்?

முதல்ல புரிய வேண்டிய விஷயம், பெண்கள் போல ஆண்கள் யோசிப்பதில்லை. சிறு சிறு காயங்களுக்கும் அழும் பெண், லேசான காற்றுக்கு அசையும் புல்லை போல. புயல் அவர்களை பாதிக்காது. ஆனால் சிறு காயங்களை எல்லாம் எளிதாக தாங்கிக்கொள்ளும் ஆண் ego, is felled bye a emotional hurricane. He just cannot survive it. புரிந்து கொள்ளுதலும், ஜெயிக்கனும் என்ற எண்ணமும் இருந்தால், எந்த காதலும் தோற்காது. காதலை நம்ம கொன்று விட்டு, காதலையே குற்றம் சொல்லுவது சரியா?

நம்ம பொற்கொடி சொன்னாப்ல, ப்ரியா சொன்னாப்ல மோசமான ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இல்லை என சொல்ல வில்லை. ஆனால் அதே சமயம் மோசமான பெண்களும் இருக்கின்றார்கள் இல்லையா? character of a person is not dependent on the sex. but on the person, their experience, their beliefs.

இப்ப என்ன சொல்ல வர்ற என்று கேட்பது புரியுது. நான் முடிவுரை சொல்பவனல்ல. பயணத்திற்கு தயார் செய்பவன். முடிவுரை உங்கள் கையில். (இப்படி ஒரு பிட்ட போட்டு எதுவுமே சொல்லாம எஸ்கேப்பு!)

இதை எல்லாம் சொன்னாலும், இதை எல்லாம் சொல்ல உனக்கு என்ன அறுகதை இருக்கு என்ற இரு சிறு கேள்வி என் மனதிற்குள் முள்ளாக. ஜெயித்தவன் மறந்திடுவான். தோற்றவன் மறக்க மாட்டான்... ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு பாடம் ஒரு வாழ்க்கை..ஒவ்வொரு தோல்வியிலும் பல பாடம். பல வாழ்க்கை.

காதல் நிஜம். நம்ம?

Thursday, April 12, 2007

ஆஹா என்பார்கள்.. அடடா என்பார்கள்..

மு.கு: சின்ன பதிவு தாங்க! அதாவது நான் எப்பவும் போடும் மொக்கையோட கம்பேர் செய்கையில் ;)

ஆறு அழகு! இது தான் இந்த Tag தலைப்பு! நம்ம CVR tag பண்ணி விட்டாரு. முதல்ல easy ஆன தலைப்பா இருந்தாலும், இவர், கார்த்தி, டுபுக்குடிசைப்பிள் இவங்க இதே தலைப்புல எழுதின ஆறில் தமிழ், குழந்தை, இயற்க்கை, முருகன், புன்னகை, அம்மா... என பல ஐடம்கள் சிக்கிவிட்டன. என்ன பன்ன?

அழகு என்பதை பத்தி யோசிச்சா, அது நமக்கு வெளியில இருப்பது இல்ல. நம்ம தான் எல்லாத்துக்கும் உன்மையில் அழகு கொடுக்கின்றோம். நம்ம உள்ள எவ்ளொ அழகோ அதுக்கு தகுந்தாப்ல நம்ம வெளியுலகம் அழகு. அழகான பொருட்கள் இல்லாத நாள், காணாத நாள், நாம அழகு இல்லாத நாட்கள்.

சரி அழகு என்று சொன்னதும் நியாபகம் வருவது எது

1. தமிழ்.
ஏற்கனவே பலர் சொன்னாலும் அழகுனா தமிழ் தான்.

உயிர் கொடுத்த தாய்க்கும்
குரல் கொடுத்த தாய் இவள்..

என் இரெண்டாம் தாய்..
என் முதல் காதலி..

2. அம்மா.
இதுக்கு விளக்கமே தேவையில்லை!

மூன்றெழுத்து கடவுள்
மூன்றெழுத்து கவிதை..

