Saturday, March 01, 2008

கவிதைகளின் கவிதை (அழகிய கவிதை IV)

மு.கு: இதற்கு முந்தைய கவிதை பதிவுகள்
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே

குட்மார்னிங்..
உன்னை மாலை
பார்க்கும் பொழுது
சொன்னேன்..

"இப்ப குட்ஈவினிங் டா"
சிரிக்கிறாய் நீ..

உன்னை பார்க்கும்
பொழுது தான்
என் நாட்கள் விடியுமடி..
அப்படியானால்..
குட்மார்னிங் தானே...



ய்..
எனற்கு
ஒரு முத்தம் கொடுடி...

சீ... போடா..

எத்தணை முறை
கேட்டாலும்..
அள்ள அள்ள குறையாத
பேரூற்று போல...
உன் வெட்கம் மட்டும்.
இன்னும்
எவ்வளவு ஆழத்தில் முத்தம்?



"ன்னால
பத்து நிமிஷம் தான்
பேச முடியும்டா"
சொல்லிவிட்டு
நீ சென்றுவிட்டாய்..

அப்பொழுது ஆரம்பித்த
சண்டை...

நீ வந்து பேசும்
அந்த பத்து நிமிடங்களாக
தாம் இருந்திருக்க கூடாதா
என்று
சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன..
என் நாளின்
மீதி எல்லா பத்து நிமிடங்களும்.



தினமும் பிரியும் பொழுது
சண்டை போடுகின்றோம்..

அப்படியாவது
சில கணங்கள்
நீயின்றி வாழலாம்
என நினைக்கின்றேன் நான்..

மெதுவாக தான் புரிந்தது..
நடுப்பகலில்
வீட்டுக்குள் தாளிட்டு
ஒளிந்து கொண்டாலும்
மனதுக்குள் எட்டிப்பார்க்கும்
நிலவு நீ என...



"னி உங்களை
நீ வா போ..
என சொல்வதில்லை.."
நீ..

ஏன் தீடிரென்று அந்நியம்
என எனற்க்குள் எழும்
கோபமெல்லாவற்றையும்..

"..என்னங்க.. கோபமில்லையே.."
என கொன்றும் விடுகின்றாய்!



"னிமே எனக்கு
முத்தம் கொடுக்காதீங்க.."
கோபமாய் நீ..

"ஏன்? பிடிக்கவில்லையா?"
சந்தேகமாய் நான்...

முத்தத்தால்..
மனதில் வரும்
பக்க விளைவுகளில்
படிக்க முடிவதில்லை..

அடிப்பாதகி..
என் ஒற்றை முத்தத்திற்கே..
இப்படி சொல்கின்றாயே..
மொத்தமாய் என மனதிற்குள்
குதித்து நீ ஆடும் ஆட்டத்திற்கு
நான் என்ன சொல்ல?



காத்திருத்தல் தவம் என்றால்
காதல் வரம்..

இதயம் கோவில் என்றால்
அதில் நீ கர்ப்பகம்..

சிற்பம் கலை என்றால்
நீ அதற்கு உயிர் தரும் தேவதை...

இத்தணையும் கவிதை என்றால்
நீ கவிதைகளின் கவிதை

32 மறுமொழிகள்:

G3 said...

Nalla thaan jollara.. aana ponnu yaarunnu mattum solla maatengariyae raasa :P

CVR said...

//மெதுவாக தான் புரிந்தது..
நடுப்பகலில்
வீட்டுக்குள் தாளிட்டு
ஒளிந்து கொண்டாலும்
மனதுக்குள் எட்டிப்பார்க்கும்
நிலவு நீ என.../////

ஒவ்வொரு பதிவிலேயும் இந்த மாதிரி ஏதாச்சும் நச்சுன்னு போட்டு மனசை டச் பண்ணிடறபா!!

எப்பவும் போல படங்கள் ஜூப்பரு!!!
நடத்து நடத்து!!! B-)

ரசிகன் said...

//உன்னை பார்க்கும்
பொழுது தான்
என் நாட்கள் விடியுமடி..
அப்படியானால்..
குட்மார்னிங் தானே...//

கலக்கல்.. இந்த வரிகள்...:)

ரசிகன் said...

//G3 said...

Nalla thaan jollara.. aana ponnu yaarunnu mattum solla maatengariyae raasa :P//

ஹா..ஹா...:))))))

ரசிகன் said...

// CVR said...

//மெதுவாக தான் புரிந்தது..
நடுப்பகலில்
வீட்டுக்குள் தாளிட்டு
ஒளிந்து கொண்டாலும்
மனதுக்குள் எட்டிப்பார்க்கும்
நிலவு நீ என.../////

ஒவ்வொரு பதிவிலேயும் இந்த மாதிரி ஏதாச்சும் நச்சுன்னு போட்டு மனசை டச் பண்ணிடறபா!!

எப்பவும் போல படங்கள் ஜூப்பரு!!!
நடத்து நடத்து!!! B-)//

ரிப்பீட்டேய்ய்ய்ய்...

நவீன் ப்ரகாஷ் said...

என்ன கனவுக்காரரே... கவிதைகளில் குறும்பு கொஞ்சம் அதிஅழகாய் கொப்பளிக்கிறது...??? ;)))

அனைத்தும் அழகு !! :)))

கப்பி | Kappi said...

//Nalla thaan jollara.. aana ponnu yaarunnu mattum solla maatengariyae raasa :P//

repeaatttu :))

ஸ்ரீ said...

:) அழகு மாம்ஸ். ஐ மீன் ட்ரீம்ஸ்

Divya said...

கவிதை சூப்பரு!
வரிகள் அனைத்தும் அழகு!!

Anonymous said...

rendavathu photo.....ponnu peru therila....antha padam un kavithaiku porunthala pa, vera padam potudupa raasa:)

k4karthik said...

யாரு தம்பி அந்த மகராசி....?? சொன்னா சட்டுபுட்டுனு ஏற்பாடு பண்ணுவான் இந்த அண்ணன்....

Dreamzz said...

@Anony

இப்போ மாத்தியாச்சு.. ஓகேங்களா அனானி..

Anonymous said...

Asin looks cute in the pic:)

நன்றிபா dreamzz mams, சொன்னதும் ஃபோட்டோ மாத்திட்டே, நல்ல புள்ளைய இருக்கிறியேபா!!

இப்போத்தேன் உன் 'கவிதை' ரொம்ப அழகாக இருக்குது!!!

சாம் தாத்தா said...

உடம்பு சரியில்லைடா பேராண்டி.

சில நேரத்துல நினைச்சா என்னத்துக்கு இந்த வாழ்க்கைன்னு
தோணுது.

எப்படியோ காலம் வர வரைக்கும் ஓட்டியாவணுமே.

வந்துடுவேன்.

கொஞ்ச்ம் பொறுத்துக்கோ

சாம் தாத்தா said...

உன் கவிதை சும்மா ஜிவ்டா பேராண்டி.

என் பழைய காதல் நினைவுக்கு வந்து...
லேசா கண் கலங்குது.

நாம் நேசிப்பவை எல்லாம் நிரந்தரமில்லை.

நிரந்தரமானவற்றை
நாம் நேசிப்பதில்லை.

மனசெல்லாம் ஒரே இருட்டா இருக்கு.

சூரியன் இனி வர வாய்ப்பே இல்லை.

என் துக்கத்தை யாரிடம் சொல்ல.?

சொன்னாலும் என்ன பயன்.?

சாம் தாத்தா said...

என்னைய காணோம்னு
தேட பேரன் நீ ஒருத்தனாவது இருக்கியே.

ரொம்ப நன்றிடா கண்ணா...!

சாம் தாத்தா said...

இன்னும் ஒரு 10 நாள்ல உடம்பு சரியாகி..
வந்துடுவேன்னு..
நினைக்கிறேன்.

பார்க்கலாம்.

நிவிஷா..... said...

தேவதைகளின் கவிஞரே,
அழகிய கவிதை தொடர் அழகாயிருக்கு, Nice lines:))

natpodu
Nivisha

கோபிநாத் said...

\\G3 said...
Nalla thaan jollara.. aana ponnu yaarunnu mattum solla maatengariyae raasa :P\\

\\CVR said...
//மெதுவாக தான் புரிந்தது..
நடுப்பகலில்
வீட்டுக்குள் தாளிட்டு
ஒளிந்து கொண்டாலும்
மனதுக்குள் எட்டிப்பார்க்கும்
நிலவு நீ என.../////

ஒவ்வொரு பதிவிலேயும் இந்த மாதிரி ஏதாச்சும் நச்சுன்னு போட்டு மனசை டச் பண்ணிடறபா!!