வணங்கும் சாமி எல்லாம்
கனவிலும் வர மறுக்கையில்
வணங்க மறந்த பலருக்கும் கூட
வந்து போகும் சாமி இவள்..

3. மழலை பேச்சு
யாழினிது குழலினிது என்பர் அறியார் இவர்தம்
மழலை சொல் கேளாதவர்
அப்படினு வள்ளுவர் சொல்லி இருக்காரு. (குறள் முழுசா நியாபகம் இல்ல.. ஆனா கருத்து இது தான்)

அவரோட நல்லா சொல்ல முடியாது என்பதால இதுக்கு கவித இல்ல ;)

4. வாழ்க்கை
காலையில் எழுவதில் இருந்து, வெளிய அடிக்கும் குளிர் வரை...

சின்னஞ் சிறு குருவியும்
கரு விழிக் காதலியும்

சுட்டெரியும் சூரியனும்
சுமையில்லா நிலவொலியும்

அத்தணையும் ஓரழகு
ஆள் கொல்லும் பேரழகு...

5. பொன்னுங்க
வயசுக்கோளாறு!

தொட்டால் சுடும்.. தொடாதே நெருப்பை
கட்டினால் பாடு.. ஆனாலும் கல்யாணம் ;)

6. உணர்வுகள் - காதல், நட்பு, பாசம், சோகம் என நம்மை மனிதனாக்குபவைகள்!

இதுக்கு எதுவும் தோணல மக்களே.. so உங்கல விட்டுடறேன்..


இத மூன்று பேருக்கு tag பண்ணனுமாம்!
1. முதல் கனவு - ரம்யா
2. எங்கள் அண்ணன் k4k
3. மயிலாடிய ராஜி
4. என்ன கொடுமை இது - Ace

இன்னும் சிலரை போட விருப்பம்.. ஆனா அவங்க எல்லாம் பிசியா வேற தொடர் எழுதறாங்க..So விட்டு விடுவோம். அப்புறம் எதுக்கு மூனுக்கு பதிலா நாலு பேரு என்று யோசிப்பவர்களுக்கு நம்மளை பத்தி தெரிஞ்சவர்கள் சொல்லிடுங்க ;)

நம்ம ப்ரியா சொன்ன காதல் யானை தொடர் பத்தியும், காதல் பத்தியும், தமிழ் புத்தாண்டுக்கும் நம்ம அடுத்த பதிவு இந்த வார weekendல! அதுவரை Njoy!

சிவாஜி கவுண்ட் டவுன் ஆரம்பம்:5

Monday, April 09, 2007

IT Companies -சரியா தவறா.. நிஜமா கதையா?

மொழியா மழையா.. கனவா உணர்வா ..விழியா விதையா... (என்னடா இது ஆரம்பத்திலேயே உளறுகின்றான் என்று பாக்கறீங்களா.. அது ஒரு flowல வந்திடுச்சு ;) )

மு.கு: இப்பதிவில் வரும் எதுவும் எல்லாருக்கும் பொருந்தாது. It is just a generalised version. So, :). I know especially you.. yes.. you are not in these. you are amazing :)

வெளி அழகு ஒரு பெண்ணுக்கு எவ்வளவு முக்கியமுங்க? there is a saying - you can get by the first 15 minutes with your good looks. the next 15 minutes with ur smartness. After that you either have character or you are thrown out என்று. என்னை பொருத்த வரை இது interviewல இருந்து வாழ்க்கையின் எல்லாத்துக்கும் பொருந்தும். ஆரம்ப தடங்கல்களை மீற சற்றே உதவும் வெளி அழகு. அவ்வளவே. இப்படி இருக்கும் போது எதுக்கு உலக அழகியா மதர் தெரசா வோ, இல்ல பொது நலப்பணியில் ஈடுபட்டு இருக்கும் எத்தணையோ ஆளுகளை எடுக்காம, மாடல்ச அறை குறை ஆடையில் அலைய விட்டு தேர்ந்தெடுக்கிறாங்க? (நமக்கு பாக்க நல்லா தான் இருக்கு.. இல்லனு சொல்லல ;) )