எப்பவும் போல படங்கள் ஜூப்பரு!!!
நடத்து நடத்து!!! B-)\\


ரிப்பிட்டேய்ய்ய்

Dreamzz said...

@சாம் தாத்தா
//.. சாம் தாத்தா said...
என்னைய காணோம்னு
தேட பேரன் நீ ஒருத்தனாவது இருக்கியே.

ரொம்ப நன்றிடா கண்ணா...!

3/02/2008 12:48 PM


சாம் தாத்தா said...
இன்னும் ஒரு 10 நாள்ல உடம்பு சரியாகி..
வந்துடுவேன்னு..
நினைக்கிறேன்.

பார்க்கலாம்.
//

தாத்தா, சீக்கிரம் உடம்பு சரியாகி வர என் wishes :)

ரொம்ப கவலை பட்டுட்டு இருக்காதீங்க...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது :)

Dreamzz said...

@K4K, G3
//யாரு தம்பி அந்த மகராசி....?? சொன்னா சட்டுபுட்டுனு ஏற்பாடு பண்ணுவான் இந்த அண்ணன்....
//

யண்ணோவ், நீங்களும் இவுக கூட சேர்ந்து இப்படி ஆயிட்டேளா??

ஜி said...

:))))

டக்கர் கவிதைஸ்.... இன்னைக்கு எந்த பதிவ ஓபன் பண்ணாலும் எல்லாம் கவிதையா இருக்குது :))

Anonymous said...

\\என்னால
பத்து நிமிஷம் தான்
பேச முடியும்டா"
சொல்லிவிட்டு
நீ சென்றுவிட்டாய்..\\

10 நிமிஷத்துக்கப்புறம் ஊமையாகிடுவாளா?? இல்ல மெளனவிரதமா இருப்பாளா??

Anonymous said...

\\தினமும் பிரியும் பொழுது
சண்டை போடுகின்றோம்..\\

இனிமே சந்திப்பின் ஆரம்பத்துலயே சண்டை போட்டு பாருங்க...ஒரு சேஞ்சுக்கு!!

Anonymous said...

\\"..என்னங்க.. கோபமில்லையே.."
என கொன்றும் விடுகின்றாய்!\

அட....அட! ரொம்ப விபரமாதான்பா இருக்காளுங்க!!

Anonymous said...

\\மெதுவாக தான் புரிந்தது..
நடுப்பகலில்
வீட்டுக்குள் தாளிட்டு
ஒளிந்து கொண்டாலும்
மனதுக்குள் எட்டிப்பார்க்கும்
நிலவு நீ என...\\

என்னாத்துக்குபா பகலுலயேயும் இப்படி பயந்துக்குன்னு ஒளிஞ்சுக்கிற......பாரு நிலா கூட உன்னையத்தேடி உன் வீட்டுக்குள்ள வந்து எட்டிப்பார்க்குது!!

Anonymous said...

\\உன்னை பார்க்கும்
பொழுது தான்
என் நாட்கள் விடியுமடி..
அப்படியானால்..
குட்மார்னிங் தானே...\\

ஏன் இப்படி புழுகுறேபா ராசா.....????

Anonymous said...

\ஏய்..
எனற்கு
ஒரு முத்தம் கொடுடி...\

ஏய் எனக்கு ஒரு 'குச்சி முட்டாய்' கொடுன்னு கேட்குறாப்ல , சர்வசதாரனமா கேட்குறே!!!

நீ கேட்குறது முத்தம்பா, அது எப்படி கேட்கனும்னு கூட உனக்கு தெரியலியே......:)))

MyFriend said...

nice template. ;-)

MyFriend said...

கவிதைகளும் சூப்பர் as usual. ;-)

Unknown said...

/எத்தணை முறை
கேட்டாலும்..
அள்ள அள்ள குறையாத
பேரூற்று போல...
உன் வெட்கம் மட்டும்.
இன்னும்
எவ்வளவு ஆழத்தில் முத்தம்?/

ஆகா...ஆககா... அழகு!
எல்லாமே நல்லாருக்கு இது ரொம்ப பிடிச்சிருந்தது.

Shwetha Robert said...

Romantic nd naughty, nice:-)