வரதட்சணை கொடுமைய அனுபவிச்ச எத்தணை பெண்கள் தங்கள் மருமகளிடம் ஒன்னும் கேட்காம இருக்காங்க? எனக்கு ஒரு சந்தேகம். தெருவுல அசிங்கமான postera கிழிப்பதில் காட்டும் ஆர்வத்தை ( அதை பாக்கிறவன் பாக்க தான் போறான்) பெண் சங்கங்கள் நமது இந்திய பெண்களின் அறிவை சிந்தனையை இது மாதிரி முக்கியமான இடங்களில் செலுத்த முயற்சி எடுக்காதது ஏன்?

ஏன் Hour glass figure மோகம் பிடித்து படித்த பெண்களும் அலைகின்றார்கள்? ஏன் பெண்கள் இன்னும் தங்களை விளம்பர பொருளா ஆண் பயன்படுத்தராங்க என்ற குற்றத்தை சுமத்துவதில் காட்டும் முனைப்பை, அப்படி காசுக்கு நடிப்பதும் பெண்கள் தான் என உணர்வதில் மறுக்கின்றார்கள்? (அது சரி, தவறு என்று நான் அதுவும் சொல்லல). இவர்களில் சிலர் இப்படி தான் இருப்பாங்களாம். ஆனால் ஒட்டு மொத்த ஆண் சமூகமும் திருந்தனும் என்னும் நினைப்பு எதற்கு? why is the male species of this planet bearing the sole responsibility for these! Agreed, once our societies were male chauvinistic. but now?

நான் +2 படிக்கும் போது நடந்த சம்பவம். எங்க english teacher ஒரு christian. ஒரு நாள் classல "பெண்கள் எல்லாம் எவ்வளவு முன்னேறினாலும், ஆண்களுக்கு கீழ தான்.. ஏனா பைபிளில் அப்படி தான் இருக்கு" என்று சொன்னார்கள். (இது அவங்க சொன்னது..இருக்கா இல்லாயா என்பது வேற விஷயம்). ஏன் இவர்களுக்கு இந்த மனப்பான்மை?

இதுக்கெல்லாம் காரணம் - ஆண் பெண் சமம் எனும் இப்பொதைய சிந்தனை தான். இப்படி யாருனா சொன்னா எனக்கு அவங்க மேல பரிதாபம் வரும்! ஆண் பெண் சமம் னா, ஆண் எதற்கு.. பெண் எதற்கு? ஆணுல் பெண்ணும் are like ying and yang. they are not equal. but they are made for each other. Each have their own strengths and weaknesses, which complements one another and fits nicely. ஆனா ஏன் இன்றைய பெண் சமுதாயம் இத உணராம, ஆண்கள் போல மாறினா நல்லது என நினைக்கின்றார்கள் என எனற்கு தெரியல. The development of human females as a society doesnt mean it has to emulate the path of the male counter part.

என்னடா ஏதோ கம்பெணி பத்தி சொல்லறேன் என்று சொல்லிட்டு ஒன்னுமே சொல்லல என்று தான் யோசிக்கறீங்க! ;) இது ஏப்ரல் பூல் விளையாட்டு.. ஆப்படியே எத்தணை பேரு பதிவ முழுசா படிக்காம, இத பத்தி கேட்கறாங்க என்று கண்டு பிடிக்க்கலாம்ல ;)


இது நான் பெண்கள் வேலைக்கு போறதையோ, astronaut ஆவதையோ எதிர்க்கும் எண்ணம் அறவே கிடையாது. I strongly believe the first step to female improvement is financial independence. I am talking about mentality and the way of development. And i oppose the continuing villainification of males. It is time women realises that part of the reason they are behind is themselves. Change doesnt occur with time. WE make changes over time. IF you wait for time to handle it, nothing will change.

சாக்குகள் பேசுகின்றாய்
கண்ணம்மா
சாக்குகள் எதுக்கடி?
ஆத்திரம் கொண்டவர்க்கே
கண்ணம்மா
தடை ஏதும் உண்டோயடி?

(எத்தணை முறை டா, பாரதியார் பாட்ட பிட் அடிச்சு மாத்தி மாத்தி போடுவ.. காதல் கவித னாலும் போடுற.. இதுக்கும் போடுற... அப்படினு நீங்க என் மேல கல்லெறிய ready ஆகறாப்ல தெரியுது ;) நான் பாரதி கவிதகள படிச்சிட்டு இருக்கனா... அது தவிர மனசுல எதுவும் நிக்கல அதான்)

ஜெயிக்கனும் என்னும் ஆசை எல்லாருக்கும் இருக்கு! ஆனால் எல்லாரும் ஜெயிப்ப்பதில்லை! ஏன்? ஜெயிக்க என்ன பண்ணனும், எங்க போகனும் என்று யாரும் யோசிப்பதில்லை. Where there is a will, there is a way. But you must still walk in it to reach somewhere!

இதெல்லாம் சொன்னது பெண்களுக்கு என்றாலும், கருத்துக்கள் எல்லாருக்கும் பொருந்தும். ஆகையால், பொண்ணுங்க எல்லாம் என்னை அடிக்க வர கூடாது. (அப்ப நம்மளும் சேர்ந்து போய் அடிப்போம் என்று பில்லு பரணியும் மற்ற சக தோழர்களும் திட்டம் தீட்டுறது கேட்குது!)

Sunday, April 01, 2007

தேவதை ஊர்வலம்..




மனசெல்லாம் கொண்டாட்டம்
ஜாதி மத பேதமின்றி
உன் விழி சந்தித்த விழா..

இன்றோடு முடிந்தது
எனற்கான வாழ்க்கை
இனி உனற்காக மட்டும்..

தேவதை கதைகளை எல்லாம்
நம்ப மறந்து விட்டு
உன்னை கண்டதும்
என்னை மறந்து விட்டேன்..


.



தொலைபேசியில்
நீ அழைத்ததும்
போனது என் உயிர்..

உன் உச்சரிப்பில்
பிறவிப் பயன்
என் பெயருக்கு..

என் பெயரின் மீது
இப்போழுது
எனக்கே பொறாமை!



.



உன் காதணி அழகு
ஒரு கவிஞனின் பிறப்பு..

உன் தலையசைப்பு புவி ஈர்ப்பு..
ஆப்பிள் என் இதயம்..
விளக்கம் சொல்ல நியூட்டன் எங்கே?

என் ஒரு கண்ணை குத்திவிட்டு
மறு கண்ணில் முத்தமிடுகின்றாய்
நான் அழுவதா? எரிவதா?



புதுக்கவிதையும் புரட்சியும் நீ
பாரதியும் தாசனும் நான்..

சுட்டும் சுடர் விழி தான் கண்ணம்மா
சீக்கிரம் சந்திரன் வரட்டும்..
சாத்திரம் பேசும் முன்னே கண்ணம்மா
சாவை கொடுத்து விடுடி எனற்கு..



நமது எல்லா சந்திப்புகளும்
உன் சிரிப்பினில் முடிகையில்..
எனது எல்லா கவிதைகளும்
எப்பொழுதும் சோகத்தில் முடியுது..

நீ என்னை பிரிந்து செல்கின்றாய்
நான் என்னை மறந்து காண்கின்றேன்..
நடப்பது..தேவதை ஊர்வலம்.

-----------------------------------------------------------------

பி.கு: என்னடா April 1st பதிவு போடுறானே என்று பார்க்கின்றீர்களா? போன வருஷம் ஏப்ரல் வரை ஒரு வேலை நான் முட்டாள் இல்லையோ என்ற ஒரு சந்தேகம். இந்த வருஷம், இல்ல,இது நமக்கான பண்டிகை தான் என்று சந்தேகம் இன்றி ஊர்ஜிதம்!

மிக விரைவில்...IT companies - திடுக்கிடும் உண்மைகள் - இது தான் நிஜ முகமா?